சாதாரண வாழ்க்கையை extraordinary-யாக மாற்றுவது எப்படி? இதோ ஒரு ரகசியம்!

Life style articles
Make life extraordinary
Published on

வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த ஒரு அரிய பரிசு. ஆனால் அந்த பரிசை எப்படி வடிவமைப்பது என்பது முழுவதும் நம்மிடமே இருக்கிறது. சிலர் வாழ்க்கையை விதியின் கையில் விட்டு விடுகிறார்கள்; ஆனால் சிலர், தாங்கள் விரும்பும் பாதையைத் தேர்வு செய்து, அதை உருவாக்கி, தங்களுக்கே உரிய அடையாளத்தை அமைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், நாம் விரும்பும் வாழ்க்கையை உருவாக்கும் சக்தி ஒவ்வொருவரிடமும் உள்ளது.

முதலில், நாம் எதை விரும்புகிறோம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும். இலக்கில்லாத வாழ்க்கை, திசையற்ற கப்பல் போலத்தான். நான் யார்? என்ன விரும்புகிறேன்? எந்த துறையில் முன்னேற வேண்டும் என்ற கேள்விகளுக்கான பதில்கள், நமது பயணத்தின் முதல் படியாகும்.

அடுத்து, கனவுகளைச் செயலாக்கும் திடமான திட்டம் அவசியம். கனவுகள் வெறும் கற்பனையாக மாறாமல் இருக்க, தினசரி சிறு முயற்சிகள் தேவை. அதற்குள் கடின உழைப்பு, பொறுமை, மற்றும் தடைகளை சமாளிக்கும் மனவலிமை இருக்கவேண்டும். எந்த வெற்றியும் ஒரே நாளில் வராது; அது தொடர்ந்து முயற்சித்துப் பெறும் பலன். வாழ்க்கையில் நாம் எதையும் அடைவது எளிதல்ல. வெற்றி எனும் இலக்கை அடைய, பல தடைகள், சவால்கள், உழைப்பு, பொறுமை ஆகியவை தேவை.

ஒரு விதை மரமாக வளரும் முன் மண்ணின் இருளையும், மழையையும், காற்றையும் தாண்டி வளரவேண்டும். அதுபோல, நாமும் இலக்கை நோக்கி செல்லும்போது பல சிரமங்களை சந்திப்போம். சில நேரங்களில் மனம் தளரலாம், நம்பிக்கை குறையலாம். ஆனால் அந்தக் கடினப் பாதையை தாண்டும்போது கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி, உழைப்பின் பலன் நம் மனதை நிறைவடையச் செய்யும்.

எனவே, பயணம் கடினமாக இருந்தாலும், அதன் முடிவு நிச்சயமாக இனிமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உலக புகழ் பெற்ற 'மோனலிசா' ஓவியத்தின் பின்னால்... 13 வருட கதை!
Life style articles

சிறு கனவுகளின் சக்தி

சிறிய கனவுகள் நமக்கு அடிப்படை இலக்குகளை அமைத்து தருகின்றன. அவை நம்மை பயமுறுத்தாமல், ஊக்குவிக்கின்றன. சிறிய இலக்குகள் நிறைவேறும்போது, நமக்குள் ஒரு நம்பிக்கை விதை விதைக்கப்படுகிறது. இந்த நம்பிக்கையே, அடுத்த படிக்கு நகரும் துணிவை தருகிறது.

சிறு கனவுகளை வெற்றியாக மாற்றும் படிகள்

தெளிவான இலக்கு: கனவுக்கு தெளிவான திசை கொடுத்தல்.

தொடர்ச்சியான முயற்சி: தினமும் சிறிது நேரம் அதற்காக உழைத்தல்.

சிரமத்தை தாண்டும் மனம்: தோல்வி வந்தாலும் நின்று விடாமல் தொடர்ந்து முயற்சித்தல்.

புதிய அறிவு சேர்த்தல்: தினமும் ஒன்றை கற்றுக் கொள்தல். சிறு கனவுகள்தான், நம்மை பெரிய வெற்றிகளின் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. ஒரு விதைபோல, அவற்றை நம் மனதில் நட்டால், அன்பும் உழைப்பும் எனும் நீரால் வளர்த்து வந்தால், ஒருநாள் அது பெரும் மரமாகி, நம்மையும், உலகையும் நிழலிட்டு காப்பதற்குத் தயாராகும். எனவே, சிறு கனவு காணுங்கள் அது உங்களை பெரிய வெற்றிக்குச் சென்றடையச் செய்யும்.

சுற்றுப்புறமும் நமது வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஆதரவான, நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் களுடன் பழகுவது, நம்மை உற்சாகப்படுத்தும். அதே நேரத்தில், எதிர்மறை எண்ணங்களைத் தள்ளி வைக்கும் மனப்பாங்கும் தேவை.

இதையும் படியுங்கள்:
பேசும் முன் யோசி! எழுதும் முன் சிந்தி! - வாழ்க்கையை மாற்றும் 3 ரகசியங்கள்!
Life style articles

வாழ்க்கையை நாம் விரும்பியபடி அமைப்பது எளிதல்ல; ஆனால் அது சாத்தியமற்றதும் அல்ல. எப்போதும் கற்றுக்கொண்டு, தவறுகளைச் சரிசெய்து, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி னால், வாழ்க்கையை நம்மால் விரும்பும் வடிவில் உருவாக்க முடியும்.

வாழ்க்கை என்பது நமக்காக யாரும் கட்டிய கொட்டகை அல்ல; அது நாமே செதுக்கிக் கட்டும் அரண்மனை. ஆகவே, பிறர் வரைந்த வரைபடத்தில் அல்ல, நம்முடைய கனவுகளின் வரைபடத்தில்தான் நம் வாழ்க்கையை உருவாக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com