உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கும் டச்சு பெற்றோர்களின் செயல்முறைகள்!

Dutch parents with their children
Dutch parents with their children
Published on

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. அதுவும் அவர்களை மகிழ்ச்சியாக வளர்ப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கும் டச்சு பெற்றோர்களின் செயல்முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வெளியில் விளையாட அனுமதி: குழந்தை வயது முதலே டச்சுக் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் விளையாட்டு பூங்காக்களில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, காடுகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதால் அவர்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் அடைந்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சுதந்திரத்தை வளர்த்தல்: குழந்தையாக இருக்கும்பொழுதே தங்களின் வேலைகளைச் செய்து கொள்ள அனுமதிப்பது, அவர்களின் முடிவுகளை அவர்களே எடுக்க அவர்களது பெற்றோர்கள் அனுமதிப்பதால் குழந்தைகளுக்கு சுதந்திரமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மண வாழ்க்கை மகிழ்ச்சியாக பின்பற்ற வேண்டிய 10 முக்கிய விதிகள்!
Dutch parents with their children

சமமான வாழ்க்கை முறை: டச்சுக் குழந்தைகளுக்கு பள்ளி, விளையாட்டு மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்றவற்றை சம அளவில் பகிர்ந்து அளிப்பதோடு, ஓய்வெடுப்பதற்கும் பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

திறந்த உரையாடல்: குழந்தைகளின் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்த டச்சு பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எதையும் மறைக்காமல் கூறுவதோடு திறம்பட சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

கலாசாரம்: டச்சு குழந்தைகளுக்கு பல்வேறு கலாசாரங்களை, பல்வேறு மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதால் குழந்தைகள் அனுபவம் மிக்கவர்களாகவும் சகிப்புத்தன்மை நிறைந்தவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது: குடும்பத்துடன் ஒன்றாக உணவு உண்பது, வார இறுதி நாட்களில் ஒன்றாக வெளியே சென்று பொழுதுபோக்குவது போன்றவற்றை பெற்றோர்கள் செய்வதால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வு மற்றும் பிணைப்பு ஏற்பட்டு மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
துணிகளில் படியும் மஞ்சள் கறை நீங்க சிம்பிள் டிப்ஸ்!
Dutch parents with their children

கல்வி: பள்ளிப் பாடத்தில் முன்னேறுவதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வங்களை வளர்த்தெடுக்கவும்,கிரிட்டிகல் சிந்தனையை வளர்க்கவும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதால் குழந்தைகள் நிறைவான வாழ்வு வாழ்கிறார்கள்.

பணி - வாழ்க்கை சமநிலை: வாழ்க்கை மற்றும் பணி இரண்டையும் சமமாகப் பிரித்து பெற்றோர்கள் டச்சு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதால் பல மணி நேரம் வேலை செய்தாலும் அவர்கள் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழ்கின்றனர்.

குறைந்தபட்ச வாழ்வு: குறைந்தபட்ச வாழ்வியல் முறையை வாழ நினைக்கும் டச்சு பெற்றோர்கள் பொருட்களை உடைமையாக்கி கொள்வதை விட, அனுபவங்களை பெற நினைப்பதால் குழந்தைகளை சிறிய விஷயத்தில் கூட மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.

கிரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கிறார்கள்: டச்சு பெற்றோர்கள் குழந்தைகளின் கலை கண்டுபிடிப்புகள், தயாரிப்புகள் என குழந்தைகளின் கற்பனைத் திறனை ஊக்குவிப்பதால் அவர்கள் பெருமளவு மகிழ்ச்சி அடைகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பேரன், பேத்தி திருமணத்தில் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம்!
Dutch parents with their children

உணர்வு நுண்ணறிவு: குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை இனம் கண்டு அதைக் கையாள பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதால் குழந்தைகள் நிம்மதி அடைகின்றனர்.

தோல்வியை தழுவ அனுமதிக்கிறார்கள்: தோல்விகளே வளர்ச்சிக்கான வாய்ப்பு என குழந்தைகளை ஊக்கப்படுத்துவதால் அவர்களின் விடா முயற்சி, நேர்மறை எண்ணங்கள், சவால்களை சந்திக்கும் திறன் அதிகரித்து வலிமையடைகின்றனர்.

விளையாட்டு நேரம்: குழந்தைகளை டச்சு பெற்றோர்கள் நாள் முழுவதும் விளையாட அனுமதிப்பதால் அவர்களின் கற்பனைத் திறன் வளர்ந்து பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவைப்படாமல் வளர்ந்து விடுகிறார்கள்.

இயற்கை பாதுகாப்பு: குழந்தைகளுக்கு இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமை எனக் கூறும் பெற்றோர்கள், இயற்கையின் மீதான ஆர்வத்தைத் தூண்டி விடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

டச்சு பெற்றோர்கள் மேற்கண்ட செயல்களைச் செய்வதால் அவர்களது குழந்தைகள் தனித்திறமையாகவும் மகிழ்ச்சியுடனும் வளர்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com