ஏப்ரல் 1-ம்தேதி முதல் உயரும் கார்களின் விலை... எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் 1-ம்தேதி முதல் மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா உட்பட பல கார் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
car Price Hike on april 1st
car Price Hike on april 1st img credit - cnbctv18.com
Published on

உலகளவில், சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவில் கார்கள் மற்றும் வணிக வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியா உலகின் நான்காவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாகும்.

கார் வாங்க விரும்பும் தனிநபர் இந்தியாவில் கார் பிராண்டுகளைத் தேடும்போது, ​​அவர்களுக்கு ஏராளமான தேர்வுகள் கிடைக்கின்றன. வாகனத்தின் செயல்திறன் மற்றும் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் ஒரு கார் உற்பத்தியாளரிடமிருந்து கார்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஆனால் பல்வேறு வகையான தேர்வுகள் கிடைப்பதால், அது ஒரு சவாலான பணியாக உள்ளது.

இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தியாளராக தனது நிலையை உறுதிப்படுத்திய முதல் கார் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். வெவ்வேறு பட்ஜெட் பிரிவுகளில் பல்வேறு மாடல்களைக் கொண்டிருப்பதால், இந்த கார் இந்திய சந்தையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களிடம் குறைந்த பட்ஜெட் இருந்தால், நீங்கள் நிச்சயமாக மாருதி கார்களைத் தேர்வு செய்யலாம்.

அந்த வகையில் கியா, சியோலை தளமாகக் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கார் பிராண்ட் ஆகும். டாடா பிராண்ட் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றுள்ளது. அதே போல் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர் திருப்தி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தயாரிப்பு வரிசை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மாருதி சுசுகி கார் விற்பனை அமோகம்!
car Price Hike on april 1st

இந்நிலையில், இந்தியாவில் மாருதி, கியா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹோண்டா ஆகிய கார் உற்பத்தி நிறுவனங்கள், ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தங்கள் கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.

அதாவது இந்த கார் நிறுவனங்கள் வாகனங்களின் விலையை 3-4 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்ததுள்ளன. கார் மாடல்களை பொறுத்து, விலை உயர்வு வேறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கார்கள் விலையை ரூ.25 ஆயிரம் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல், ஹோண்டா நிறுவனமும் வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தாலும் எவ்வளவு விலை உயரும் என்பதை இன்னும் கூறவில்லை. மாருதி கார்கள் ஏப்ரல் மாதத்தில் 4% வரை விலை உயர்வைக் காணும் அதே வேளையில், ஹூண்டாய், மஹிந்திரா, கியா மற்றும் BMW கார்கள் 3% வரை விலை உயர்ந்திருக்கும். இந்த அதிகரிப்பு கார் வாங்குபவர்களை நேரடியாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாருதி சுசுகி ஜிம்னி தண்டர் எடிஷனின் சிறப்பம்சங்கள்!
car Price Hike on april 1st

கடந்த சில மாதங்களாக, எஃகு, சிலிக்கான் சில்லுகள் மற்றும் பிற முக்கிய கூறுகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இது அதிக உற்பத்தி செலவுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த அதிகரித்து வரும் செலவுகளை ஈடுசெய்ய, வாகன உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப தங்கள் விலை நிர்ணய அமைப்பை சரிசெய்து வருகின்றனர்.

விற்பனையை அதிகரிக்கவும், ஏற்கனவே உள்ள சரக்குகளை அழிக்கவும், கார் உற்பத்தியாளர்கள் கடந்த 6-7 மாதங்களாக அதிக தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். கார் உற்பத்தியாளர்கள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை PV விலையை உயர்த்துகிறார்கள். அதாவது முதலில் ஜனவரியிலும் பின்னர் ஏப்ரல் மாதத்திலும் உயர்த்துகிறார்கள்.

இந்தியாவில் கார் உற்பத்தி 2025 ஜனவரியில் 2546643 யூனிட்களில் இருந்து பிப்ரவரியில் 2346258 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு, கார் உற்பத்தியை மேலும் மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

கார் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது, கார் வாங்க ஆசைப்படும் நடுத்த மக்களின் கனவு இனிவரும் காலங்களில் கானல் நீராகவே மாறும் என்று தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
கார் கண்டுபிடித்த கார்ல் பென்ஸ்!
car Price Hike on april 1st

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com