மணம் கமழும் பாரம்பரிய இனிப்பு பச்சரிசி அல்வாவும், பாசிபருப்பு அல்வாவும்!

Traditional sweets
sweet halwa recipes
Published on

பச்சரிசி அல்வா

பச்சரிசி அல்வா என்பது   தீபாவளி போன்ற திருநாள்களில் சிறப்பாக தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி   1 கப்

சர்க்கரை  2 கப்

நெய் ½ கப் அல்லது தேவையான அளவு

தண்ணீர்   2 கப்

ஏலக்காய் பொடி ¼ டீஸ்பூன்

முந்திரி, திராட்சை   சிறிது

செய்முறை:

பச்சரிசியை கழுவி 2 முதல் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பச்சரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து மையமாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் அரைத்த மாவை விட்டு, அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து, அடி பிடிக்காமல் கொதிக்கவிடவும். மாவு கெட்டியாக ஆரம்பித்ததும், அதில் சர்க்கரை சேர்க்கவும்.

இது உருகும்போது மாவு சில நேரம் தளரலாம். மீண்டும் கிளறி கிளறி கொதிக்க விடவும். இப்போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும். நெய் மேலே மிதக்கும் வரை (அல்வா போல உருண்டு வரும் வரை) கிளறவேண்டும். பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

நன்றாக கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி, ஒரு நெய் பூசிய தட்டில் ஊற்றிக்கொள்ளவும். வெட்டிக்கொண்டு பரிமாறலாம்.

விரும்பினால் பாதாம் அல்லது பிஸ்தா தூளாகி சேர்க்கலாம். வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த பச்சரிசி அல்வா உங்கள் நாவிலும் மனதிலும் இனிமையை நிரப்ப செய்யும்!

இதையும் படியுங்கள்:
நவராத்திரிக்கு மட்டுமல்ல எப்போதுமே சத்தான சுண்டல் செய்து அசத்தலாம்…!
Traditional sweets

பாசி பருப்பு அல்வா:

பாசிபருப்பு அல்வா என்பது நெய் மணம் கமழும், நொறுக்கு நொறுக்காகவும் ருசியாகவும் இருக்கும் ஒரு சுவையான இனிப்பு. இது உத்திரப் பிரதேசத்தில் பிரபலமானது, ஆனால் தமிழ்நாட்டிலும் இது நல்ல வரவேற்பு பெற்றது.

தேவையான பொருட்கள்:

பாசிபருப்பு 1 கப்

சர்க்கரை  1 முதல் 1½ கப்

நெய் ½ கப்

தண்ணீர்   2 கப்

பால் 1 கப்

ஏலக்காய்பொடி ¼ டீஸ்பூன்

முந்திரி, திராட்சை   சிறிது (நெய்யில் வறுக்கவும்)

செய்முறை: ஒரு வாணலியில் பாசிபருப்பை கழுவாமல் சுத்தமாக வறுக்கவும். அது பொன்னிறமாக மாறி  நறுமணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த பருப்பை நன்கு குளிர்ந்த பிறகு, நன்கு கழுவி மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அரைத்த பருப்பு மாவை சேர்க்கவும். தட்டில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, பச்சை வாசனை போவதற்கும் நன்றாக வெந்துவிடுவதற்கும் சமைக்கவும். அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கவும். சர்க்கரை உருகி, கலவை சற்று தளர்ந்த நிலையில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அது என்ன சொடக்கு தக்காளி? ஒரு முறை சாப்பிட்டாலே எல்லா நோய்களும் க்ளோஸ்! ஆனால், விலை மட்டும்... அம்மாடியோவ்!
Traditional sweets

தொடர்ந்து கிளறவும். இப்போது நெய் சிறிது சிறிதாக சேர்க்கவும். கலவை ஒன்றாக வந்ததும் நெய் மேலே மிதக்கத் தொடங்கும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். தோல் நீக்கி  உடைத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறவும். கலவை கடாயில் ஒட்டாமல், உருண்டு வரும் நிலையில் இருந்தால், அது தயாராகிவிட்டது. விருப்பப்படி ஒரு தட்டில் ஊற்றி அல்லது கப்பில் வைத்து பரிமாறலாம்.

பால் சேர்ப்பதன் மூலம் அதிக richness வரும். ஆனால் பால் இல்லாமல் பச்சையானதாய் செய்ய விரும்பினால் தண்ணீரில் மட்டும் செய்யலாம். நெய் நல்ல சுவையை தரும், குறைக்க விரும்பினால் அளவைக் கட்டுப்படுத்தலாம். இதை சூடாக பரிமாறும்போது சிறந்த சுவை இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com