அனுசரிப்பின் அவசியம் நல்வாழ்வின் ரகசியம்!

குடும்பத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனுசரித்து செல்லுதல் அறிவு பூர்வமானது.
family relationship
family relationshipimg credit - dailyexcelsior.com
Updated on

அனுசரித்தல் என்பது குறிப்பிட்ட விதிமுறைகள், சட்டங்கள், நெறிமுறைகள், மரபுகள், அல்லது உத்தரவுகளை பின்பற்றும் செயலாகும். இது தனிநபர் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர், ஒரு குழு, சமூக அமைப்பு, நிறுவனங்கள், அரசாங்கம் போன்ற அனைத்திற்கும் பொருந்தும்.

அனுசரித்தலில் உள்ள வகைகள்

சட்டபூர்வமான அனுசரித்தல் – அரசின் விதிகளை, சட்டங்களை பின்பற்றுவது (எ.கா., வரி செலுத்துதல்).

நெறிமுறை அனுசரித்தல் – நிறுவனங்களின் விதிகள், வேலை சம்பந்தப்பட்ட ஒழுங்குகள் (எ.கா., பணி நெறிமுறைகளை பின்பற்றுதல்).

சமூக மற்றும் பண்பாட்டு அனுசரித்தல் – சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் நெறிகளை மதித்து நடப்பது (எ.கா., மரபுகளை பின்பற்றுதல்).

தன்னாட்சி அனுசரித்தல் – நம்முடைய நன்னடத்தை மற்றும் வாழ்வியல் ஒழுங்குகளை பின்பற்றுவது (எ.கா., ஆரோக்கியமான உணவுக் பழக்கங்கள்).

உதாரணமாக மாணவர்கள் பள்ளியின் விதிமுறைகளை அனுசரிக்க வேண்டும். ஒரு நிறுவனம் தொழில் சட்டங்களை பின்பற்ற வேண்டும். சமுதாய ஒற்றுமைக்காக மரபுகளையும் ஒழுங்குகளையும் மதிக்க வேண்டும். சாலையில் போக்குவரத்து விதிகளை கைக்கொள்ள வேண்டும்.

அனுசரித்தலின் முக்கியத்துவம்

சமூகத்திலும், வேலைத் தளத்திலும் ஒழுங்கு மற்றும் ஒற்றுமை ஏற்பட அனுசரித்தல் அவசியம். போக்குவரத்து விதிகள் போன்றவை அனுசரிக்கப்பட்டால் விபத்துக்கள் குறையும். ஒவ்வொருவரும் நெறிமுறைகளை பின்பற்றினால் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படும். ஒழுங்கை மதிக்கவும், ஒத்துழைக்கவும் இயலும் சூழல் உருவாகும். சட்டங்களை மதித்து நடக்கும் போது தண்டனைகளை தவிர்க்கலாம்.

குடும்ப அனுசரிப்பு

குடும்பத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனுசரித்து செல்லுதல் அறிவு பூர்வமானது. குடும்பத்தில் உள்ள நபர் என்று கூறும் போது குழந்தைகளை அனுசரித்தல், பெற்றோர்களை அனுசரித்தல், நோயாளிகளை அனுசரித்தல், கணவன் மனைவியர் ஒருவருக் கொருவர் அனுசரித்தல் என்பது முக்கியமானது. தன்னோடு சேர்ந்தவர்களின் நிலைமைகளையும், அவர்களின் வேலைகளையும் அனுசரித்து செல்லுதலாகும்.

இதையும் படியுங்கள்:
நல்ல மனிதனுடன் உண்டான உறவு எப்படிப்பட்டது தெரியுமா?
family relationship

ஒருவர் எவ்வளவு மென்மையாக, திறமையாக, மரியாதையாக, கண்ணியமாக, கம்பீரமாக, இருந்தாலும் விதி என்பது மழையாக வந்து விட்டால் அதிலே அவர் விழுந்து விட்டால் சாதாரண மனிதன் தூக்கிவிடும் போது அனுசரிப்பு தேவைப்படுகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து போவதினால் தனிமை, வீரம், சிக்கனம், நேரம், உழைப்பு ஆகியவை கிடைக்கிறது.

குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டியவர்கள் கிண்டல் செய்தால் அன்பு என்பதற்கு இடமில்லை. குடும்பத்தில் ஒரு நபர் வெளியேற துடிக்கும் போது பிடித்து நிறுத்த முயலுவதும் அனுசரிப்பாகும். மக்கள் ஒருவர் நிலைமையோடு பிறர் நிலைமைகளையும் நினைத்து பார்க்க வேண்டும். வயதான பெற்றோர்களின் மனநிலை மற்றும் அவர்களது நியாபகசக்தி இதனையும் அனுசரித்து செல்ல குழந்தைகள் கடமைப்பட்டுள்ளார்கள்.

வாழ்வில் அனுசரித்து செல்லுதலில், அதற்கான எதிர்பார்ப்பில், ஏமாற்றம் வரலாம். பணத்துக்கு தக்கதல்ல வாழ்க்கை, அறிவுக்கு தக்கப்படி, கற்பனைக்கு தக்கப்படி, போராட்டத்துக்கு தக்கபடி வாழ்க்கை என்பது உறுதி. இங்கே அனுசரிப்பு சுயநலத்துக்காகவும், பொதுநலத்துக்காகவும் இருக்கலாம்.

அனுசரித்தல் என்பது கட்டாயமாக ஏற்க வேண்டிய ஒரு கட்டுப்பாடாக மட்டுமல்ல, அது ஒழுங்கு, நன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உருவாக்க உதவும் ஒரு நல்ல பழக்கமாகவும் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் இல்லம் அழகு பெற...
family relationship
logo
Kalki Online
kalkionline.com