மண் பானையை சோப்பு போட்டு கழுவும் பழக்கம் உள்ளவரா நீங்க... உடனே இதை படிங்க!

clay utensils cleaning tips
clay utensils cleaning tips
Published on

மீப காலமாக நமது தாத்தா பாட்டி காலத்தில் பயன்படுத்திய பல விஷயங்கள் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இடையில் வந்த நான்-ஸ்டிக், எவர்சில்வர், பீங்கான் பாத்திரங்களை ஓரங்கட்டிவிட்டு, ஒட்டு மொத்தமாக ஆரோக்கியத்திற்காக மண் பானைகளில் சமைக்கத் தொடங்கிவிட்டோம். மண் சட்டியில் சமைக்கும் மீன் குழம்புக்கும், காரக்குழம்புக்கும் ஈடு இணையே கிடையாது என்பது உணவுப்பிரியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நிதர்சனமான உண்மை. 

ஆனால், இந்த மண் பாத்திரங்களை கடைகளில் வாங்குவது எவ்வளவு சுலபமோ, அதைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. குறிப்பாக, அவற்றை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பலருக்கும் சரியான விழிப்புணர்வு இல்லை. அந்தப் பாத்திரங்களை உடையாமல் நீண்ட காலம் உழைக்க வைப்பதற்கான சில டிப்ஸ்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சோப்புக்கு நோ சொல்லுங்க!

நாம் செய்யும் மிகப்பெரிய முதல் தவறு, மற்ற எவர்சில்வர் பாத்திரங்களைக் கழுவுவது போலவே மண் சட்டிகளுக்கும் பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது லிக்விட் பயன்படுத்துவதுதான். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். மண் பானைகளில் இயற்கையாகவே கண்ணுக்குத் தெரியாத பல நுண்துளைகள் இருக்கும்.

நீங்கள் சோப்பு போட்டுத் தேய்க்கும்போது, அந்த ரசாயனங்கள் அனைத்தையும் பானை முழுமையாக உறிஞ்சித் தன்னுள் வைத்துக் கொள்ளும். அடுத்த முறை அதில் சமைக்கும்போது அந்த ரசாயனங்கள் உணவில் கலந்து நமது உடலுக்கே பெரிய கேடாக அமைந்துவிடும். அதுமட்டுமில்லாமல், அந்த ரசாயன வாடை சமையலின் அசல் சுவையையே முற்றிலுமாகக் கெடுத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
"பூண்டு உரிச்சா கை நாறுதா?" - சோப்பு போடாமலே வாசனையை விரட்டும் 4 மேஜிக் டிப்ஸ்!
clay utensils cleaning tips

எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் வழி!

சோப்பு போடக்கூடாது என்றால் அந்த பிசுபிசுப்பை எப்படிப் போக்குவது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கும் இயற்கையான முறையில் ஒரு சூப்பரான வழி இருக்கிறது. நீங்கள் சுத்தம் செய்யவேண்டிய பானையில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சில எலுமிச்சைப் பழத் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு நீரை கீழே ஊற்றிவிடுங்கள். 

இப்போது பானை ஓரளவுக்குச் சுத்தமாகி இருக்கும். எஞ்சியுள்ள அழுக்குகளை நீக்க, சிறிது கல் உப்பு மற்றும் அரிசி மாவைச் சேர்த்து ஒரு மிருதுவான நாரைக் கொண்டு மென்மையாகத் தேய்த்துக் கழுவுங்கள். கழுவிய பிறகு ஒரு சுத்தமான பருத்தித் துணியால் ஈரம் போகத் துடைத்து, சிறிது நேரம் வெயிலில் காய வைத்தால் உங்கள் சட்டி புதிது போலப் பளிச்சென்று மாறிவிடும்.

புதுப் பானையை தயார் செய்யும் முறை!

கடையில் இருந்து புதிதாக வாங்கி வந்த பானையை அப்படியே நேரடியாக அடுப்பில் வைத்துச் சமைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் உணவு கசக்கத் தொடங்கும், மேலும் சீக்கிரமாகவே சட்டி வெடித்துவிடும் அபாயமும் உள்ளது. இதைத் தவிர்க்க, வாங்கிய முதல் நாள் இரவு முழுவதும் அந்தப் பானையைத் தண்ணீரில் முழுமையாக மூழ்கி இருக்குமாறு வையுங்கள். 

இது உள்ளே இருக்கும் மணல் மற்றும் தேவையற்ற துகள்களை நீக்கிவிடும். மறுநாள் காலை அந்த நீரை வடித்துவிட்டு, உப்பைக் கொண்டு லேசாகத் தேய்த்துக் கழுவி சில மணி நேரங்கள் காயவையுங்கள். நன்கு காய்ந்த பிறகு, பானையின் உட்புறமும் வெளிப்புறமும் ஏதேனும் ஒரு சமையல் எண்ணெயைத் தடவி, அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்து சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டும் சூடாக்குங்கள்.

இதையும் படியுங்கள்:
நம்பிக்கை வையுங்கள் - நல்ல காலம் பிறக்கும்!
clay utensils cleaning tips

இப்படிச் செய்வதால் சட்டி நன்றாக இறுகிப்போய் வெடிப்புகள் வராமல் நீண்ட காலம் உழைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com