கனவுகள் குறித்து தேவகுருவாகிய வியாழ பகவான் கூறுவது என்ன தெரியுமா?

கனவு பலன்கள்
கனவு பலன்கள்https://ibctamilnadu.com
Published on

னவுகளின் பலாபலன்களை குறித்து தேவகுருவாகிய வியாழ பகவானால் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், சூரிய உதயத்தில் கண்ட கனவு அன்றைக்கே பலிக்கும் என்பதுதான். பகலில் காணும் கனவிற்கு பலன் கிடையாது. மூன்று ஜாமம் வரை காணும் கனவுகள் நாள்பட்டு பலிக்கும் தன்மை உடையது. நான்காவது ஜாமம் என்று சொல்லக்கூடிய, இரவு 1.12 முதல் 3.36 வரை உள்ள நேரத்தில் கனவு கண்டால் ஒரு மாதத்தில் பலிக்கும் என்று கூறுகிறார். கனவுகள் சிலருக்கு அதிக பித்த நோயாலும், அஜீரண பலகீனம் நேருதலாலும் வருவது உண்டு. அவை அதிகம் பலிக்காது. ஆயினும், சில கனவுகள் பலிக்கும். கனவுகள் குறித்த தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்!

பூமி சம்பந்தமான கனவுகள்: தனக்கு பிறர் பூமிதானம் செய்வது போல் கனவு கண்டால் திருமணம் நடக்கும். ஏற்கெனவே திருமணம் ஆனவன் அவ்வாறு கண்டால் மனைவி வழியாய் செல்வம் உண்டாகும். தனது நிலத்திற்கு எல்லை இல்லாதிருக்கக் கனவு கண்டால் சந்தோஷமும் தன லாபமும் உண்டாகும். தனது நிலம் செம்மையாய் விளையக் கனவு கண்டால் நிறைந்த செல்வம் உண்டாகும். தான் ஏர் உழுமாறு கனவு கண்டால் கெளரவம் உயரும்.

சுடுகாட்டை கனவில் கண்டால் குடும்பத்தில் அபிவிருத்தி ஏற்படும். வீடு கட்ட கனவு கண்டால் காரிய ஸித்தி உண்டாகும். வீடுகளுக்கு இடையில் உலாவ கனவு கண்டால் தூர தேசப் பிரயாணம் ஏற்படும்.

சுவர், மேடை, உயர்ந்த இடம், வீடு இவற்றின் மீது ஏறுவது போல் கனவு கண்டால் உத்தியோக விருத்தி உண்டாகும். இதை பிறர் ஏறக்  கண்டால் சந்தோஷ செய்தி வரும். மரத்தில் ஏறக் கனவு கண்டால் விருது கிடைக்கும்.

நீர் சம்பந்தமான கனவுகள்: குளிர்ந்த நீர் பருகக் கனவு கண்டால் உடல் நலம் ஏற்படும். ஒருவர் நீர்ப்பருக பாத்திரத்துடன் நீர் தரக் கனவு கண்டால் சந்தான பிராப்தி உண்டாகும். கடலைக் கடந்து போகக் கனவு கண்டால் உத்தியோக லாபம் உண்டாகும். கப்பலில் ஏறுவது போல் கனவு கண்டால் பிரயாணம் உண்டாகும். தடாகம், நதி, ஏரியை கனவு கண்டால் எண்ணிய காரியம் முடியும். தடாகத்து அருகில் இருந்து கொண்டு தாமரை இலையில் போஜனம் செய்யக் கனவு கண்டால் ராஜ்ய பரிபாலனம் உண்டாகும்.

வெள்ளத்தை நிதானித்துக் கனவு கண்டால் எண்ணாமலே தனம் கிடைக்கும். நீர் மேல் மிதந்து கொண்டு போவது போல கனவு கண்டால் சுக ஜீவனம் உண்டாகும்.  தெப்பல், படகு முதலியவற்றின் மீது போவது போல் கனவு கண்டால் எண்ணிய காரியம் முடியும். ஒரு நதி தனது வீட்டிற்கு முன் பிரவகிக்கக் கண்டால் உத்தியோகம் கிடைக்கும். உலகப் புகழ் உண்டாகும். நீரில் உலாவுகையில் காலில் பாசிகள் சுற்றக் கனவு கண்டால் தனம் கிடைக்கும். தான் கிணறு தோண்டக் கனவு கண்டால் தன லாபம் உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
பூண்டு தரும் 10 வித ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்!
கனவு பலன்கள்

அக்னி சம்பந்தப்பட்ட கனவுகள்: தான் கப்பலில் இருக்க, நெடுந்தொலைவில் தீபம் இருப்பதாகக் கனவு கண்டால் கஷ்டம் இல்லாமல் தனது காலம் கழியும். தீபத்தைத் தவிர, வேறு ஒளியை மிகவும் பிரகாசிக்கக் கனவு கண்டால் வம்ச விருத்தி ஏற்படும். ஒரு சபையில் தான் தீபத்துடன் செல்லக் கனவு கண்டால் புகழ் உண்டாகும். வீடு புகையின்றி எரியக் கண்டால் பெருத்த லாபம் ஏற்படும். தான் காற்றாடி விடக் கனவு கண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும். மழை இல்லாமல் இடி, மின்னல் கனவு கண்டால் வர்த்தகம் பலிக்கும் .

புத்திர பாக்கியம் உண்டாக்கும் கனவுகள்: பெண்கள் சூரிய அஸ்தமன கனவு கண்டால் பெண் குழந்தை பெறுவர். சந்திரன் மனித முகம் போல் பிரகாசிக்கக் கனவு கண்டால் புத்திர உற்பத்தி தனலாபம் ஏற்படும். பூரண சந்திரனை கனவு கண்டால் சந்தான உற்பத்தி உண்டாகும். திருமணமான பெண்கள் தேவ மாதர்களைக் கனவில் கண்டால் சம்பத்து உண்டாகும். எறும்புகள் சாரையிட்டு ஓடுவதாகக் கனவு கண்டால் பிரயாணம், புத்திர விருத்தி, சுகஜீவனம், வியாபார விருத்தி உண்டாகும் .

கூழ் அருந்துவது போல் கனவு கண்டால் புத்திர விருத்தி ஏற்படும். வெண்ணெயை கனவில் கண்டால் உத்தியோக லாபம் உண்டாகும். பாயசத்தைக் கனவில் கண்டால் லாபம் உண்டாகும்.  பால், பால் பாத்திரம், தயிரை கனவில் கண்டால் நன்மை ஏற்படும். தான் குப்பை மீது நிற்கக் கனவு கண்டால் காரிய, புத்திர, தனவிருத்தி ஆகும். கல்யாணத்திற்கு தான் உதவி செய்வது போல் கனவு கண்டால் வெற்றி, சுபம் உண்டாகும். சொர்க்கத்தை கனவில் கண்டால் கௌரவமும் பண வரவும் உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com