குழந்தையின் கோபத்தை சமாளிப்பது எப்படி? பெற்றோர்களுக்கான சூப்பர் டிப்ஸ்!

baby and mom sitting on floor
Child tantrum
Published on

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் சந்திக்கும் ஒரு பெரிய சவால், தங்கள் குழந்தைகள் திடீரென கோபப்பட்டு, தரையில் படுத்து உருண்டு, கத்தி அழும்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்பதுதான். இந்தக் கட்டுரையில், உங்கள் குழந்தையின் கோபத்தைக் கையாள்வதற்கான சில பயனுள்ள மற்றும் நடைமுறைக்கு உகந்த குறிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

கோபத் தாண்டவத்தின் பின்னணி

குழந்தைகளின் கோபம் என்பது பெரும்பாலும் அவர்கள் தங்கள் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாததன் விளைவாகும். பெரியவர்கள் போல தங்கள் உணர்ச்சிகளைப் சொல்லும் திறன் குழந்தைகளுக்கு இருப்பதில்லை.

பசி, தூக்கமின்மை, சோர்வு, அதிருப்தி, ஏமாற்றம் அல்லது கவனத்தை ஈர்க்கும் விருப்பம் போன்ற பல காரணங்களால் இந்தக் கோபம் ஏற்படலாம். சில சமயங்களில், ஒரு பொருளைப் பெற முடியாமல் போவதாலும் அல்லது ஒரு செயலைச் செய்ய முடியாமல் போவது போன்ற விஷயங்களும் கோபத்தைத் தூண்டும்.

little girl anger for game
little girl

பெற்றோர்களுக்கான டிப்ஸ்

1. பொறுமை காக்கவும், பதற வேண்டாம்:

உங்கள் குழந்தை கோபப்படும்போது, நீங்கள் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் பதட்டப்பட்டால், அது குழந்தையின் கோபத்தை மேலும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது, சூழ்நிலையை கட்டுப்படுத்த உதவும்.

2. திசை திருப்பவும்:

குழந்தையின் கவனத்தை வேறு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தின் பக்கம் திருப்புவது ஒரு சிறந்த வழி. அவர்களுக்குப் பிடித்தமான பொம்மையைக் காட்டலாம், ஒரு பாடலைப் பாடலாம், ஒரு வேடிக்கையான கதையைச் சொல்லலாம் அல்லது ஒரு புதிய விளையாட்டைப் பற்றி பேசலாம். இது குழந்தையின் கோபத்திலிருந்து கவனத்தை மாற்றி, வேறு ஒரு மகிழ்ச்சியான மனநிலைக்கு அவர்களை மாற்றும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைக்கு தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் சூப்பர் மாம் ஆகுங்கள்.
baby and mom sitting on floor

3. விருப்பத் தேர்வுகளைக் கொடுக்கவும்:

சில சமயங்களில், குழந்தைகளுக்குத் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக உணரும்போது கோபம் வரலாம். அவர்களுக்குச் சில எளிய விருப்பத் தேர்வுகளைக் கொடுங்கள்.

எடுத்துக்காட்டாக, "இன்று உனக்கு ரெட் ஷர்ட் வேண்டுமா அல்லது ப்ளூ ஷர்ட் வேண்டுமா?", "நீ ஆரஞ்சு பழம் சாப்பிடுகிறாயா அல்லது ஆப்பிள் பழம் சாப்பிடுகிறாயா?" என்று கேட்கலாம். இது குழந்தைகளுக்கு தங்கள் மீது ஒருவித கட்டுப்பாடு இருக்கிறது என்ற உணர்வைக் கொடுத்து, அவர்களின் கோபத்தைக் குறைக்கும்.

4. நேர்மறைப் பாராட்டுகளை அளியுங்கள்:

குழந்தைகள் நல்ல நடத்தையில் இருக்கும்போது அவர்களைப் பாராட்டுங்கள். "நீ மிகவும் அமைதியாக இருக்கிறாய், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது," அல்லது "நீ எவ்வளவு நல்ல குழந்தை, நீ அமைதியாக விளையாடுவது எனக்குப் பிடிக்கும்" போன்ற நேர்மறைப் பாராட்டுக்கள் நல்ல நடத்தையை ஊக்குவிக்கும். நேர்மறை பாராட்டுகள், குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து, நல்ல பழக்கங்களை உறுதிப்படுத்தும்.

5. சொல்லிக் கொடுங்கள், தண்டிக்க வேண்டாம்:

கோபப்படும்போது குழந்தையைத் தண்டிப்பதற்குப் பதிலாக, சரியான முறையில் தங்கள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று சொல்லிக் கொடுங்கள். "நீ கோபமாக இருந்தால், என்னிடம் வந்து சொல்லலாம்" என்று அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். இது அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தவும் உதவும். தண்டனை பயத்தை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால் அது தீர்வை அளிக்காது.

இதையும் படியுங்கள்:
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!
baby and mom sitting on floor

6. தொழில்நுட்பத்தைப் பயனுள்ள வழியில் பயன்படுத்துங்கள்:

குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த பயன்பாடுகள், கதைகள் மற்றும் பாடல்கள் போன்றவற்றை கோபத்தைக் குறைப்பதற்கும், கவனத்தைத் திசை திருப்புவதற்கும் பயன்படுத்தலாம். திரையில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, குழந்தைகளுடன் நேரடியாக விளையாடுவது மற்றும் பேசுவதே சிறந்த வழி.

உங்கள் குழந்தையின் கோபத்தைக் கையாள்வது ஒரு சவாலான பணியாக இருந்தாலும், சரியான அணுகுமுறை மற்றும் பொறுமையுடன் நீங்கள் இதை சமாளிக்க முடியும். உங்கள் குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் நேரத்தை செலவழித்து, அன்புடன் அவர்களை வழிநடத்துங்கள். உங்கள் குழந்தை விரைவில் இந்த நிலையைத் தாண்டிச் செல்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com