நீங்கள் அதிகம் பேசும் நபரா? அப்படியென்றால் ஜாக்கிரதை!

A Talk more person
A Talk more person

ம்மைச் சுற்றி பல குணங்கள் கொண்ட படித்த மனிதர்கள் பலர் உள்ளனர். ஆனால், ஒருவர் போல் மற்றவர்கள் உள்ளார்களா? என்று பார்த்தால் அப்படி யாரும் இருக்க மாட்டார்கள். மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு தனித்துவமான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் அமைதியாக இருப்பார். மற்றொருவர் பேசிக்கொண்டே இருப்பார். இன்னும் சிலர் எப்பொழுது பேச வேண்டுமோ அப்பொழுது மட்டும்தான் பேசுவார்கள். இவ்வாறாக மனிதர்களின் குணங்கள் வெவ்வேறாக இருக்கும்.

சில மனிதர்கள் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றியோ அல்லது அவர்கள் பேசிய வார்த்தையினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியோ அவர்கள் அறிந்திருப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஒருவர் அதிகமாகப் பேசினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஒருவர் அதிகமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் திருவள்ளுவர், ‘யாகாவாராயினும் நாகாக்க’ என கூறியுள்ளார். அதாவது நம்மால் எதைக் காக்க முடியாவிட்டாலும் கட்டாயம் நம்முடைய நாக்கை காக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஒருவர் மனது புண்படும்படி நாம் பேசிவிட்டால் அந்தச் சொல்லை நம்மால் மீண்டும் பெறவே முடியாது. அது மற்றவர்களை மனதளவில் காயப்படுத்தி இருக்கும்.

மேலும், ஒருவர் அதிகமாகப் பேசுவது என்பது தவளை தனது வாயால் கெடும் என்பது போல் ஆகிவிடும். அதிகமாகப் பேசுபவர்கள் ஒருவரைப் பற்றி என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே அவர் முன்போ அல்லது வேறு யாரிடமாவதோ கூறிவிட்டு பின்னால் அதனால் அவருக்குப் பிரச்னை ஏற்பட்டு வம்பில் மாட்டிக்கொள்வார்கள்.

‘மனதில் பட்டதை பேசுவது தவறா?’ என்று கேட்டால், ஒருவரைப் பற்றிய கருத்தை மற்றவர்களிடம் கூறுவது எந்தப் பயனும் அளிக்கப் போவதில்லை. மேலும், ஒருவர் மீது உள்ள வெறுப்பையும், கோபத்தையும் எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் அதிகமாக வெறுப்பு பேச்சுக்களை பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவது சரியல்ல. அதிகமாகப் பேசுபவர்கள் செயலில் ஒன்றும் காட்டமாட்டார்கள். ‘நான் நினைத்தால்’ என்ற வார்த்தைதான் முதலில் வருமே தவிர, வேறு செயல்களில் தங்களை நிரூபிக்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
ஜெயின் துறவிகளின் வித்தியாசமான வாழ்க்கை முறை தெரியுமா?
A Talk more person

அதிகம் பேசுவதைக் குறைப்பதால் ஏற்படும் நன்மைகள்: அதிகமாகப் பேசுவதை குறைத்துக்கொண்டால் நாம் மற்றவர்களை பற்றி சிந்திப்பது குறைந்து விடும். மேலும், சிந்திக்கும் திறனும் ஏற்படும். அதனால். பேசுவதை விட, நாம் செய்கின்ற வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைப்போம்.

ஒருவர் அதிகமாகப் பேசுகிறார் என்றால் அவர்களின் நண்பர்கள் வட்டமும் அதிகம் பேசுபவர்களாக இருக்கலாம். எனவே, நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் மற்றவர்களின் பார்வை, ஈர்ப்பு உங்களை நோக்கி இருக்கும்.

மேலும். அதிகமாகப் பேசுபவர்கள் தங்களிடம் எவ்வித  திறமையும் இல்லாதபோதுதான் இவ்வாறு பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களிடம் நட்பு பாராட்ட மாட்டார்கள்.

குறைவாகப் பேசுவதால் சொல்லவரும் கருத்துக்களை நாம் தெளிவாகவும், நியாயமாகவும் கூற இயலும். பேச்சில் தெளிவு இருக்கும். அதனால் மற்றவர்கள் சுலபமாக உங்களின் பேச்சுகளை நம்புவார்கள். குறைவாகப் பேசுபவர்களுக்கு எப்பொழுதும் நாம் என்ன பேசுகிறோம், என்ன பேசினோம் என்கிற தெளிவு இருக்கும். அதிகமாகத்தான் பேசக் கூடாதே தவிர, பேச வேண்டிய நேரத்தில் கருத்துக்களை நிச்சயம் தெரிவிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com