கம – கம ‘கட்டா – மிட்டா டேஸ்ட்டி சட்னி’!

கட்டா – மிட்டா  சட்னி...
கட்டா – மிட்டா சட்னி...www.youtube.com
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

தேவை: பேரீச்சம் பழம் – 8 (கொட்டை நீக்கியது), நல்ல கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 1½ கப், தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை – 250 கிராம், வறுத்த எள் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயப் பொடி- ½ டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், வெல்லம் (பொடி செய்தது) – 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்), ரீஃபன்டு ஆயில் – தேவையானது,  ஃப்ரெஷ் கொத்தமல்லி – ½ கப் (நறுக்கியது), உப்பு, தண்ணீர் – தேவையானது.

செய்முறை:

கொப்பரைத் தேங்காய்த் துருவல், வறுத்த வேர்க்கடலை, எள் ஆகியவைகளை மிக்ஸியில் இட்டு பொடித்துக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகைப் போட்டு வெடிக்கவிட்டு பெருங்காயப் பொடியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விடவும். 2 -3 நிமிடங்கள் கொதித்த பிறகு, பொடித்து வைத்துள்ள பொடிக்கலவையையும், வெல்லப் பொடியையும் போட்டு 15- 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க வேண்டிய 5 மரங்கள்!
கட்டா – மிட்டா  சட்னி...

சூடான நீரில் புளியைப் போட்டு கெட்டியாக கரைத்து ஒரு கப் எடுத்து கொதிக்கிற கலவையில் சேர்க்கவும். மிளகாய்ப்பொடி, பச்சை மிளகாய், தேவையான உப்பு, மஞ்சள் பொடி, கொத்தமல்லி, நறுக்கிய பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் போட்டு, எல்லாம் சேர்ந்து சற்று கெட்டியானதும் இறக்கவும்.

நன்கு ஆறியபின் பாட்டிலில் எடுத்துவைக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி, அடை போன்றவைகளுக்குத் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும். உரப்பு, புளிப்பு, இனிப்பு, காரமென பலவித சுவைகளுடன் சூப்பராக இருக்கும். சாதத்தில்கூட கலந்து சாப்பிடலாம். கம-கமவென மணக்கும்.

logo
Kalki Online
kalkionline.com