ஏசி அறையில் தூங்குபவரா நீங்கள்? போச்சு! 

Dangers of sleeping in AC room.
Dangers of sleeping in AC room.
Published on

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தரம் ஓரளவுக்கு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்பமான கோடை காலங்களில் ஏர் கண்டிஷனிங் அமைப்பு நமக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இந்த நவீன வசதிகள் நமக்கு பல நன்மைகளைத் தருவதோடு பல தீமைகளையும் ஏற்படுத்துகின்றன. அதிலும், குறிப்பாக ஏசி அறையில் அதிகம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். 

ஏசி அறையில் அதிகம் தூங்குவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்: 

ஏசி அறையில் உள்ள குளிர்ந்த காற்று தொண்டை மற்றும் மூக்கின் ஈரப்பதத்தை குறைத்து வறட்சியை ஏற்படுத்தும். இது பாக்டீரியா, வைரஸ்கள் தாக்க வழிவகுத்து தொண்டை வலி, இருமல் போன்ற தொற்று நோய்களை உண்டாக்கும். 

ஏசி காற்று சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சருமத்தை வறண்டு போகச் செய்யும். இதனால், சருமத்தில் அரிப்பு, வெடிப்புகள், வயதான தோற்றத்தின் அறிகுறிகள் தோன்றும். 

ஏசி அறையில் தூசி, புஞ்சை, பாக்டீரியாக்கள் அதிகமாக குவிந்து, அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தும். இது மூச்சு விடுவதில் சிரமம், கண்கள் சிவந்து போதல், சரும வெடிப்புகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். 

அதிக நேரம் ஏசி அறையில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை குறைத்து தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கும். இது மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு போன்ற பாதிப்புகளை உண்டாக்கலாம். 

குளிர்ச்சியான அறையில் தூங்குவதால் தசைகள், மூட்டுகள் இறுக்கமாகி வலியை உண்டாக்கும். குறிப்பாக, மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு ஏசி அறையில் தூங்குவது பாதிப்பை ஏற்படுத்தும். 

சில நபர்களுக்கு ஏசியின் குளிர்ந்த காற்று தலைவலியை ஏற்படுத்தும். ஏசி காற்றில் உள்ள ரசாயனங்கள் காரணமாக இந்த தலைவலி ஏற்படலாம். சில ஆய்வுகளின் படி ஏசி அறையில் அதிகம் தூங்குவது இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
உங்க அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்கணும்னு தெரியலையா? அப்போ இதை முழுசா படிங்க!
Dangers of sleeping in AC room.

ஏசியை பாதுகாத்துடன் பயன்படுத்தும் வழிகள்: 

ஏசி அறையின் வெப்பநிலையை எப்போதும் உங்கள் உடல் வெப்பநிலைக்கு அருகில், அதாவது 24 - 26 டிகிரி செல்சியஸ் வரை பராமரிக்கவும். ஏசி அறையை அவ்வப்போது சுத்தம் செய்து தூசி மற்றும் பாக்டீரியாக்களை நீக்குங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது ஏசி பில்டரை கழற்றி சுத்தம் செய்வதை உறுதி செய்யவும். 

ஏசி அறையில் காற்றோட்டத்தை பராமரிக்க கதவை அடிக்கடி திறந்து வைக்கவும். இயற்கை காற்று வரும்போது ஏசி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசி அமைப்புகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சார செலவு குறைத்து, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளலாம். 

நீண்ட காலம் ஏசி அறையில் தூங்குவதால் உடல்நல, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான வழிகளைப் பின்பற்றினால் இந்த பாதிப்புகளை குறைக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com