உங்க பர்ஸுல பணம் தங்கலையா? இந்த 5 செடியை வீட்டுல வெச்சுப் பாருங்க, அப்புறம் தெரியும்!

Plants
Plants
Published on

நம்ம முன்னோர்கள், இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாங்க. செடி, கொடிகளை வெறும் அழகா மட்டும் பார்க்காம, அதுல ஒரு தெய்வீக சக்தியும், நேர்மறை ஆற்றலும் இருக்குன்னு நம்பினாங்க. அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில, சில குறிப்பிட்ட செடிகளை வீட்ல வளர்த்தா, செல்வம் பெருகும், குல தெய்வத்தோட அருள் கிடைக்கும்னு சொல்லப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட 5 முக்கியமான செடிகள் என்னென்னன்னு வாங்க பார்க்கலாம்.

1. மஞ்சள் செடி

மஞ்சள் இல்லாத மங்களகரமான காரியமே நம்ம ஊர்ல கிடையாது. மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதா மஞ்சள் பார்க்கப்படுது. ஒரு சின்ன தொட்டியில மஞ்சள் செடியை வீட்டு வாசல்லயோ, பால்கனியிலயோ வெச்சு வளர்த்துப் பாருங்க. அந்த செடி வளர வளர, உங்க வீட்ல மங்களகரமான விஷயங்கள் நடக்கும். 

2. துளசி

துளசியை ஒரு செடியா பார்க்கிறதை விட, "துளசி மாதா"ன்னு தெய்வமாவே நம்ம மக்கள் கும்பிடுறாங்க. துளசி மாடம் இல்லாத பழைய வீடுகளையே பார்க்க முடியாது. பெருமாளுக்கு உகந்த இந்த துளசிச் செடி இருக்கிற வீட்ல, எந்தவிதமான தீய சக்திகளும் அண்டாது. அது காத்துல பரப்புற மூலிகை மணம், நம்ம ஆரோக்கியத்துக்கு மட்டும் நல்லது இல்லை, வீட்டுச் சூழலையே ஒரு கோயில் மாதிரி மாத்திடும். 

3. பணச்செடி (Money Plant)

பேர்லயே பணத்தை வெச்சிருக்கிற இந்தச் செடி, வாஸ்து ரீதியா ரொம்ப முக்கியமானது. இதை சரியான திசையில, அதாவது வீட்டின் தென்கிழக்கு மூலையில வெச்சு வளர்த்தா, பண வரவு அதிகமாகும், பணத்தடை நீங்கும்னு சொல்லப்படுது. இந்தச் செடியோட இலைகள் எவ்வளவு பசுமையா, அடர்த்தியா வளருதோ, அந்த அளவுக்கு நம்ம வீட்டுல செல்வமும் பெருகும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. 

இதையும் படியுங்கள்:
பாம்பு விஷத்தை நொடியில் முறிக்கும் ஒரே செடி... 90% பேருக்கு இது தெரியாது..!
Plants

4. மல்லிகைச் செடி

மல்லிகைப் பூவோட வாசனைக்கு மயங்காதவங்களே இருக்க முடியாது. அந்த தெய்வீகமான நறுமணம், நம்ம மனசுக்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். ஒரு வீட்ல நல்ல நறுமணம் இருந்தாலே, அங்க நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். தெய்வ கடாட்சம் நிறைந்த இடங்கள்லதான் நல்ல வாசம் இருக்கும்னு சொல்லுவாங்க. உங்க வீட்டு வாசல்ல ஒரு மல்லிகைப் பந்தல் அமைச்சோ, இல்லை ஒரு தொட்டியிலயோ மல்லிகைச் செடியை வளர்த்தா, அந்த நறுமணம் உங்க வீட்டுக்கு தெய்வ சக்திகளை ஈர்க்கும். 

5. வெற்றிலைக் கொடி

பூஜைல இருந்து கல்யாணம் வரைக்கும், எல்லா சுப காரியங்களுக்கும் வெற்றிலைக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. வெற்றிலையும், பாக்கும் சேர்த்து இறைவனுக்குப் படைக்கும்போது, அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட மங்களகரமான வெற்றிலைக் கொடியை உங்க வீட்ல படர விட்டா, வீட்ல எப்பவும் சுப நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது. 

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள் செடி வச்சிருக்கீங்களா? நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!
Plants

இந்தச் செடிகளை எல்லாம் வீட்ல வெச்சுட்டா மட்டும் பணம் கொட்டும்னு அர்த்தம் இல்லை. நம்ம உழைப்பையும், முயற்சியையும் முழுசா போட்டு, அதோட சேர்த்து இந்த மாதிரி இயற்கையான நேர்மறை ஆற்றல்களையும் நம்பும்போது, நமக்கான வெற்றி நிச்சயம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com