இப்படி செஞ்சா, தோசை மாவை ஒரு மாசத்துக்கு பயன்படுத்தலாம்! 

Dosa Maavu
Dosa Maavu
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

இட்லி, தோசை போன்ற உணவுகள் நம் வீட்டில் தயாரிக்கப்படும் மிகவும் பொதுவான உணவுகளாகும். ஆனால், இவற்றை தயாரிக்க தினமும் புதிதாக மாவு அரைக்க முடியாது. எனவே தயாரித்த மாவை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இந்த மாவை சரியான முறையில் தயாரித்து சரியான சூழலில் வைத்தால் மட்டுமே, விரைவில் புளிக்காமல் சுவையான இட்லி தோசை போன்ற உணவுகள் கிடைக்கும். ஆனால், சிலருக்கு தோசை மாவு விரைவில் புளித்து விடுவது பிரச்சினையாக இருக்கும். இந்த பதிவில் தோசை மாவு நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

தோசை மாவு விரைவில் புளிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக மாவில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரை மற்றும் தண்ணீர் ஆகியவை பாக்டீரியாவின் வளர்ச்சிக்கான சிறந்த கலவை. பாக்டீரியாக்கள் மாவில் உள்ள சர்க்கரையை உடைத்து ஆல்கஹால் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. இதுவே மாவை புளிக்கச் செய்யும். வெப்பமான சூழல் பாக்டீரியா வளர்ச்சிக்கு உகந்தது. எனவே, வெப்பமான இடத்தில் வைக்கப்படும் மாவு விரைவில் புளித்துவிடும். 

தோசை மாவு நீண்ட காலம் புளிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? 

மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் வெப்பநிலை குறைந்து பாக்டீரியா வளர்ச்சி குறையும். இதனால், மாவு நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கும். மேலும், மாவில் போதுமான அளவு உப்பு சேர்த்தால் பாக்டீரியா வளர்ச்சி தடைப்பட்டு மாவு புளிப்பது குறையும். 

எப்போதுமே மாவை வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும். அது அசுத்தமாக இருந்தால் விரைவில் பாக்டீரியாக்கள் வளர்ந்து, மாவு புளித்துப் போகும். மாவை நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டாம். அதேபோல மாவை திறந்த பாத்திரத்தில் வைத்தால் அதில் தூசி, துகள்கள் கலந்து பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
மொறு மொறு முருங்கைக்கீரை ரவா தோசை வித் மஷ்ரூம் கிரீன் மசாலா செய்யலாமா?
Dosa Maavu

பழைய மாவை புதிய மாவில் கலக்கினால் மாவு விரைவில் புளிந்துப்போகும். எனவே, புதிய மாவுடன் பழைய மாவை கலக்காதீர்கள். அதேபோல மாவை அடிக்கடி கிளறினால் அதில் உள்ள காற்று அதிகரித்து பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும். மாவை அரைத்த பிறகு அதை அப்படியே கலக்காமல் வைத்து விடவும். 

இப்படி, தோசை மாவு புளிக்காமல் இருக்க பல எளிய வழிகள் உள்ளன. மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருமுறை அரைத்த தோசை மாவை நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதன் மூலமாக உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சுவையான இட்லி தோசை கிடைக்கும். 

logo
Kalki Online
kalkionline.com