உங்க வீட்டுல கண்டிப்பா இருக்க வேண்டிய ஆடி மாத பிரசாதங்கள்! மிஸ் பண்ணாதீங்க!

Special recipes for aadi festival
Aadi special recipes
Published on

டி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானதும், பெண்கள் பக்தியோடு விரதங்கள், பூஜைகள், மற்றும் விசேஷ நெய்வேத்தியங்கள் செய்து கொண்டாடும் புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில், விசேஷமான சமையல்கள் பல வீட்டிலும், கோவில்களிலும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.கற்பூரப்பொங்கல் (Karpoora Pongal): கற்பூரப்பொங்கல் என்பது ஒரு இனிப்பு வகை பொங்கல். இதில் கற்பூரம் (ஏதோய கற்பூரம் அல்ல, உணவுக்குப் பொருத்தமான edible camphor) சேர்க்கப்படும். இது இறைவனுக்கு நிவேதனமாக செய்யப்படும்.

பச்சரிசி, பாசிப்பருப்பு, தேன்/வெல்லம், நெய், ஏலக்காய் தூள், உதிர்ந்த முந்திரி, திராட்சை, மற்றும் சிறிது உணவுக் கற்பூரம் சேர்த்து செய்கின்றனர்.  இது விஷ்ணு அல்லது அம்மன் கோவில்களில் வழக்கமாக நிவேதனமாக செய்யப்படும். இதில் கற்பூரம் என்பது தூய்மையின் சின்னமாகும். ஆதலால், இந்த மாதத்தில் செய்யும் பூஜைகளுக்கு இது சிறப்பான நிவேதனமாக கருதப்படுகிறது.

2.சுண்டல் (Sundal): சுண்டல் என்பது பயிறு வகைகளில் செய்து கடுகு, உளுந்தம் பருப்பு, தேங்காய் காருவேப்பிலை, உப்பு, சேர்த்து செய்யப்படும் ஒரு சத்தான சிற்றுண்டி.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பூஜைகளுக்குப் பின், பெண்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக சுண்டல் தயாரித்து பகிர்ந்துகொள்வது வழக்கம். இது சத்தானதும், பக்தி உணர்வோடும் செய்யப்படும் உணவு. வெள்ளை சுண்டல், பச்சைப்பயிறு சுண்டல், காராமணி சுண்டல், முளை கட்டிய பயறு சுண்டல் என பலவகைகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
எளிமையான மருத்துவத்துடன் கூடிய சமையல் குறிப்புகள்!
Special recipes for aadi festival

3.இடியாப்பம் (Idiyappam): இடியாப்பம் என்பது அரிசி மாவால் தயாரிக்கப்படும் நூடுல்ஸ்போல ஆன ஒரு உணவு. இது  வெள்ளை யிழைகள் போல தோன்றும். இது ஆடி அம்மன் பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.  தேங்காய்பால் + சக்கரை அல்லது நாட்டு சக்கரை பால் சேர்த்து இனிப்பாகவும்,  சாம்பார் அல்லது கறி வகைகளுடன் காரமாகவும் சாப்பிடப்படலாம். விரதம் கொண்ட பெண்களுக்கு எளிதாக ஜீரணமாகும், நெய்வேத்யத்திற்கேற்ற நல்ல உணவு.

ஆடி மாதம் என்பது “பெண்கள் சக்தியின் உற்சாகமான காலம்” என்பதோடு, உணவிலும் ஒழுக்கத்திலும் புனிதமான பாங்கு கொண்ட மாதமாகும். கற்பூரப்பொங்கல், சுண்டல், இடியாப்பம் ஆகியவை இம்மாதத்தில் ஆன்மிக உணர்வோடு தயாரிக்கப்படும் புனிதமான நிவேதன உணவுகளாகும்.

கற்பூரப்பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி   _1 கப்

பாசிப்பருப்பு    _¼ கப்

வெல்லம்  _1 கப்  (துண்டுகளாக உடைத்தது)

நெய்_ 3 மேசைக்கரண்டி

முந்திரி_  1 மேசைக்கரண்டி

திராட்சை  _1 மேசைக்கரண்டி

ஏலக்காய்தூள்_  ½ மேசைக்கரண்டி

உணவுக்கற்பூரம் _ சின்ன துளி

தண்ணீர்_  3½ கப்

இதையும் படியுங்கள்:
மும்பை ஸ்டைல் சுவையில் பன்னீர் ஃபிராங்கி: செய்முறை விளக்கம்!
Special recipes for aadi festival

செய்முறை:

அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக அலசி, ஒரு பாத்திரத்தில் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, அதனை 3½ கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து நன்கு மசியும் வரை வேகவைக்கவும். கஞ்சியான அமைப்பு வந்துவிடும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து கரைந்ததும்  வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கவும். மிதமான அழுத்தத்தில் கிளறவும். வெல்லம் கலந்து ஒரு கொதி வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை, ஏலக்காய்தூள், ஒரு சிறு துளி உணவுக்கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கொஞ்சம் நெய் மேலே ஊற்றவும். பொங்கல் நன்கு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். தேவையானால் கொஞ்சம்  தேங்காய் துருவலையும் சேர்க்கலாம்.

நெய், வெல்லம், கற்பூரம் – இவை மூன்றும் சேரும் போது ஒரு பரிசுத்த ஆன்மீக உணர்வுதரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com