கண் திருஷ்டி தோரணத்தின் நிஜமான உளவியல் உண்மை!

Lemon chilli on entrance
Lemon chilli on entrance
Published on

வீட்டு வாசலில் பலர் தோரணம் கட்டிப் பார்த்திருப்பீர்கள். இக்காலத்து ஆட்கள் இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை என்று நினைத்து அலட்சியம் செய்வார்கள். ஆனால், இதற்கு பின்பும் ஒரு அறிவியல் இருக்கிறது என்பது யாருக்கெல்லாம் தெரியும்?

கண் திருஷ்டி கழிப்பதற்காகக் கட்டப்படும் இந்தத் தோரணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் காரணங்களை விரிவாகப் பார்ப்போம்.

கண் திருஷ்டி என்பது ஒருவரின் வெற்றி, மகிழ்ச்சி, அழகு அல்லது செல்வத்தைக் கண்டு மற்றவர்களுக்கு ஏற்படும் பொறாமை கலந்த எதிர்மறை எண்ணங்கள் ஆகும். இந்த எதிர்மறை ஆற்றல் ஒருவரின் முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் வீட்டில் உள்ள நேர்மறை அதிர்வுகளைப் பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தக் கெட்ட சக்திகளைத் தடுத்து, வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதே இந்தத் தோரணத்தின் முக்கியப் பணியாகும். இது தோரணம் கட்டுவதின் பொதுவான கருத்து.

கண் திருஷ்டி தோரணத்தில், பாரம்பரிய மா இலைகளுடன் சேர்த்து, மூன்று முக்கியப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன:

கண் திருஷ்டி தோரணத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் முக்கியத்துவம்:

எலுமிச்சை, தனது கசப்பு மற்றும் புளிப்புத் தன்மையாலும், பிரகாசமான நிறத்தாலும், வீட்டுக்கு வருபவரின் கவனத்தை திசைதிருப்பி கண் திருஷ்டி ஆற்றலை ஈர்த்து உறிஞ்சும் சக்தியைக் கொண்டது என்று நம்பப்படுகிறது.

அடுத்து, பச்சை மிளகாய், அதன் காரமும் உஷ்ணமும் எதிர்மறை சக்திகளை விலக்கி விரட்டும் பண்பைக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்குத் தெரியாமல் உங்கள் வங்கி இருப்பை திருடும் உணர்ச்சிப் பொருளாதாரம்!
Lemon chilli on entrance

ஒருவரது தீய பார்வை, மிளகாயின் காரத்தன்மை காரணமாக மெதுவாகும் என்பதும் நம்பிக்கையாகும்.

மேலும், கரி  அல்லது நிலக்கரி, அதன் கருமை நிறத்தின் காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருமை நிறம், அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் உறிஞ்சி தன்னைத் தக்கவைத்து, வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதன் அறிவியல் உண்மை:

மிளகாய் மற்றும் எலுமிச்சை போன்ற பொருட்களில் இருந்து சில ஆவியாகக் கூடிய கரிமச் சேர்மங்கள் காற்றில் பரவும் என்று சொல்லப்படுகிறது.

எலுமிச்சை: எலுமிச்சையில் உள்ள லிமோனீன் (Limonene) கிருமிகளை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டது. இந்தச் சேர்மங்கள் சுற்றுப்புறக் காற்றைச் சுத்திகரித்து, வீட்டிற்குள் நுழையும்போது ஒருவித புத்துணர்ச்சி உணர்வைக் கொடுக்கலாம்.

மிளகாய்: மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin), அதன் காரத் தன்மைக்குக் காரணமாகும். இதுவும் சில நுண்ணுயிரிகளை விலக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம், அல்லது அதன் காரமான மணம் பூச்சிகளை விலக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஓவர் எக்சைட்மென்ட் வேலைக்கு ஆகாது: காதலில் நீங்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்!
Lemon chilli on entrance

ஈரப்பதம்: இந்தத் தோரணங்கள் விரைவில் வாடிவிடுவதன் மூலம், சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையின் மாற்றங்களை மறைமுகமாகக் குறிக்கலாம்.

உளவியல் விளைவு (Psychological Effect):

பிளாசிபோ விளைவு (Placebo Effect): தோரணம் கட்டப்பட்டிருப்பதால், தீய சக்திகள் அல்லது திருஷ்டி அண்டாது என்று வீட்டு உரிமையாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை அவர்களுக்கு மன அமைதி, நிம்மதி மற்றும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக, அவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தி, வெற்றி அடையும்போது, தோரணம் தான் காரணம் என்று உறுதியாக நம்பத் தொடங்குகின்றனர்.

இப்படி தோரணம் கட்டுவதில் அறிவியல் கலந்த உளவியல் தாக்கங்களும் இருக்கின்றன. ஆகையால், இனி அது வெறும் மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்த வேண்டாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com