உங்களிடம் இந்த ஒரு பழக்கம் இருந்தால், நீங்கள் ஒரு சிறந்த 'லீடர்' (Leader)! எப்படின்னு தெரியுமா?

Lifestyle articles
Lifestyle articles
Published on

ம்மில் பலர் சாப்பிட்டு முடித்ததும் அப்படியே எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து அலைபேசியைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், ஒரு சிலர் சாப்பிட்டு முடித்த அடுத்த நிமிடம், தங்கள் தட்டையும் கைவசம் இருக்கும் பாத்திரங்களையும் கழுவிச் சுத்தம் செய்துவிடுவார்கள். இது ஒரு சாதாரண வீட்டு வேலை போலத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் ஒரு ஆச்சரியமான உளவியல் ஒளிந்திருக்கிறது. உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி, இத்தகைய நபர்களிடம் மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும், நேர்த்தியான ஆளுமைத் திறனும் இருக்கின்றன.

தள்ளிப்போடும் பழக்கம் இல்லாதவர்கள்:

"நாளை செய்யலாம்", "அப்புறம் பார்த்துக்கலாம்" என்பது இவர்களது அகராதியிலேயே இருக்காது. ஒரு வேலையை முடிக்காமல் இருந்தால், அது மனதின் ஒரு மூலையில் உறுத்திக்கொண்டே இருக்கும் என்பதை இவர்கள் அறிவார்கள். இதனால், ஒரு செயலை உடனே முடித்துவிட்டு அடுத்த வேலையை நிம்மதியாகத் தொடங்குவார்கள். இவர்களின் இந்தச் சுறுசுறுப்பு, அலுவலகப் பணிகளிலும் இவர்களை முன்னணியில் வைக்கும்.

அமைதியான மனநிலை:

அழுக்கு பாத்திரங்கள் சிங்க்கில் குவிந்து கிடப்பதைப் பார்ப்பது, ஆழ்மனதில் ஒருவித எதிர்மறை எண்ணத்தையும் அழுத்தத்தையும் உருவாக்கும். "இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கிறது" என்ற எண்ணமே மன சோர்வைத் தரும். உடனே சுத்தம் செய்பவர்கள், அந்த அழுத்தத்தை வேரோடு கிள்ளி எறிந்துவிட்டு, தங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் லேசாக வைத்திருக்கிறார்கள்.

மற்றவர்களின் நலனில் அக்கறை:

இவர்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பார்கள். தான் கழுவாமல் போடும் தட்டு, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்குச் சுமையாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இந்தத் தன்மை இவர்களை ஒரு சிறந்த நண்பராகவும், நல்ல வாழ்க்கைத்துணையாகவும் மாற்றுகிறது. சுயநலமற்ற இவர்களின் குணம் மற்றவர்களுக்கு இணக்கமான சூழலைத் தரும்.

இதையும் படியுங்கள்:
தலைமுடி உதிர்வு: வெறும் மூடநம்பிக்கையா அல்லது ஆரோக்கிய முறையா?
Lifestyle articles

சிறந்த திட்டமிடல்:

இவர்கள் எதையும் முன்கூட்டியே சிந்திப்பார்கள். "இப்போது தட்டைக் கழுவி வைத்தால்தான், அடுத்த வேளை சமைக்கும்போது சமையலறை சுத்தமாக இருக்கும்" என்று அடுத்தகட்டத்தைப் பற்றி யோசிப்பார்கள். இந்தத் திட்டமிடும் திறன்  இவர்களை ஒரு சிறந்த நிர்வாகியாக மாற்றும். சிறிய வேலைகளில் இவர்கள் காட்டும் இந்தத் திட்டமிடல் பெரிய இலக்குகளை அடையவும் இவர்களுக்கு உதவும்.

எளிமையும், பணிவும்:

எந்த வேலையும் சிறியது கிடையாது என்று நினைப்பார்கள். தங்களை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளாமல், தன் வேலையைத் தானே செய்வதில் பெருமை கொள்வார்கள். இவர்களிடம் ஆடம்பரம் இருக்காது; மாறாக எதார்த்தமான அணுகுமுறை இருக்கும். இந்தப் பணிவுதான் இவர்களைச் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக மாற்றுகிறது.

அதீத கவனத்திறன்:

பாத்திரங்களைக் கழுவுவது ஒரு சாதாரண வேலையாக இருக்கலாம். ஆனால், அதைச் சரியாகச் சுத்தம் செய்வது, தேய்க்கும்போது ஏற்படும் சத்தம், தண்ணீரின் ஓட்டம் என அந்தச் செயலில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இது ஒரு வகை தியானம் போன்றது. இதனால் இவர்களின் கவனிக்கும் திறன் அதிகரித்து, எந்தச் சிக்கலான வேலையையும் கவனச்சிதறல் இல்லாமல் முடிக்கிறார்கள்.

உயர்ந்த பொறுப்புணர்வு:

தங்களுக்குச் சொந்தமான பொருட்களையும், தாங்கள் பயன்படுத்தும் இடத்தையும் சுத்தமாகப் பராமரிப்பது ஒருவரின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. "என் வேலை, என் பொறுப்பு" என்ற கொள்கையில் உறுதியாக இருப்பார்கள். இத்தகைய நபர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால்,  அதை மிகச்சரியாக முடிப்பார்கள் என்ற நம்பிக்கையை மற்றவர்களிடம் ஏற்படுத்துவார்கள்.

இதையும் படியுங்கள்:
கடைக்காரர்கள் சொல்லாத சோபா ரகசியங்கள்... ஏமாறாமல் இருக்க இதை படியுங்கள்!
Lifestyle articles

வியக்கத்தக்க சுயக்கட்டுப்பாடு:

சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்திருக்கும்போது, ஒருவித சோம்பல் ஏற்படுவது இயற்கை. அந்தச் சோம்பலை வென்று, எழுந்து சென்று வேலையை முடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இது அபாரமான சுயக்கட்டுப் பாட்டைக் குறிக்கிறது. வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெற்ற பலரிடம் இருக்கும் பொதுவான பண்பு இந்தச் சுயக்கட்டுப்பாடு தான்.

அடுத்த முறை  பாத்திரங்களைக் கழுவும்போது,  உங்கள் குணத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com