பலரும் செய்யும் தவறுதான்... ஆனால் தவிர்க்கணுமே!

Washing clothes
Washing clothes
Published on

துணிகளை துவைப்பதற்கு வாஷிங் மெஷின் மிகவும் வசதியான மற்றும் எளிதான கருவியாகும். ஆனால் பலர் துணிகளை துவைக்கும் போதும், துவைத்த பிறகும் சில தவறுகளை செய்கிறார்கள். இது சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துணிகளை துவைக்கும் போது மட்டுமின்றி, வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்த பிறகும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் வாஷிங்மெஷினை சுத்தம் செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஈரமான துணிகளை இயந்திரத்தில் விட்டுச் செல்வது:

துணிகளை துவைத்த பிறகு, இயந்திரத்தை அணைத்தவுடன், உடனடியாக துணிகளை எடுத்து உலர்த்தி விட வேண்டும். சிலர் இரவில் துணிகளை இயந்திரத்தில் போட்டு காலையில் உலர்த்துகிறார்கள். உண்மையில், துணிகளில் இருந்து தண்ணீர் வெளியேறிய பிறகும் நிறைய ஈரப்பதம் இருக்கும். அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக வளர்வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டவுடன் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே துணிகளை துவைத்தவுடன், அவற்றை அகற்றி, சூரிய ஒளி அல்லது காற்று படும் இடத்தில் உலர வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவையான முள்ளங்கி சப்பாத்தி மற்றும் தயிர் குலோப் ஜாமுன் - வீட்டிலேயே எளிதில் செய்யலாம்!
Washing clothes

வாஷிங் மெஷினின் மூடியை சிறிது நேரம் திறந்து வைக்கவும்:

வாஷிங் மெஷினில் இருந்து துணிகளை அகற்றியவுடன் உடனடியாக மூடி வைப்பதால் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஈரமான மேற்பரப்புடன் இயந்திரத்தில் வளரலாம். அவை துணிகள் மூலமாகவும் உங்கள் உடலில் நுழையலாம். எனவே துணிகளை துவைத்த பிறகு, வாஷிங் மெஷினின் மூடியை சிறிது நேரம் திறந்து வைக்கவும்.

உள்ளாடைகள் மற்றும் சாக்ஸ் சலவை:

வாஷிங் மெஷின் இயந்திரத்தில், உள்ளாடைகள், சாக்ஸ் போன்றவற்றை ஒருபோதும் துவைக்கக்கூடாது. இந்த துணிகளில் உள்ள அழுக்கு பாக்டீரியாக்கள் இயந்திரத்தில் உள்ள மற்ற துணிகளுக்கும் பரவக்கூடும். மேலும் அவற்றை முழுமையாக சுத்தம் செய்ய அனுமதிக்காது. துவைத்த துணிகளை இவற்றுடன் சேர்த்து அணிவதால் சரும பிரச்சனைகள், அரிப்பு, தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்வது எப்படி?

படுக்கை விரிப்புகளில் நூற்றுக்கணக்கான தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உள்ளன. குளிர்ந்த நீரில் கழுவினால் இந்த நுண்ணுயிரிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படாது. அதற்கு பதிலாக, படுக்கை விரிப்புகளை எப்போதும் சலவை இயந்திரத்தில் சூடான நீரில் கழுவ வேண்டும். இது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும்.

இதையும் படியுங்கள்:
இந்தியர்களே இல்லாத 5 நாடுகள் எவை தெரியுமா?
Washing clothes

சுத்தம் செய்வது அவசியம்:

சலவை இயந்திரத்தில் சிறிய மற்றும் பெரிய துளைகள் உள்ளன. அவற்றில் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன. நீண்ட நேரம் வைத்திருந்தால் துணிகளைத் துவைக்கும் போது அவை மீண்டும் துணிகளில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாஷிங் மெஷினை மாதம் ஒரு முறை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com