

கீரையில் அதிக அளவு உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கீரை வகைகளில் அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் கீரையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. இது வயிற்றுவலி மற்றும் கர்ப்பப்பையில் உண்டாகும் ரத்தக் கட்டிகளை கரைக்க உதவுகிறது. கீரை தாய்ப்பால் சுரப்பிற்கும் உடல் எடை குறைப்பிற்கும் அதிகம் உதவுகிறது. இவ்வாறு கீரையில் பல நல்ல சத்துக்கள் இருந்தாலும் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது.
கீரைகளை கூட்டு பொரியல் போல் செய்து கொடுப்பதைக் காட்டிலும் இவ்வாறு வடை செய்து கொடுப்பதால் அதனை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தேவையான அளவு
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்தம் பருப்பு - அரை கப்
முள்ளு முருங்கை கீரை - 100 கிராம்
முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடிஅளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பொறிகடலை - 3 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
வரவத்தல் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரங்கள் ஊறவைக்க வேண்டும். இவை நன்கு உரிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு சுத்தம் செய்த முள்ளு முருங்கை கீரை, முருங்கை கீரை, உப்பு, மிளகு, சீரகம் தேவையான அளவு நீர் சேர்த்து மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு பச்சரிசி மாவு கலந்து சப்பாத்தி பதம் வரும்வரை பிசைந்து பத்து நிமிடங்கள் அப்படியே விடவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு மிதமான வெப்பத்தில் இருக்கும் பொழுது நாம் பிசைந்து வைத்திருந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வடைக்கு தட்டுவதுபோல் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் நன்கு பொரிந்து வரும் வரை வேகவைக்க வேண்டும். சுவையான ஆரோக்கிய மிக்க மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை கீரை வடை வீட்டிலேயே தயார்.
இந்த மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை கீரை வடை ரெசிபி மேல் போடப்படும் மசாலா செய்வதற்காக ஒரு வாணலியில் பொரிகடலை, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வத்தல், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மிதமான வெப்பத்தில் வறுத்துக்கொள்ள வேண்டும். இவை நன்கு ஆரியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முள்ளு முருங்கை கீரை வடையின் மீது இந்த பொடியை தூவி விட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். ஸ்நாக்ஸ் ரெசிபிகளை கடைகளில் இருந்து வாங்கி கொடுப்பதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது எந்தவித உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாமல் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
கீரையை ஒதுக்காமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், மதுரையின் பாரம்பரிய சுவையில் சத்தான மற்றும் மொறுமொறுப்பான மாலையின் ஸ்நாக்ஸ் தயார் செய்வதற்கான முழு வழிகாட்டுதலைப் பெறலாம்.