பாத்ரூம் டிசைனில் செய்யும் அந்த ஆபத்தான தவறு... பிறகு சுவர் இடிக்க வேண்டி வரும்!

Bathroom Design
Bathroom Design
Published on

குளியலறை வடிவமைப்பில் செய்யப்படும் மிகப்பெரிய தவறு, கழிவு நீர் வெளியேறும் பிரதான குழாய்க்கும், டாய்லெட், ஷவர் மற்றும் வாஷ் பேசின் ஆகியவற்றுக்கும் இடையே அதிக இடைவெளி விடுவதுதான். ஒரு வீட்டின் கழிவு நீர் அமைப்பில் செங்குத்தாகச் செல்லும் பிரதான குழாய் மிக முக்கியமானது. இதில்தான் மற்ற அனைத்துச் சிறிய குழாய்களும் வந்து இணையும். ஆனால், நவீன வடிவமைப்பு என்ற பெயரில் இந்த பிரதான குழாயிலிருந்து வெகு தொலைவில் டாய்லெட்டை அமைக்கும்போது பிரச்னை தொடங்குகிறது.

நீரின் வேகம் குறையும் ஆபத்து!

பொதுவாகத் தண்ணீர் செங்குத்தாகக் கீழே விழும்போது அதற்கு வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் கிடைமட்டமாக நீண்ட தூரம் செல்லும்போது அதன் வேகம் தானாகவே குறைந்துவிடும். பிரதான குழாயிலிருந்து வெகு தொலைவில் பாத்ரூம் சாதனங்களை அமைக்கும்போது, கழிவு நீர் நீண்ட தூரம் கிடைமட்டமாகப் பயணிக்க வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
மினரல் வாட்டராக மாறும் நிலத்தடி நீரின் பின்னணி! –தெரிஞ்சுக்கலாமா?
Bathroom Design

இதனால் நீரின் வேகம் குறைந்து, அதில் கலந்து வரும் சோப்பு நுரை, முடி மற்றும் இதர கழிவுகள் அடித்துச் செல்லப்படாமல் குழாயின் அடியிலேயே தங்கிவிடும். நாட்கள் செல்லச் செல்ல இந்தக் கழிவுகள் ஒன்று சேர்ந்து பெரிய பாறை போல மாறி, முழுமையான அடைப்பை ஏற்படுத்திவிடும்.

சிக்கல்கள்!

இப்படித் தவறான வடிவமைப்பால் தண்ணீர் மெதுவாக வடிவது மட்டுமல்லாமல், குளியலறையில் ஒரு விதமான துர்நாற்றம் வீசத்தொடங்கும். சில நேரங்களில் சிங்க் அல்லது டாய்லெட்டில் தண்ணீர் செல்லும்போது விசித்திரமான சத்தங்கள் கேட்கும். இது காற்றோட்டம் சரியில்லை என்பதன் அறிகுறியாகும். அடைப்பு முற்றிய பிறகு, அதைச் சரிசெய்யத் தரையைத் தோண்ட வேண்டியதோ அல்லது சுவரை உடைக்க வேண்டியதோ கட்டாயமாகிவிடும். இது தேவையற்ற பண விரயத்தையும், மன உளைச்சலையும் தரும்.

இதையும் படியுங்கள்:
தோல் உரிதலைத் (சொரியாசிஸ்) தடுக்கும் 'சக்கரதாரா' சிகிச்சை - மாயமா? மந்திரமா?
Bathroom Design

தடுக்கும் வழிமுறைகள்!

இதைத் தவிர்க்க ஒரே வழி, சரியான திட்டமிடல். கழிப்பறை கோப்பையை முடிந்தவரை பிரதான குழாய்க்கு மிக அருகில் அமைப்பதே சிறந்தது. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த இடைவெளி சுமார் ஆறு அடிக்குள் இருப்பது பாதுகாப்பானது. அதேபோல, ஒவ்வொரு குழாய்க்கும் சரியான காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தண்ணீர் சீராகச் செல்ல உதவும்.

வீடு என்பது நமது கனவு. அதில் சிறு தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குளியலறையைப் புதுப்பிக்கும்போது வெறும் அழகை மட்டும் பார்க்காமல், அதன் தொழில்நுட்ப அம்சங்களிலும் கவனம் செலுத்தவேண்டும். ஒரு தகுதி வாய்ந்த பிளம்பரின் ஆலோசனையுடன் சரியான குழாய் அமைப்பை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் அடைப்பு பற்றிய கவலையின்றி நிம்மதியாக வாழலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com