சர்க்கரை வள்ளிக் கிழங்கு பாயசம் - மென்மையன தேங்காய் பனீர் கேக்..!

Arokya Samayal recipes
payasam - cake recipes
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

சக்கரைவள்ளிக் கிழங்கு பாயசம் மிகச்சத்தானதும், இனிப்பானதும், ஆன  ஒரு இனிப்பு வகையாகும். இதை செய்ய...

தேவையான பொருட்கள்:

சக்கரைவள்ளிக் கிழங்கு_   2 நடுத்தர அளவு

பாசிபருப்பு _    2 மேசைக்கரண்டி

தேங்காய்பால் – முதல் பால் 1 கப்

தேங்காய்பால் – இரண்டாம் பால் _1.5 கப்

வெல்லத்தூள் _ ¾ கப்

ஏலக்காய்தூள் _ ½ மேசைக்கரண்டி

நெய் _2 மேசைக்கரண்டி

முந்திரி, திராட்சை   சிறிதளவு

செய்முறை: சக்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி நன்றாக வேகவைக்கவும். வெந்த பின், மிக்ஸியில் மிதமான திரவமாக அரைக்கவும் (அல்லது கையால் பிசைந்து கொள்ளலாம்).

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருக்கவும். பின் வடிகட்டி வெல்லக் கலவை கட்டி இல்லாமல் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.  சிறிது பாசிப்பருப்பை வறுத்து, வேக வைத்து, பாயசத்தில் சேர்க்கலாம். இது சத்தையும் கொடுக்கும். அரைத்த சக்கரைவள்ளி பேஸ்டில் வெல்ல கலவை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிடவும்.

இதில் இரண்டாம் தேங்காய் பாலை சேர்த்து சுண்டுகிற வரை கிளறவும். கடைசியாக முதல் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். ஏலக்காய் தூளை சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வதக்கி பாயசத்தில் சேர்க்கவும்.

சக்கரைவள்ளி பாயசம் குளிர்ந்த பிறகும் சுவையாக இருக்கும். தயாரான சக்கரைவள்ளி பாயசம்  நாவிலும் மனதிலும் இனிமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய சமச்சீர் உணவு வகைகள்..!
Arokya Samayal recipes

தேங்காய் பனீர் கேக்

இதில் தேங்காயின் சுவையும், பனீரின் மென்மையும் சேர்ந்து தனித்துவமான சுவையைத் தரும். இதை செய்ய

தேவையான பொருட்கள்:

கோதுமை மைதா _1 கப்

தேங்காய் துருவல் _1 கப்

பனீர் சிறிய துண்டுகள்_    1 கப்

சர்க்கரை _ ¾ கப் 

Milkmaid –   ¼ கப்

பால் _ ½ கப் 

வெண்ணெய் _  ¼ கப்

பேக்கிங் பவுடர்_ 1 ஸ்பூன்

பேக்கிங் சோடா_     ¼ ஸ்பூன்

ஏலக்காய் தூள் _     1 ஸ்பூன்

முந்திரி, பிஸ்தா, திராட்சை _சிறிதளவு

செய்முறை: ஓவனை 180°C (350°F) எனப் ப்ரீஹீட் செய்யவும். ஒரு பெரிய பாத்திரத்தில் பனீரை நன்றாக மசித்து எளிதாக்கவும். அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, பாலாடை சேர்த்து கிளறவும். பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மென்மையான கலவையாக செய்யவும். வேறு ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
சாஃப்டான சப்பாத்திக்கு டேஸ்டியான சைடு டிஷ் இதோ..!
Arokya Samayal recipes

இந்த மாவை மெதுவாக பனீர் கலவையில் கலந்துவிடவும். முட்டை இல்லாமல் இது நன்கு உறையும். ஏலக்காய் தூள்  சேர்க்கவும்.  முந்திரி, பிஸ்தா அல்லது திராட்சையைச் சேர்க்கலாம். ஒரு கேக் தட்டில் நெய் தடவி மாவை ஊற்றவும். 180°C இல் 30–35 நிமிடம் வரை அல்லது மேலே பழுப்பு நிறம் வரும்வரை பேக் செய்யவும். நடுவில் டூத் பிக்கால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வந்தால், கேக் ரெடி. சுடசுடப் பரிமாறலாம், அல்லது குளிர்வித்து  பரிமாறலாம்.

பனீர் பசும்பாலில் செய்தது என்றால் அதிக மென்மை கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com