

Self-Education Tips: பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக்குப் முழுமையாகப் போதுமானது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. இன்றைய காலகட்டத்தில் சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்களே இந்த உலகை ஆளுகிறார்கள். உங்களை ஒருவராலும் எளிதில் வீழ்த்த முடியாத அளவுக்கு அறிவாளியாக, மாற்றுவது எப்படி என்பதற்கான முழுமையான திட்டத்தை இப்போது இந்தப் பதிவில் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
ஆர்வம் தான் மிக முக்கியம்!
முதலில், எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு ஆழமான ஆர்வம் இருக்க வேண்டும். உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் ராக்கெட் அறிவியலை எந்தப் பல்கலைக்கழகத்திலும் சென்று படிக்கவில்லை, புத்தகங்களைப் படித்து மட்டுமே சுயமாகக் கற்றுக்கொண்டார். உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றிய தகவல்களை இணையம், புத்தகங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் மூலமாகத் தேடிப் படிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இதுவே சுய கல்வியின் அஸ்திவாரம் ஆகும்.
கற்றுக்கொள்ளும் சரியான முறை!
படித்ததை அப்படியே மூளையில் சேமித்து வைப்பது மட்டும் போதாது. அதை நாம் எப்படிப் புரிந்துகொண்டோம் என்பது மிக முக்கியம். புகழ்பெற்ற இயற்பியல் அறிஞரான ரிச்சர்ட் ஃபெயின்மேன் (Richard Feynman) உருவாக்கிய 'ஃபெயின்மேன் டெக்னிக்' (Feynman Technique) முறையைப் பயன்படுத்துங்கள்.
அதாவது, நீங்கள் புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு கடினமான விஷயத்தை, சிறு குழந்தைகளுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கப் பழக வேண்டும். அப்படி விளக்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டால், நீங்கள் அந்த விஷயத்தை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.
செயல்படுத்திப் பாருங்கள்!
வெறும் தியரியாகப் படிப்பதில் எந்தப் பயனும் இல்லை. பிரபல தொழில்முனைவோரான நாவல் ரவிகாந்த் (Naval Ravikant) கூறுவது போல, நீங்கள் படிக்கும் விஷயங்களை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு புதிய தொழில்நுட்பம் கற்கிறீர்கள் என்றால், அதை வைத்து ஒரு சிறிய ப்ராஜெக்ட் செய்து பாருங்கள். தோல்விகள் வந்தாலும் பரவாயில்லை, அதுவே உங்களுக்குச் சிறந்த ஆசானாக மாறும்.
கவனச்சிதறல் கூடாது!
சமூக வலைத்தளங்களில் வீணாக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, அந்த நேரத்தை உங்கள் சுய முன்னேற்றத்திற்காக முதலீடு செய்யுங்கள். ஆன்லைன் பிளாட்பார்ம்கள் இன்று ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகமாகவே செயல்படுகின்றன. உலகின் தலைசிறந்த நிபுணர்களிடம் இருந்து நீங்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன.
உங்களின் முழு கவனத்தையும், நீங்கள் எந்தத் துறையில் சாதிக்க நினைக்கிறீர்களோ அதில் மட்டுமே செலுத்துங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது புதிய விஷயங்களைப் படிக்கவோ அல்லது பயிற்சி செய்யவோ கட்டாயம் ஒதுக்குங்கள்.
தினமும் ஒரு புதிய விஷயத்தையாவது கற்றுக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை யாராலும் அசைக்க முடியாத ஒரு வல்லமை படைத்த மனிதராக மாற்றுவதற்கான பயணத்தை இன்றே முழு நம்பிக்கையுடன் தொடங்குங்கள். உங்கள் வெற்றி உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.