மழை மற்றும் குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்திருக்க சில எளிய வழிகள்!

Some ways to keep your home warm
Some ways to keep your home warm
Published on

வ்வொரு வருடமும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மழையும் குளிரும் அதிகமாகக் காணப்படும். இத்தகைய காலங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வீட்டையும் வெதுவெதுப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் குளிர்ந்த காற்றில் இருந்து விடுபட்டு, வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருக்கும் 5 வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. காற்று வரும் பாதைகளை மூட வேண்டும்: வீட்டை கதகதப்பாக வைத்திருக்க முதலில் காற்று உட்புகும் இடங்களை மூடுவதே சிறந்த வழியாகும். வீட்டில் சிறிய விரிசல் மூலமாக குளிர்ந்த காற்று உள்ளே சென்று கொண்டிருந்தால் அதற்கு அதிக சிரமம் இல்லாமல் விரிசல்களை நிரப்பவும். மேலும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அடியில் உள்ள பகுதிகளை துணி அல்லது கதவு பாய்களால் மூடுவதன் மூலம் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டு வீடு வெதுவெதுப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் உங்க நாய், பூனைகளைத் தாக்கும் அந்த 'கொடூர' எதிரி! உஷாரா இருங்க!
Some ways to keep your home warm

2. தடிமனான திரைச் சீலைகளைப் பயன்படுத்துங்கள்: வீட்டை சூடாக வைத்திருக்க இரவில் தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், பகலில் திரைச்சீலைகளை திறந்து சூரிய ஒளியை உள்ளே அனுமதிப்பதன் மூலம் வீட்டை சிறிது சூடேற்றலாம். இந்த தடிமனான திரைச்சீலைகள் இரவிலும் பகலிலும் வீட்டை வெப்பமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றும்.

3. தரையில் கம்பளம் போட்டுப் பயன்படுத்தவும்: வீட்டை சூடாக வைத்திருக்க தரையை சூடாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதால் தரை மிகவும் குளிராக இருந்தால் பாய் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட்டு ஒரு கம்பளத்தை தரையில் விரிக்கவும். ஏனெனில், பாய் குளிரை வெளியே வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்காது. மேலும், கால்களுக்கு இதமளிக்கும் வகையிலும் வீட்டை சூடாக வைத்திருக்கவும் தடிமனான துணியையும் தேர்வு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தை நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்க காலை நேரத்தில் செய்ய வேண்டிய 9 மேஜிக் விஷயங்கள்!
Some ways to keep your home warm

4. பயன்பாட்டில் இல்லாத அறைகளை மூடி வைக்கவும்: வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அறைகளை மூடி வைப்பதும் வீட்டை கதகதப்பாக வைத்திருக்கும் வழிகளில் ஒன்றாகும். ஏனெனில், அறை திறந்து இருந்தால் குளிர் காற்று வீட்டிற்குள் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, வீட்டிற்குள் இருக்கும் விருந்தினர் அறைகள், ஸ்டோர் ரூம்கள் போன்றவற்றை மூடி வைக்கவும்.

5. அறைக்கு சூடான ஒளியை சேர்க்கவும்: சிவப்பு, ஆரஞ்சு, மற்றும் மஞ்சள் விளக்கு வெளிச்சங்கள் அறையை கணிசமாக வெப்பமாக்கும் என்பதால் இத்தகைய வண்ண விளக்குகளை வீட்டில் பயன்படுத்தலாம். மேலும், வீட்டில் சில மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதன் மூலமும் வீட்டை சூடாக வைத்திருக்க முடியும்.

மேற்கூறிய வழிமுறைகளை வீட்டில் கையாள்வதன் மூலமாக வீட்டை கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்பதை அறிந்து பயன்பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com