வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற இந்த 7 விஷயங்களை அடுத்த 30 நாட்களுக்கு செய்து பாருங்கள்!

build-self-respect
build-self-respect
Published on

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான போராட்டங்களை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். சில நேரங்களில் என்னதான் வேகமாக உழைத்து ஓடினாலும் ஒரே இடத்தில் நிற்பது போன்ற ஒரு சோர்வான உணர்வு நமக்கு வரும். அந்த மாதிரி சமயங்களில் மற்றவர்களைக் குறை சொல்வதையோ அல்லது நமக்கு நேரமே சரியில்லை எனப் புலம்புவதையோ விட்டுவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸாக உட்கார்ந்து நம்மை நாமே அப்டேட் செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி உங்களை நீங்களே முழுமையாக செதுக்கிக்கொள்ள உதவும் சூப்பரான தனிநபர் சேலஞ்சுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. முதலாவதாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நமக்கான சுயமரியாதையை நாமே கொடுப்பது தான். உங்களை துளி கூட மதிக்காத நபர்கள் பின்னால் கெஞ்சிச் செல்வதை உடனே நிறுத்திவிடுங்கள். அந்த நேரத்தையும் உங்களின் எனர்ஜியையும் உங்களின் சொந்த முன்னேற்றத்திற்காக முழுமையாகப் பயன்படுத்துங்கள். இதை ஒரு 30 நாள் சேலஞ்சாக எடுத்துச் செய்து பாருங்கள்.

2. அதேபோல, மற்றவர்களிடம் அன்பாகப் பேசும் நாம், சில நேரங்களில் சின்ன தப்பு நடந்தால் கூட நம்மைக் கண்டபடி திட்டிக்கொள்வோம். இனிமேல் அந்தப் பழக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து பாசிட்டிவ்வாகப் பேசப் பழகுங்கள். இது சுயநலம் கிடையாது, இது மனவளர்ச்சிக்கான மிக முக்கியமான ஒரு அடித்தளம்.

3. அடுத்ததாக நமது மூளைக்குக் கொஞ்சம் அமைதியைக் கொடுக்க வேண்டும். தினமும் ஒரு பத்து நிமிடம் எந்த ஒரு மொபைல் போன், லேப்டாப் மற்றும் டிவி தொந்தரவும் இல்லாமல் சைலண்டாக தனிமையில் உட்கார்ந்து பழகுங்கள். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இதை கடைபிடித்தால், உங்களுக்குள் இருக்கும் பல தேவையற்ற குழப்பங்கள் ஓடிப் போய் ஒரு நல்ல தெளிவு பிறக்கும். 

4. அதுமட்டுமில்லாமல், தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்தில் நடந்த மூன்று சூப்பரான விஷயங்களை ஒரு நோட்டில் மறக்காமல் எழுதுங்கள். இதை ஒரு 21 நாட்கள் தொடர்ந்து செய்தால், நமது வாழ்க்கை நாம் நினைக்கும் அளவுக்கு மோசமான ஒன்று கிடையாது என உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
மனதுக்கு சந்தோஷத்தையும் உடலுக்குப் புத்துணர்வையும் தரும் ராணிபுரா மலை ஏற்றம்!
build-self-respect

5. மனதுக்கு ட்ரைனிங் கொடுத்தது போல உடம்பையும் நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். தினமும் தவறாமல் ஏதாவது ஒரு சின்ன உடற்பயிற்சியாவது செய்வதை அடுத்த ஒரு மாதத்திற்கு உங்கள் வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு ஒரு இரும்பு போன்ற உடம்பையும் கிளியரான மைண்டையும் கொடுக்கும். 

6. இது கூடவே சேர்ந்து, உங்களுக்கு பயமாக இருக்கும் ஒரு விஷயத்தை தைரியமாகச் செய்ய ஆரம்பியுங்கள். உங்களின் Comfort - Zone-ஐ விட்டு வெளியே வந்து புதிதாகச் சவால்களைச் சந்தித்தால் தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குப் போக முடியும்.

7. இறுதியாக, உங்களின் எதிர்காலத்தை பிளான் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அடுத்த 30 நாட்களுக்கு, தினமும் ஒரு பதினைந்து நிமிடம் மட்டும் ஒதுக்கி உங்களின் உண்மையான லட்சியம் என்ன, அதை எப்படி அடையப் போகிறீர்கள் என்பதை ரொம்பத் தெளிவாக ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள். எந்த ஒரு பிளானும் இல்லாமல் பயணம் செய்தால் அது பெரிய ஏமாற்றத்தில் தான் முடியும். அதனால் உங்களுக்கான ரூட் மேப்பை நீங்களே ஸ்ட்ராங்காக டிசைன் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இனி இங்கு நாணயங்கள் வீசி எறிய கட்டணம் செலுத்த வேண்டும்..!
build-self-respect

இங்கு யாருடைய வாழ்க்கையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நூறு சதவீதம் பெர்ஃபெக்ட்டாக அமைவது கிடையாது. ஆனால், நாம் எவ்வித சோர்வுமின்றித் தொடர்ந்து செய்யும் சின்னச் சின்ன முயற்சிகள் தான் நாளைக்கு ஒரு மாபெரும் வெற்றியாக மாறும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com