உங்க வீட்ல கோதுமை மாவு எத்தனை நாள் பிரெஷா இருக்கும்? கெட்டுப்போன மாவை கண்டுபிடிக்க இதோ ஈஸி டிப்ஸ்!

Wheat Flour
Wheat Flour
Published on

Wheat Flour saving tips: இந்திய வீடுகளில் சப்பாத்தி, பூரி, பரோட்டா இல்லாமல் காலை உணவு இருக்காது. அதற்காக, பல வீடுகளில் ஒரே நேரத்தில் அதிக அளவு கோதுமை (Wheat Flour) மாவை பிசைந்து, மிச்சமிருப்பதை ஃபிரிட்ஜில் வைப்பது வழக்கம். 

ஆனால், இப்படி சேமித்து வைக்கும் மாவு எவ்வளவு நாட்களுக்குப் புதிதாக இருக்கும், கெட்டுப்போனால் எப்படி கண்டுபிடிப்பது என்று பலருக்கும் தெரியாது. மாவு கெட்டுப்போனால், அது உணவின் சுவையை மட்டும் கெடுக்காது, நம் உடல்நலத்தையும் பாதிக்கும்.

மாவைப் பத்திரமாகப் பாதுகாப்பது எப்படி?

மாவு கெட்டுப் போவதற்கு முக்கிய எதிரிகள் ஈரப்பதமும் வெப்பமும்தான். இதைத் தவிர்க்க, மாவை எப்போதும் காற்றே புகாத பாத்திரத்தில் போட்டு, குளிர்ந்த, வறண்ட இடத்தில் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் நீண்ட நாட்களுக்கு அடைத்து வைத்தால், பூஞ்சை வளர வாய்ப்பு அதிகம். அதனால், காற்றுப் புகாத டப்பாக்களைப் பயன்படுத்துவது மிக முக்கியம்.

கெட்டுப் போன மாவை அடையாளம் காண்பது எப்படி?

மாவு கெட்டுப் போனால், அதன் நிறம் மாறாது. ஆனால், சில அறிகுறிகளைக் கொண்டு அதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். மாவை திறந்து பார்க்கும்போது, புளித்த அல்லது வினோதமான வாசனை வந்தால், அது கெட்டுப் போய்விட்டதாக அர்த்தம். 

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விட விலை அதிகம்: உலகில் மதிப்பு மிக்க சில பூச்சி இனங்கள்!
Wheat Flour

சில சமயங்களில், சிறிய பூச்சிகள் அல்லது வெள்ளை நிற பூஞ்சைகள் தோன்றலாம். இவை இருந்தால் மாவு கெட்டு விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். கையால் தொட்டுப் பார்க்கும்போது, மாவு ஒட்டும் தன்மையுடன் இருந்தாலோ, அல்லது கெட்டியாக கட்டியாக இருந்தாலோ, உடனடியாக அதைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.

மாவு எத்தனை நாட்களுக்குப் புதிதாக இருக்கும்?

பிசையாத கோதுமை மாவு மூடி வைக்காமல் இருந்தால், ஓரிரு வாரங்களிலேயே தன் புத்துணர்ச்சியை இழக்கத் தொடங்கும். பிசைந்த மாவாக இருந்தால், அறை வெப்பநிலையில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். 

அதை ஃபிரிட்ஜில் வைத்தால் ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். கோடை மற்றும் மழைக்காலங்களில், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மாவு இன்னும் வேகமாக கெட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது.

கெட்டுப் போன மாவு சாப்பிட்டால் என்ன ஆகும்?

கெட்டுப் போன மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி அல்லது பூரியை சாப்பிட்டால், உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அல்லது ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சினைகள் வரலாம். 

இதையும் படியுங்கள்:
திருமணத்துக்குப் பிறகு எத்தனை வருடங்கள் குழந்தை பெறுவதைத் தவிர்க்கலாம்?
Wheat Flour

குறிப்பாக, குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். அதனால், மாவை சரியாகப் பாதுகாப்பதும், புத்துணர்ச்சியை சோதித்த பின்னரே பயன்படுத்துவதும் மிக அவசியம்.

கோதுமை மாவு என்பது நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். அதைச் சரியாகப் பராமரிக்கத் தெரிந்தால், தேவையற்ற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எப்போதும் புதிய மாவை வாங்குவதற்கு முன், பழைய மாவு முழுமையாகத் தீர்ந்துவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். 

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைக் கடைப்பிடித்தால், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்தான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com