
இன்றைக்கு டேஸ்டியான தாபா ஸ்டைல் பனீர் புர்ஜி மற்றும் மசாலா சுண்டல் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பனீர் புர்ஜி செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-4 தேக்கரண்டி
வெண்ணெய்-2 தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
உப்பு-தேவையான அளவு
தக்காளி-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்-1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி
கரம் மசாலா-1 தேக்கரண்டி
பனீர்-1 கப்
பால்-1 கப்
கடலை மாவு-2 தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
தாளிக்க,
எண்ணெய்-2 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி
பனீர் புர்ஜி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய், 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து அதில் சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிவிட்டு இத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய தக்காளி 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள், மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, கடலை மாவு 2 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடிப்போட்டு வேக வைத்துவிட்டு, துருவிய பனீர் 1கப் சேர்த்து கலந்துவிட்டு, 1 கப் பால் சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு சேர்த்து கலந்துவிட்டு எண்ணெய் 2 கரண்டியை சூடாக்கி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து தாளித்து இதில் சேர்த்து இறக்கினால் சூப்பரான தாபா ஸ்டைல் பனீர் புர்ஜி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
மசாலா சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை-1கப்
துருவிய தேங்காய்-1 கப்
கொத்தமல்லி-சிறிதளவு
கருவேப்பிலை-சிறிதளவு
வரமிளகாய்-2
எண்ணெய்-2 தேக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
கருவேப்பிலை-சிறிதளவு
வெங்காயம்-1
உப்பு-தேவையான அளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு
துருவிய கேரட்-1
மாங்காய்-சிறிதளவு
எழுமிச்சை சாறு-சிறிதளவு
மசாலா சுண்டல் செய்முறை விளக்கம்.
கொண்டைக்கடலை 1 கப் இரவு ஊற வைத்து அதை குக்கரில் சேர்த்து போதுமான அளவு தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் 1 கப் துருவிய தேங்காய், கொத்தமல்லி சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 2 சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது பேனில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து வதக்கி விட்டு வேகவைத்த கொண்டைக்கடலை 1 கப்பை சேர்த்துக் கொள்ளவும்.
இத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட், துருவிய கேரட் 1, பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்த்து கலந்துவிட்டு கடைசியாக எழுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு சுவையான மசாலா சுண்டல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.