பணம் சேர வேண்டுமா? இதோ சில நம்பிக்கைகள்... முயற்சித்து பார்க்கலாமே!

money secrets
money secrets
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ல்லோருக்குமே தங்களுடைய வாழ்க்கையில் பற்றாக்குறை இல்லாமல் பணம் வந்து சேர வேண்டும் என்ற ஆசையிருக்கும். அவ்வாறு பணம் நம் வீட்டில் சேர வேண்டும் என்றால், அதற்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அவற்றைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. சம்பளம் வாங்கிய உடனேயே அதை அவசரமாக செலவு செய்யாமல் வருமானத்தில் முதல் செலவாக உப்பு, மல்லிகைப்பூ, இனிப்பு ஆகியவை வாங்க, பணவரவு பலமடங்கு அதிகரிக்குமாம்.

2. தினமும் உங்களுக்கு நடக்க வேண்டும் என்று நினைக்கும் காரியத்தை வேண்டிக் கொண்டு ஒரு நாணயத்தை பூஜையறையில் சேர்த்து வைத்து மாதக்கடைசியில் சேர்ந்த காசை வைத்து பசு மாட்டிற்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க பண வரவு அதிகரிக்குமாம்.

3. வடகிழக்கு மூலையில் நீரை வைத்து அதில் எழுமிச்சைப்பழம் ஒன்றை போட்டு வைக்க வேண்டும். இதை தொடர்ந்து இரண்டு மாதம் செய்துவர பணப்பற்றாக்குறை நீங்கி செல்வம் பெருகுமாம்.

இதையும் படியுங்கள்:
கல் உப்பை பூஜையறையில் வைக்கலாமா?
money secrets

4. பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது தனிதனியாக போட்டு வைக்காமல் எப்போதும் பணத்தை சுருளாக கட்டி வைக்க வேண்டும். இதனால் பணம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பணப்பெட்டியை தென்மேற்கு மூலையில் வைத்து மல்லிகைப்பூ போட்டு வைக்க பணம் அதிகரிக்குமாம். பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது ஆறு வெற்றிலைகளும், மூன்று பாக்கும் சேர்த்து வைக்க பணம் மென்மேலுமே பெருகும் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.

5. இலவங்கப்பட்டையை பொடி செய்து அதை ஒரு பச்சை நிற துணியில் வைத்து பச்சை நிற நூலால் கட்டி நம்முடைய பர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ வைத்துக்கொள்ள பணம் அதிகரிக்குமாம்.

இதையும் படியுங்கள்:
பூஜையறையை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் தெரியுமா?
money secrets

6. நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் இந்த மூன்று பொருட்களும் ஒன்று சேர்ந்தால் அதற்கு மகிமை அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவை பச்சைக்கற்பூரம், ஏலக்காய், சோம்பு இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு சமையலறை மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால் பண வரவு இருக்கும். செல்வம் சேர்ந்து வீட்டில் சுபிக்ஷம் எற்படுவதற்கு இந்த பொருட்கள் உதவும்.

logo
Kalki Online
kalkionline.com