நீங்க காதலிக்கிறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க - தொல்காப்பியர் வழங்கும் காதலருக்கான விதிமுறைகள்!

The rules for lovers
The rules for lovers
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

காதலர் எந்தெந்த வகையில் ஒத்திருக்க வேண்டும்? காதலரிடையை எந்தெந்த பண்புகள் இருக்கக் கூடாது? தொல்காப்பியர் வழங்கும் காதலருக்கான விதிமுறைகள்!

ஒத்திருக்க வேண்டியவை:

1. பிறப்பு

2. குடிமை (குடி இயல்பு)

3. ஆண்மை, பெண்மைத் தன்மைகள்

4. ஆண்டு

5. உருவப் பொலிவு

6. ஒத்த காம எழுச்சி

7. நிறை (நிறை எனப்படுவது மறை பிறர் அறயாமை)

8. அருள் என்னும் கொடைத்தன்மை

9. உணர்வு ஒத்திருத்தல்

10. திரு என்னும் செல்வ-நிலை

என்று இந்த பத்து பிரிவுகளில் காதலனும் காதலியும் ஒத்திருக்க வேண்டும். இவற்றில் ஆண்மகன் சற்று உயர்ந்த நிலையினன் ஆகவும் இருக்கலாம் என்றும் ஆண்களுக்குச் சிறிது ஆதரவு காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் தனிமையில் அனுபவிக்க வேண்டிய 8 விஷயங்கள்!
The rules for lovers

இருக்கக் கூடாத பண்புகள்:

1. நிம்பிரி (அழுக்காறு, ஔவியம்)

2. கொடுமை (அறன் அழியக் கொடுமை செய்ய எண்ணுதல்)

3. வியப்பு (தம்மைப் பெரிதாக நினைத்தல்)

4. புறமொழி (புறங்கூறுதல்)

5. வன்சொல் (கடுமையாகத் திட்டுதல்)

6. பொச்சாப்பு (தன்னை மறந்து செயல்படுதல்)

7. மடிமை (முயற்சி இல்லாமை)

8. குடிமை இன்புறல் (தன் குடிப் பெருமையை நினைத்து இன்புறுதல்)

9. ஏழைமை (பேதைமை, உண்மையை அறிய மறுத்தல்)

10. மறப்பு (கற்றதையும், கேட்டதையும் மறத்தல்)

11. (போலி) ஒப்புமை (அவனைப் போன்றவன் இவன், அவளைப் போன்றவள் இவள் என ஒப்பிட்டுப் பார்த்தல்)

ஆகியவை இருக்கக் கூடாது.

'ஒத்திருக்க வேண்டிய பத்தும், இருக்கக் கூடாத பதினொன்றும் என்று தொல்காப்பியம் காட்டும் காதல் விதிமுறைகளைப் பின்பற்றி இந்தக் காலத்தில் காதலிக்க முடியுமா?' என்று என்னிடம் கேள்வியெல்லாம் கேட்க வேண்டாம்.

தங்கள் மனதிற்குப் பிடித்தவர்களைக் காதலித்துக் கரம் பிடிக்க உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்...!

logo
Kalki Online
kalkionline.com