பப்ளிக் பாத்ரூம் கதவுகளுக்கு கீழே இவ்வளவு பெரிய இடைவெளி விடப்படுவது ஏன்... இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீர்கள்!

public-toilet-doors
public-toilet-doors
Updated on

ஷாப்பிங் மால், தியேட்டர் அல்லது பஸ் ஸ்டாண்ட் என எங்கு சென்றாலும் நாம் கட்டாயம் பயன்படுத்தும் ஒரு இடம் பொது கழிப்பறை. அங்கு சென்றவுடன் நம்மில் பலருக்கும் தோன்றும் ஒரு விஷயம் அந்த கழிப்பறையின் கதவுகள் ஏன் தரையோடு ஒட்டாமல் கீழே இவ்வளவு பெரிய இடைவெளி விடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்பதுதான். 

உள்ளே இருப்பவரின் கால்கள் வெளியே தெரிவது சில நேரங்களில் நமக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக கூட இருக்கும். இப்படி ஒரு விசித்திரமான டிசைனில் கதவுகளை அமைப்பதற்கு பின்னால் பல முக்கியமான காரணங்கள் ஒளிந்துள்ளன. அது என்னவென்று  பார்க்கலாம் வாங்க.

அவசர கால பாதுகாப்பு!

பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் உள்ளே செல்பவர்களுக்கு திடீரென மயக்கம் வரலாம் அல்லது மாரடைப்பு போன்ற மருத்துவ அவசர நிலை கூட ஏற்படலாம். கதவுகள் முழுவதும் மூடப்பட்டிருந்தால் உள்ளே நடக்கும் ஆபத்து வெளியே இருப்பவர்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை. 

கீழே இடைவெளி இருப்பதால், உள்ளே இருப்பவர் மயங்கி விழுந்தால் அவரது கால்களை வைத்து சுலபமாக கண்டுபிடித்து உடனே காப்பாற்றி விடலாம். அதுமட்டுமில்லாமல் உள்ளே லாக் ஏதேனும் பழுதாகி விட்டால் கீழே உள்ள இடைவெளி வழியாக தவழ்ந்து வெளியே வரவும் இது உதவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டை சுத்தம் செய்யறேன்னு இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க, பொருட்கள் நாசமாகிடும்!
public-toilet-doors

சுத்தம் செய்வது மிக எளிது!

பப்ளிக் பாத்ரூம்களை நாள் முழுவதும் சுத்தமாக பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அடிக்கடி தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டியிருக்கும். கதவுகள் தரையோடு ஒட்டி இருந்தால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்றுவிடும். கீழே இடைவெளி விடும்போது, சுத்தம் செய்யும் ஊழியர்கள் எளிதாக மாப் போட்டு துடைக்க முடியும். தண்ணீர் எந்த தடையுமின்றி எளிதாக வெளியேறிவிடும் என்பதால் கழிப்பறை எப்போதும் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும்.

காற்றோட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு!

கழிப்பறை என்றாலே அங்கு கெட்ட துர்நாற்றம் வீசுவது இயல்பு. முற்றிலும் மூடிய அறையாக இருந்தால் அந்த நாற்றம் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே தங்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். கீழே மற்றும் மேலே திறந்தபடி இருப்பதால் நல்ல காற்றோட்டம் கிடைத்து துர்நாற்றம் சீக்கிரம் வெளியேறிவிடும். மேலும், முழுமையான தனிமை கிடைக்காது என்பதால் உள்ளே சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியத் தேர்தல் வரலாறு: தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய சின்னங்கள்!
public-toilet-doors

பயன்பாட்டில் உள்ளதை அறிய!

கதவு முழுவதும் மூடப்பட்டிருந்தால் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள நாம் ஒவ்வொரு முறையும் கதவை தட்டிப் பார்க்க வேண்டும். இது உள்ளே இருப்பவருக்கும் சரி, வெளியே இருப்பவருக்கும் சரி ஒரு அசௌகரியமான நிலையை உருவாக்கும். கீழே இடைவெளி இருப்பதால் உள்ளே இருப்பவரின் கால்களை பார்த்தவுடனேயே அந்த பாத்ரூம் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை நாம் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

இது ஏதோ அரைகுறையாக கட்டப்பட்ட ஒரு டிசைன் கிடையாது. மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் எளிமையான பராமரிப்பு என பல விஷயங்களை மிகவும் புத்திசாலித்தனமாக யோசித்து உருவாக்கப்பட்ட ஒரு அட்டகாசமான ஐடியா.

logo
Kalki Online
kalkionline.com