
இன்றைக்கு சுவையான ஆவாரம் பூ ரசம் மற்றும் கத்தரி கிரேவி சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ஆவாரம்பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ-1கப்.
முருங்கைப்பூ-5
தக்காளி-1
வரமிளகாய்-1
பூண்டு-8
சீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
தாளிக்க,
எண்ணெய்- சிறிதளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1/4 தேக்கரண்டி.
புளி-எழுமிச்சை அளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
ஆவாரம் பூ ரசம் செய்முறை விளக்கம்:
முதலில் ஆவாரம் பூவை ஒரு கப், முருங்கைப்பூ 5 எடுத்துக்கொண்டு இவை இரண்டையும் இடித்து வைத்துக் கொள்ளவும். இப்போது சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, பூண்டு 8, நறுக்கிய தக்காளி 1 ஆகியவற்றை சேர்த்து இடித்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு,வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து விட்டு இடித்து வைத்திருக்கும் கலவையை இத்துடன் சேர்த்து பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி, மல்லித்தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து வதக்கிய பிறகு இடித்து வைத்த ஆவாரம் பூ மற்றும் முருங்கைப்பூவை சேர்த்துக்கொள்ளவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து புளி கரைச்சலை கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக, கொத்தமல்லி தூவி இறக்கவும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஆவாரம்பூ ரசம் மிகவும் நல்லது. இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கத்தரி கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
பொடி அரைக்க,
எண்ணெய் -சிறிதளவு.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
மல்லி-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1/4 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
வேர்க்கடலை-1 தேக்கரண்டி.
பட்டை-1
கிராம்பு-1
ஏலக்காய்-1
வரமிளகாய்-4
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
தேங்காய்-1 கைப்பிடி.
கருவேப்பிலை-சிறிதளவு.
புளி-1 துண்டு.
கிரேவி செய்ய,
எண்ணெய்-சிறிதளவு.
கருவேப்பிலை-1 கொத்து.
கத்தரி-4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
கத்தரி கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வெந்தயம் ¼ தேக்கரண்டி, மல்லி 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, வேர்க்கடலை 1 தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 1, வரமிளகாய் 4 சேர்த்து வதக்கி கொள்ளவும். கடைசியாக வெள்ளை எள் 1 தேக்கரண்டி, தேங்காய் 1 கைப்பிடி, கருவேப்பிலை சிறிதளவு, புளி 1 துண்டு சேர்த்து வதக்கி இதை மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை 1 கொத்து, நறுக்கிய கத்தரி 4, மஞ்சள் ¼ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்துவிட்டு வதக்கிய பிறகு 5 நிமிடம் மூடி வைத்துவிடவும்.
இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து மூடிவைக்கவும். இதை 10 நிமிடம் மூடி வைத்தால் கிரேவியாக தயாராகிவிடும். இந்த கத்தரி கிரேவியை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.