மாதுளம் பழ சர்பத்!

மாதுளம் பழ சர்பத்!
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழச்சாறு - அரை லிட்டர்

தேன்-அரை கிலோ 

கற்கண்டு -அரை கிலோ

பன்னீர் - அரை லிட்டர்

செய்முறை:

ல்லாப் பொருட்களையும் ஒன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி காய்ச்ச வேண்டும் . பாகு தேன் பக்குவத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இந்த சர்பத்தை ஒரு வேளைக்கு இரண்டிலிருந்து நான்கு தேக்கரண்டிவரை நோயின் தன்மைக்கேற்ப சிறிது நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட நல்ல குணம் தெரியும். ஆசனவாயில் எரிச்சல், நமைச்சல் முதலியனவும் குணமாகும். 

உடல் அதிக உஷ்ணமடைந்து விடுதல், உடலின் பல பகுதிகளில் எரிச்சல் தோன்றுதல், வாயில் ருசி தன்மை மாறி விடுதல், உடல் வீக்கம் போன்ற குறைபாடுகளை அகற்றுவதற்கு இந்த சர்பத்தை தயார் செய்து பயன்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com