கணவன் மனைவி உறவு: இந்த 5 விஷயங்களை செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

Life is happy
Husband wife relationship
Published on

வாழ்க்கையில் எத்தனையோ சொந்த பந்தங்கள் இருந்தாலும் அனைத்தையும் விட மிகவும் முக்கியமான உறவு என்பது கணவன் மனைவி பந்தமே!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், என்பதுபோல கணவன் அமைவதெல்லாம் மனைவி செய்த புண்ணியம் என சொல்லலாம். அதுதானே சரியானதாக அமையும். 

பெண் பாா்த்துவிட்டு வந்தோம் அன்றைய தினமே செல் நம்பர் பறிமாற்றம்,பேசுவோம்! பேசுவோம்! பேசிக்கொண்டே இருப்போம்.

அதன் பிறகு நிச்சயதாா்த்தம் முடிந்த கையோடு விலைமதிப்பில்லா போன் வாங்கிக்கொடுத்தாகிவிட்டதே! திருமணம் வரை போனுக்கு வாயிருந்தால் அழுதேவிடுமே!

திருமணம் முடிந்த பிறகு நோில் வாழ்வைத் தொடங்க வேண்டும். கணவன் மனைவி சொந்த பந்தம் என்பது எவ்வளவு புனிதமானது.  இதை புாிந்துகொள்ள சில நாள், சில மாதம், சில வருடங்கள் கூட கடந்து விடுகிறதே!

கணவனுக்கும் மனைவிக்குமான புாிதல் ஆரம்பமாக வேண்டிய காலகட்டம் மனம்விட்டு பேசுங்கள். அவரவர் குடும்ப நிகழ்வுகளில் இருவரும் கடந்து வந்த பாதையை பேசுங்கள்.  ஒருவர் மனதை ஒருவர் புாிந்து கொள்ளும் நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

உண்மையான பாசத்தை ஒருவர் மீது ஒருவர் வளா்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக உண்மையைப் பேசுங்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தால் பொியவா்களின் குணநலன்கள் அவர்களது தேவை குடும்பகெளரவம் இப்படி பல்வேறு விஷயங்களை நன்கு அலசுங்கள்.

பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர்  அன்யோன்யம் சரிவர கடைபிடியுங்கள். யாா் எது சொன்னாலும் அதை கவனத்தில் கொள்ளுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது கணவன் மனைவி இருவரும் எல்லா விஷயங்களையும் கலந்து பேசுங்கள்.  முக்கியமாக ஒருவரை ஒருவர் எந்ததருணத்திலும் ஈகோவை தவிா்த்து யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீா்கள். 

இதையும் படியுங்கள்:
உங்க வாழ்க்கையில கஷ்டமா? சிறகுகள் இல்லாம பறக்க வள்ளுவர் சொன்ன ரகசியம் இதுதான்!
Life is happy

திட்டமிடல் அவசியமான ஒன்று. எந்த விஷயமாய் இருந்தாலும் கலந்து பேசி சச்சரவு, மனமாச்சர்யம், களைந்து  நியாயமான கருத்துகளை கணவன் மனைவி இருவரில் யாா் சொன்னாலும் அதில் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 

அன்பு, பாசம், அதிகமாகும் வகையில் உயர்ந்த மனப்பக்குவத்தோடு வாழப்பழகிக்கொள்ளுங்கள். அவரவர் சிரமம் மற்றும் கோப தாபங்களை  மூட்டை கட்டி வையுங்கள்.

நம்வீட்டு விஷயங்களை நம்மைத்தவிர யாரிடமும் பகிராதீா்கள். 

வீட்டிற்கு தேவையான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும்   கணவன், மனைவி இருவரும் கலந்து பேசி முடிவெடுங்கள்.

மனைவி கொண்டு வந்த நகைகளை எக்காரணம் கொண்டும் அடகு வைக்காதீா்கள். வீடுகட்ட இடம் வாங்குவதாக இருந்தால் நமது சக்திக்கு முடியுமா என சரியான புாிதலோடு பேசுங்கள். அன்பு காட்டுதற்கு செலவேதும் கிடையாது.  நமக்கான சரியான பாதையில் சறுக்கல் இல்லாமல் பயணம் செய்யுங்கள்.

மனைவி என்பவள் எனது உயிா். அதேபோல கணவர் என்பவர் என் வாழ்நாள் பந்தம். என்ற நிலைபாடுகளை எடுப்பது நல்லது.  "புரிதல் இல்லாத கணவன் மனைவி வாழ்வு என்பது பிாிதலில் முடியும்"!.

அதற்கு காரணம் பொியவர்களாய் இருந்தால் அல்லது வேறு சொந்த பந்தங்களாய் இருந்தால், அதன் மீதான நம்பகத்தன்மையை சீா்தூக்கிப் பாருங்கள். எந்த நிலையிலும் அனுசாித்து போவதே நல்லது.

இதையும் படியுங்கள்:
யார், யாருக்கு வில்லன்னு சொல்லுங்க பார்ப்போம்!
Life is happy

கோபம் தவிா்த்து தேவையில்லாத விவாதங்கள் விலக்கி எனக்கு நீ உனக்குநான் என்ற பாதையில் அன்பு, புாிதல், பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது, பொியோா்களை மதிப்பது,

போன்ற நிதானமான செயல்பாடுகளில் வாழ்க்கையை வாழப்பழகிக்கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com