அடுப்பங்கரை ஆபத்துகள்: இந்த 7 பொருட்களை ஒருபோதும் அடுப்புக்கு அருகில் வைக்காதீர்கள்!

Kitchen
Kitchen
Published on

சில சமயங்களில் வசதிக்காக நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் பெரிய ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, சமையல் அடுப்புக்கு அருகில் சில பொருட்களை வைப்பது மிகவும் ஆபத்தானது. இது பொருட்களின் தரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தீ விபத்து போன்ற பெரிய அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில், அடுப்புக்கு அருகில் ஒருபோதும் வைக்கக் கூடாத 7 பொருட்கள் எவை, அவற்றை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று விரிவாகப் பார்ப்போம்.

1. சமையல் எண்ணெய்:
நம்மில் பலர் சமைக்கும்போது எளிதாக எடுக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் பாட்டில்களை அடுப்புக்கு அருகிலேயே வைப்பது வழக்கம். ஆனால், அடுப்பிலிருந்து வரும் தொடர்ச்சியான வெப்பம் எண்ணெயின் தரத்தைக் குறைத்து, அதன் சுவையை மாற்றி, சீக்கிரமே கெட்டுப்போகச் செய்துவிடும். மேலும், எண்ணெய் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், இது ஒரு பெரிய தீ விபத்து அபாயத்தையும் உருவாக்குகிறது. எண்ணெயை எப்போதுமே குளிர்ச்சியான, வெளிச்சம் படாத இடத்தில், அதாவது சமையலறை அலமாரிகளுக்குள் வைப்பதே சிறந்தது.

2. மசாலாப் பொருட்கள்:
கரம் மசாலா முதல் மிளகாய்த் தூள் வரை, மசாலா டப்பாக்களை அடுப்புக்கு அருகில் வைப்பது அவற்றின் மணத்தையும், சுவையையும் வெகுவாகப் பாதிக்கும். அடுப்பிலிருந்து வரும் வெப்பமும், ஈரப்பதமும் மசாலாப் பொருட்கள் கெட்டியாகி, கட்டியாக மாறி, அவற்றின் உண்மையான தன்மையை இழக்கச் செய்துவிடும். இவற்றை ஓர் அலமாரியிலோ அல்லது டிராயரிலோ வைப்பதன் மூலம் அவற்றின் தரத்தை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கலாம்.

3. பேப்பர் டவல் மற்றும் துணி:
காகிதங்கள் மிக எளிதில் தீப்பற்றக்கூடியவை. சமைக்கும்போது ஏற்படும் ஒரு சின்ன தீப்பொறி கூட பேப்பர் டவலில் பட்டு பெரிய தீயாக மாற வாய்ப்புள்ளது. இதேபோல், பாத்திரம் பிடிக்கப் பயன்படுத்தும் துணி அல்லது பிற துண்டுகளையும் அடுப்புக்கு அருகில் தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை டிராயரிலோ அல்லது அடுப்பிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்கும் கொக்கிகளிலோ மாட்டி வைப்பது மிகவும் பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் உண்டாகும் தீமைகள்!
Kitchen

4. பிளாஸ்டிக் மற்றும் மரப் பொருட்கள்:
பிளாஸ்டிக் கரண்டிகள், டப்பாக்கள் போன்றவற்றை அடுப்புக்கு அருகில் வைத்தால், வெப்பத்தால் அவை உருகி, அவற்றிலிருந்து வரும் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்புள்ளது. அதுபோலவே, மரத்தாலான கரண்டிகள், கட்டிங் போர்டுகள் அதிக வெப்பத்தால் விரிசல் விடக்கூடும். இந்த விரிசல்களில் பாக்டீரியாக்கள் எளிதில் வளரும். மரமும் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், இவற்றை அடுப்பிலிருந்து தள்ளி பாதுகாப்பான இடத்தில் வைப்பதே புத்திசாலித்தனம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள்:
மிக்சி, டோஸ்டர், சார்ஜில் இருக்கும் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை அடுப்புக்கு அருகில் வைப்பது மிகவும் தவறு. சமையல் வெப்பம் அவற்றின் பேட்டரி, உள் பாகங்களைச் சேதப்படுத்தக்கூடும். மேலும், சமைக்கும்போது தண்ணீர் அல்லது எண்ணெய் சிதறினால் அவை எளிதில் பழுதடைந்துவிடும். எனவே, இவற்றை உபயோகப்படுத்தாதபோது அடுப்பிலிருந்து தள்ளியே வைக்க வேண்டும்.

6. கத்திகள்:
கத்திகளை அடுப்புக்கு அருகில் உள்ள ஸ்டாண்டில் வைப்பது பாதுகாப்பானது அல்ல, குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் இது ஆபத்தானது. சமைக்கும் அவசரத்தில் கைதவறி கத்தியின் மீது விழுந்தால் காயங்கள் ஏற்படலாம். கத்திகளை எப்போதுமே அதற்கான மர ஸ்டாண்டிலோ, குழந்தைகளுக்கு எட்டாத டிராயருக்குள்ளோ வைப்பதுதான் சரியான மற்றும் பாதுகாப்பான முறை.

இதையும் படியுங்கள்:
பாத்திரம் கழுவும் திரவம் முதல் கை கழுவும் திரவம் வரை எல்லாம் தரமானதா?
Kitchen

7. க்ளீனிங் பொருட்கள்:
பாத்திரம் தேய்க்கும் சோப், கிருமிநாசினி ஸ்ப்ரே போன்ற சுத்தம் செய்யும் பொருட்களை அடுப்புக்கு அருகில் வைக்க வேண்டாம். இவற்றில் சில எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனங்கள் இருக்கலாம். மேலும், சமைக்கும்போது தவறுதலாக இவை உணவில் சிந்திவிட்டால், அது உடல்நலத்திற்குக் கடுமையான கேடு விளைவிக்கும். இவற்றை எப்போதுமே சிங்க்-கிற்கு அடியில் உள்ள அலமாரியில் வைப்பதுதான் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com