ரசமலாய் தோத்துடும்! வீட்ல பன்னீர் இருக்கா? 10 நிமிஷத்துல இந்த பாயசம் செஞ்சு அசத்துங்க!

வழக்கமான சேமியா, ஜவ்வரிசிக்கு குட்பை சொல்லிவிட்டு, ரசமலாய் சுவையில் அசத்தும் கமகமக்கும் பன்னீர் பாயசம் வெறும் 15 நிமிடங்களில் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
paneer payasam பன்னீர் பாயசம்
paneer payasam பன்னீர் பாயசம்AI Image
Updated on

வீட்டில் ஏதாவது விசேஷம் அல்லது பண்டிகை என்றால், பெரும்பாலானூரின் வீடுகளில் பாயசம் நிச்சயம் இருக்கும். பொதுவாக சேமியா, ஜவ்வரிசி அல்லது பருப்பு வைத்துதான் பல வீடுகளில் இனிப்பு செய்வார்கள். ஆனால், எப்போதுமே ஒரே மாதிரியான சுவையைச் சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு, ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான ரெசிபி தான் இந்த பன்னீர் பாயசம். 

இது பார்ப்பதற்குப் பாயசம் போல இருந்தாலும், சாப்பிடும்போது நாவில் அப்படியே கரையும் ரசமலாய் சுவையைக் கொடுக்கும். ரெஸ்டாரண்ட்களில் அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த ரிச்சான இனிப்பு வகையை, நம் வீட்டில் உள்ள சில சாதாரண பொருட்களை வைத்தே வெறும் 15 நிமிடங்களில் மிக எளிதாகச் செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்:

  • துருவிய பன்னீர் - 1 கப்

  • காய்ச்சிய பால் - அரை லிட்டர்

  • சர்க்கரை - அரை கப்

  • கண்டன்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன் 

  • ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10

paneer payasam பன்னீர் பாயசம்
paneer payasam பன்னீர் பாயசம்

செய்முறை! 

முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காத கெட்டியான பாலை ஊற்றி, மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். பால் நன்றாகப் பொங்கி வந்ததும், அடுப்பை முற்றிலும் குறைந்த தீயில் வைத்து, பாலின் அளவு சற்று குறையும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பாலின் ஓரங்களில் படியும் ஆடையை எடுத்துப் பாலுக்குள்ளேயே விட்டு கிளறுங்கள். 

இதுதான் பாயசத்திற்கு நல்ல தடிமனான பதத்தைக் கொடுக்கும். பால் முக்கால் பதத்திற்குச் சுண்டி வந்ததும், அதில் சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கிளறி விடுங்கள்.

ரெசிபியில் கவனிக்க வேண்டிய முக்கியப் பகுதி இதுதான். பன்னீரை ரொம்பவும் மாவு போலப் பிசையாமல், லேசாக உதிரியாகத் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் சர்க்கரை கலவை நன்றாகக் கொதித்து வரும்போது, துருவிய பன்னீரை மெதுவாக அதில் சேர்க்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
சப்பாத்திக்கு தொட்டுக்க எதுவுமே வேண்டாமா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!
paneer payasam பன்னீர் பாயசம்

பன்னீர் சேர்த்த பிறகு அடுப்பை அதிக தீயில் வைக்கக் கூடாது. மிதமான தீயில் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் வரை மட்டுமே கொதிக்க விட வேண்டும். அப்போதுதான் பன்னீர் ரப்பர்போல மாறாமல், பாலின் இனிப்பை முழுமையாக உறிஞ்சி மிகவும் மிருதுவாக மாறும்.

பன்னீர் பாலோடு சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும், பாலில் ஊறவைத்த குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறவும். இப்போது ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவைப் பொன்னிறமாக வறுத்து, பாயசத்தின் மேல் கொட்டி அடுப்பை அணைத்துவிடுங்கள். 

அவ்வளவுதான், வீடு முழுவதும் நெய் மற்றும் ஏலக்காய் மணக்கும் சுவையான பன்னீர் பாயசம் தயார். இதைச் சுடச்சுடச் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும், அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிட்டால் அசல் ரசமலாய் சாப்பிடுவது போலவே தேவாமிர்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வழக்கமான பாலக் பன்னீர் போர் அடிச்சிருச்சா? அப்போ இந்த புதுமையான ரெசிபியை ட்ரை பண்ணுங்க!
paneer payasam பன்னீர் பாயசம்

உடனே போய் இந்த அட்டகாசமான ரெசிபியை முயற்சி செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com