உங்களுக்குத் தெரியாமல் உங்கள் வங்கி இருப்பை திருடும் உணர்ச்சிப் பொருளாதாரம்!

Emotional economy that steals savings
Emotional economy that steals savings
Published on

‘உணர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்று தோன்றுகிறதா? உணர்ச்சிகள் மனிதனுக்கு மிகவும் அவசியம். நல்ல உணர்ச்சிகள் ஒருவருக்கு நன்மை செய்யும். அதேநேரம், தீய உணர்ச்சிகள் அவருக்குக் கெடுதல் செய்யும். பொதுவாக, உணர்ச்சிகள் பொருளாதார சம்பந்தமான முடிவுகள் எடுப்பதை பாதிக்கிறது. சரி, உணர்ச்சிப் பொருளாதாரம் (Emotionomics) என்றால் என்னவென்றுதானே தோன்றுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. பொருளாதார முடிவுகள்: நாம் பொருளாதார முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் புள்ளி விவரங்கள் மற்றும் பகுத்தறிவை அடிப்படையாக வைத்து செய்யாமல் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் மகிழ்ச்சியாகவோ அல்லது உற்சாகமாகவோ இருந்தால் ஒரு பொருளை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பயம் அல்லது பதற்றமாக உணர்ந்தால் அந்தப் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஓவர் எக்சைட்மென்ட் வேலைக்கு ஆகாது: காதலில் நீங்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்!
Emotional economy that steals savings

2. பொருளாதார நடத்தை: ஒருவரின் பொருளாதார நடத்தையை கையாள உணர்ச்சிகள் பயன்படலாம். வணிகர்களும் விளம்பரதாரர்களும் மனிதர்களின் உணர்ச்சிகளின் சக்தி பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் அதைப் பயன்படுத்தி மக்களை அவர்களின் தயாரிப்புகளை வாங்க வைக்கிறார்கள். விளம்பரங்கள் நேர்மறையான உணர்ச்சிகளான மகிழ்ச்சி அல்லது உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அதேசமயத்தில், பயம் மற்றும் பதற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளையும் பயன்படுத்தி விளம்பரங்கள் அமைக்கிறார்கள்.

3. பண நஷ்டம்: உணர்ச்சிகள் பகுத்தறிவற்ற பொருளாதார நடத்தைக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில் நாம் மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறோம் என்பதற்காக ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்கி விட நேரிடலாம். பயம் அல்லது கவலை காரணமாக நல்ல முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கலாம். இதனால் இந்த இரண்டு விஷயங்களிலும் நமக்கு பண நஷ்டமே ஏற்படுகிறது.

4. கட்டுப்படுத்த நடவடிக்கை: இதைத் தவிர்க்க முதலில் உணர்ச்சிகள் எவ்வாறு பொருளாதார நடத்தையை பாதிக்கின்றன என்று தெரிந்துகொள்வது முக்கியம். நாம் உணர்ச்சி வயப்படும்போது அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

5. அறிவாற்றல் மதிப்பீடு: அறிவாற்றல் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். இது உணர்வுபூர்வமான மதிப்பீட்டை முறியடித்து அறிவாற்றலுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, ஒரு புதிய தொழிலிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனங்களிலோ முதலீடு செய்வது பற்றி நாம் பயப்படுகிறோம் என்றால் அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முயல வேண்டும். இதனால் பணம் வளரவும் ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மௌனம் காக்க வேண்டிய 9 இடங்கள் பற்றி சாணக்கிய நீதி சொல்வது என்ன?
Emotional economy that steals savings

6. ஒழுங்குமுறை நுட்பங்கள்: சில உணர்ச்சி ஒழுங்குமுறை நுட்பங்களை பயன்படுத்தலாம். அவை ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் போன்ற ரிலாக்ஸிங் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். மெல்லிய அல்லது பிடித்த இசையைக் கேட்பது, புத்தகம் படிப்பது போன்றவை கவனச் சிதறல்களை கட்டுப்படுத்தும் விஷயங்கள் ஆகும்.

7. தனிப்பட்ட நிதி மேலாண்மை: தனிப்பட்ட நிதி மேலாண்மையை ஒருவர் கற்றுக்கொள்ளலாம். தன்னுடைய சம்பாத்தியம் எவ்வளவு, வீட்டு செலவுகளுக்கான பட்ஜெட், சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி அறிந்து கொள்வதன் மூலம் நிதி தேர்வுகளில் கவனமாக இருந்து உணர்ச்சிகளின் தாக்கத்தை குறைக்கலாம். இதனால் பணம் பாதுகாக்கப்படும். பொருளாதாரமும் உயரும்.

இந்த ஏழு முறைகளைப் பயன்படுத்தி ஒருவர் தன்னுடைய உணர்ச்சி பொருளாதாரத்தை சரியாகக் கையாள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com