ருத்ராட்சத்தின் இந்த பலன்களை அறிந்திருக்கிறீர்களா?

Do you know these benefits of Rudraksha?
Do you know these benefits of Rudraksha?https://herb-tips.indiaclicks.co

முனிவர்களால் மிகவும் ரகசிய மந்திரப் பொருளாகக் கருதப்பட்டு வந்தது ருத்ராட்சம். வெள்ளை, கருப்பு, தேன் காவிச் சிவப்பு போன்ற நிறங்களில் ருத்ராட்சம் கிடைக்கின்றன. ருத்ராட்சத்தில் மொத்தம் 39 வகைகள் உள்ளன. ஆனால், 21 வகைகள்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ருத்ராட்சத்தை பஞ்சாக்ஷரம், திரியம்பகம் மந்திரம் சொல்லி பால், தேன் முதலிய பஞ்சகவ்யங்களால் சுத்தம் செய்து, புண்ணிய தீர்த்தங்களாலும் சிவலிங்க அபிஷேக தீர்த்தங்களிலும் சுத்தி செய்து அணிய வேண்டும். ருத்ராட்சத்தை கைகள், காது மற்றும் கைகளில் அணியலாம். ஒன்பது முக ருத்ராட்சத்தை வலது மணிக்கட்டில் அணிந்தால் சரீரத்தில் ஓடும் நரம்புகளின் திரிகோண தோஷத்தை நிவர்த்திக்கும்.

ருத்ராட்சத்திற்கு பலவித முகங்கள் உண்டு. அதனுடைய முகங்களுக்கு தக்கபடிதான் அவை தரும் பலன்களும் அமைகின்றன.

ருத்ராட்சத்தை தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான். காதுகளில் அணிபவன் 10 கோடி புண்ணியங்களைப் பெறுகிறான். கழுத்தில் அணிபவன் 100 கோடி புண்ணியங்களைப் பெறுகிறான். கைகளில் அணிபவன் லட்சம் கோடி புண்ணியத்தைப் பெறுவதாக ஐதீகம்.

ஒருமுக ருத்ராட்சம் மிகவும் அரியதாகும். அபூர்வ ஆற்றல் கொண்ட இந்த ருத்ராட்சத்தை பலர் தங்களது குடும்ப சொத்தாக பாவித்து வருகின்றனர்.

இருமுக ருத்ராட்சம் மந்திர, தந்திர ஆற்றலைக் கொண்டது. மனதைக் கட்டுப்படுத்த உதவக்கூடியது.

மூன்று முக ருத்ராட்சம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரக்கூடியது. ஆஸ்துமா, மலேரியா, இருதயம், கண் நோய்களைப் போக்க வல்லது.

நான்கு முக ருத்ராட்சம் காதலில் வெற்றியை உண்டாக்கும். அறிவை வளர்க்கும். சரும நோய்களைப் போக்கும்.

ஐந்து முக ருத்ராட்சம் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இது மன அமைதியை தரும். இருதய நோய், இரத்தக் கொதிப்பை தடுக்கும்.

ஆறுமுக ருத்ராட்சம் வியாபாரத்தில் வெற்றியை ஏற்படுத்தித் தரும். நினைவாற்றலை வளர்க்கும், நெஞ்சு வலியைப் போக்கும்.

ஏழு முக ருத்ராட்சம் மனித ஆற்றலை வளர்க்கும். எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்.

எட்டு முக ருத்ராட்சம் வேலைத் தடைகளை நீக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.

நவ முக ருத்ராட்சம் எதிரிகளை தோல்வியடையச் செய்யும். எளிதில் வெற்றி கிடைக்கும்.

தச முக ருத்ராட்சம் ஆன்ம சக்தியை வளர்க்கும். கணவன், மனைவி பிணக்கு நீக்கும். இருமல், மனபாரம் ஆகியவற்றைப் போக்கும்.

வயிற்றுக் கோளாறுகளுக்கு ருத்ராட்சத்தை இரவில் தண்ணீரில் ஊற போட்டு காலையில் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க நிவாரணம் கிடைக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் ருத்ராட்சத்தை எண்ணெயில் 21 நாட்கள் ஊறவைத்து அந்த எண்ணையை மூட்டுகளில் தேய்த்தால் பூரண நலம் பெறலாம்.

தூக்கம் இல்லாதவர்கள் இதை தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்தால் நிம்மதியாக உறக்கத்தைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு ஜில்லுனு தண்ணீர் குடித்தால் வரும் ஐந்து பிரச்னைகள்!
Do you know these benefits of Rudraksha?

ருத்ராட்சம் நேபாளத்திலிருந்து கிடைக்குமானால் மிகவும் நல்லதாகவும் உண்மையானதாக இருக்கும். இவற்றை 108, 54, 36, 27, 18 என்ற எண்ணிக்கையில் அணியலாம். ஒற்றை ருத்ராட்சமாக அணிவதும் சிறப்புதான். மாதம் ஒரு முறை சந்தன எண்ணையில் இதை துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ருத்ராட்சம் அணிந்தவர்களை எந்த வகையிலும் வெல்ல முடியாது என்கிறது சிவபுராணம்.

உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், மூட்டு வலி, சுவாசக் கோளாறு, நீரிழிவு, தூக்கமின்மை, ஜீரணமின்மை, முடக்கு வாதம், பித்தம், கபம், இருதய நோய்கள், மாதவிடாய் கோளாறு என பல நோய்களை குணமாக்கும் மகத்துவத்தைக் கொண்டது ருத்ராட்சம். ருத்ராட்சத்தின் மகிமையை அறிந்து அதை அணிந்து பலன் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com