புத்தகங்கள்ப் படிப்பதால் மூளை எப்படி மாறுகிறது தெரியுமா… விஞ்ஞானிகளின் பகீர் தகவல்!

தொடர்ந்து புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நமது மூளையின் நரம்பியல் அமைப்பை மாற்றி, ஞாபக சக்தியையும் கற்பனைத் திறனையும் எப்படி அதிரடியாக அதிகரிக்கிறது என்பதைப் பற்றிய அறிவியல் ரீதியான விரிவான அலசல்.
Benefits of reading Tamil
Benefits of reading Tamil
Updated on

Benefits of Reading Books: புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு அருமையான ஒன்றாகும். நாம் ஒரு கதையைப் படிக்கும்போது, அந்த எழுத்துக்கள் வெறும் காகிதத்தில் உள்ள மையாக மட்டும் இருப்பதில்லை, நமது மூளையின் வடிவமைப்பையே முற்றிலுமாக மாற்றக்கூடிய வல்லமை படைத்ததாகும். 

தினமும் புத்தகம் படிப்பதால் நமது மூளைக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறிவியல் பூர்வமாக இந்தப் பதிவில் பார்க்கலாம். 

மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்!

நாம் படிக்கும் ஒவ்வொரு வரியும் மூளையில் உள்ள நரம்புகளுக்கு இடையேயான புதிய இணைப்புகளை உருவாக்குவதுடன், பழைய இணைப்புகளைப் பலப்படுத்துகிறது. நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) என்று அழைக்கப்படும் இந்த அதிசய நிகழ்வு, மூளையைத் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் என்றென்றும் இளமையாகவும் வைத்திருக்கப் பெரிதும் உதவுகிறது. 

அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தைச் (Emory University) சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் கிரிகோரி பெர்ன்ஸ் (Gregory Berns) செய்த ஆழமான ஆய்வின்படி, ஒரு நாவலைப் படிக்கும்போது மூளையின் இடது பக்கத்தில் உள்ள மொழி மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதிகள் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகின்றன. 

படிக்கும் அந்த சில மணி நேரங்கள் மட்டுமல்லாமல், படித்து முடித்த பல நாட்களுக்குப் பிறகும் கூட அந்த நரம்பியல் தூண்டுதல்கள் மூளையில் அப்படியே தங்கிச் செயல்படுவதாக அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

கற்பனைத் திறன் & மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை!

நாம் ஒரு நாவலில் வரும் கதாபாத்திரத்தின் சோகத்தையோ அல்லது சந்தோஷத்தையோ படிக்கும்போது, நிஜமாகவே அந்த உணர்வை நாமே நேரில் அனுபவிப்பது போலவே நமது மூளை முழுமையாக நம்பத் தொடங்குகிறது. இதற்குத் தியரி ஆஃப் மைண்ட் (Theory of Mind) என்று பெயர். இது நம்மை நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்களின் உணர்வுகளை மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் ஒரு அன்பான மற்றும் முதிர்ச்சியான மனிதராக மாற்றுகிறது. 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
Benefits of reading Tamil

புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் அதிக அளவிலான பச்சாதாபம் இருப்பதை உளவியல் நிபுணர்கள் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு நல்ல புத்தகம் நம்மைப் பலருடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வைக்கும் வித்தையைச் செய்கிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்!

இன்றைய ரீல்ஸ், ஷார்ட்ஸ் காலத்தில் பலருக்கும் ஒரு விஷயத்தில் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கூட கவனம் செலுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. ஆனால், தொடர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு கவனிக்கும் செய்யும் திறன் அபரிமிதமாக இருக்கும். ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அந்த கதையின் பின்னணி, பல கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் முந்தைய அத்தியாயங்களில் நடந்த சம்பவங்களை மூளையில் ஞாபகம் வைத்துக்கொண்டே தொடர்ந்து படிக்க வேண்டும். 

இதனால் மூளையின் ஞாபக சக்தி மையம் மிகவும் வலிமை அடைகிறது. அதுமட்டுமின்றி, அல்சைமர், டிமென்ஷியா போன்ற கொடிய ஞாபக மறதி நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள வயதான காலத்திலும், படிக்கும் பழக்கம் அந்த நோய்களைத் தள்ளிப்போடப் பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்குள் பாய்ந்து பிடித்த பாம்பு... சில நொடிகள் உறைந்து போன இதயம்! - Zai Whitaker பசுமை நினைவுகள்!
Benefits of reading Tamil

எனவே, தினமும் ஒரு பத்து அல்லது இருபது பக்கங்களாவது படிக்கும் வழக்கத்தை நாம் கட்டாயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது சிந்தனைத் திறனையும், பேச்சாற்றலையும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com