தூங்கி எழுந்தவுடனே மொபைல் ஃபோன் எடுக்க கை போகுதா? போச்சு! 

Smartphone
Smartphone
Published on

இன்றைய காலத்தில் காலையில் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை, பெரும்பாலானோர் தங்கள் மொபைல் போன்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். குறிப்பாக, தூங்கி எழுந்தவுடன் முதலில் மொபைல் போனைப் பார்க்கும் பழக்கம் பலரிடையே பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு சாதாரண பழக்கம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தின் ஆபத்தான விளைவுகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றனர்.

இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, "நோமோபோபியா" (NoMoPhobia) எனப்படும் ஒரு நிலைக்கு இது வழிவகுக்கும். நோமோபோபியா என்பது மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாத ஒரு நிலையாகும்.

தூங்கி எழுந்தவுடன் போன் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்:

  • காலையில் எழுந்தவுடன் சமூக வலைத்தள நோட்டிபிகேஷன்களைப் பார்ப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும். இது கார்டிசோல் ஹார்மோன் அளவை உயர்த்தி, இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

  • ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது. இதனால் தூக்கச் சுழற்சி பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை மற்றும் பகல் நேர சோர்வு ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!
Smartphone
  • காலையில் மொபைல் பார்ப்பதால், தியானம், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான செயல்களில் ஈடுபட நேரம் இல்லாமல் போகிறது. இது நாள் முழுவதும் கவனச்சிதறலை ஏற்படுத்தி, உற்பத்தித் திறனைப் பாதிக்கும்.

  • எப்போதும் மொபைலுடன் இருப்பது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவைப் பாதிக்கும். நேரடியான உரையாடல்கள் குறைந்து, தனிமை உணர்வு அதிகரிக்கும். மேலும், நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவதால், கழுத்து வலி, கண் வலி, மணிக்கட்டு வலி போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க இரவில் தூங்கும் போது மொபைலை படுக்கையறையிலிருந்து வெளியே வைக்கவும். எழுந்தவுடன் தியானம், உடற்பயிற்சி அல்லது புத்தகம் படிப்பது போன்ற ஆரோக்கியமான செயல்களில் ஈடுபடவும். சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பயன்பாடுகளின் நோட்டிபிகேஷன்களை அணைத்து வைக்கவும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கவும்.

இதையும் படியுங்கள்:
என்னது! இந்தியாவில் இத்தனை இடங்களில் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லையா?
Smartphone

தூங்கி எழுந்தவுடன் மொபைல் பார்க்கும் பழக்கம் எளிதில் தவிர்க்கக்கூடியது. மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்றலாம். இந்தப் பழக்கத்தின் தீமைகளைப் புரிந்து கொண்டு, அதைத் தவிர்க்க முயற்சிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com