படிப்பை விட இதுதான் முக்கியம் - ஐன்ஸ்டீன் சொன்ன அந்த ஒரு வார்த்தை உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!

Einstein
Einstein
Published on

இன்றைய நவீன உலகில், "தகவல் தான் செல்வம்" (Information is Wealth) என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றின் மிகப் பெரிய மூளை என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இதை முற்றிலுமாக மறுக்கிறார். அவரைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் உண்மையான சக்தி அவனது அறிவில் இல்லை; அவனது கற்பனைத் திறனில் தான் இருக்கிறது. "அறிவை விட கற்பனைத்திறனே மிக முக்கியமானது" என்ற ஐன்ஸ்டீனின் வரிகள், வெறும் தத்துவம் அல்ல; அது மனித குலத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை சூத்திரம்.

கற்பனை ஒரு வானம்!

இதை எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 'அறிவு' என்பது இதுவரை நாம் கண்டுபிடித்தவை, படித்தவை மற்றும் அனுபவித்தவைகளின் தொகுப்பு. அது ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பழைய ஆவணங்களைப் போன்றது. ஆனால், 'கற்பனை' என்பது அந்தப் பெட்டியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் சக்தி.

ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார் என்றால், அறிவு என்பது நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்லும். ஆனால், கற்பனை என்பது நாம் நாளை எங்கே செல்ல முடியும் என்பதைக் காட்டும். உதாரணமாக, சக்கரத்தைக் கண்டுபிடித்தது அறிவு என்றால், அந்தச் சக்கரத்தை வைத்து விமானம் செய்யலாம் என்று சிந்தித்தது கற்பனை. ஏற்கனவே இருக்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்வது மட்டும் போதாது; இல்லாத ஒன்றை, நடக்காத ஒன்றை மனக்கண்ணில் காண்பவனே வரலாற்றைப் படைக்கிறான்.

கற்பனையின் அவசியம்!

இன்று நாம் ஒரு தகவல் யுகத்தில் வாழ்கிறோம். எந்தக் கேள்விக்கும் கூகுள் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) நொடியில் விடை தந்துவிடும். தகவல்களை மனப்பாடம் செய்வதற்கு இப்போது மனித மூளை தேவையில்லை; அதற்கு கணினிகள் போதும். அப்படியென்றால் மனிதனின் தனித்துவம் எங்கே இருக்கிறது? அது அவனது புதுமையான சிந்தனையில் தான் இருக்கிறது.

இன்றுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தகவல்களைச் சேகரிப்பவன் வெற்றியாளன் அல்ல; அந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு, இதுவரை யாரும் யோசிக்காத ஒரு புதிய விஷயத்தை உருவாக்குபவனே வெற்றியாளன். பழைய பிரச்சனைகளுக்குப் புதிய தீர்வு காண வேண்டுமென்றால், நமக்குத் தேவைப்படும் ஆயுதம் கற்பனை மட்டுமே.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்பெண் எடுப்பது மட்டுமே புத்திசாலித்தனம் என்று கற்பிக்கப்படுகிறது. ஆனால், ஐன்ஸ்டீனின் கருத்துப்படி, பாடப்புத்தகத்திற்கு வெளியே சிந்திப்பவனே சிறந்த மாணவன். தேர்வில் வரும் கேள்விகளுக்குப் பதில் எழுதுவது அறிவு; ஆனால் கேள்வித்தாளையே கேள்வி கேட்பது கற்பனை.

இதையும் படியுங்கள்:
‘சினிமா எனக்கு தொழில் அல்ல, அதுதான் நான்’ - முதல் ஆஸ்கரை வென்ற ‘டாம் குரூஸ்’..!
Einstein

தொழில் செய்பவர்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே இருக்கும் பாதையில் நடப்பது பாதுகாப்பானது தான். ஆனால், கற்பனை வளம் கொண்ட ஒருவரால் மட்டுமே காட்டுக்குள் புதிய பாதையை உருவாக்க முடியும். தோல்விகள் வரும்போது, அறிவாளி சோர்ந்து போவான்; ஆனால் கற்பனை வளம் மிக்கவன், அந்தத் தோல்வியையும் ஒரு புதிய வாய்ப்பாக மாற்றிக் கொள்வான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டைக் (Theory of Relativity) கண்டுபிடித்தது, அவர் வெறும் கணக்குகளைப் போட்டதால் மட்டுமல்ல; அவர் பிரபஞ்சத்தை ஒரு குழந்தையைப் போல வியந்து, கற்பனை செய்து பார்த்ததால் தான் அது சாத்தியமானது. எனவே, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், அது அஸ்திவாரம். ஆனால், கற்பனையை ஒருபோதும் கைவிடாதீர்கள், அதுவே கட்டிடம். 

இதையும் படியுங்கள்:
நுண்ணுயிரிகளின் உலகம்: கண்ணுக்குத் தெரியாத நண்பர்களும் பகைவர்களும்!
Einstein

உலகம் உங்களைப் பார்த்து "இது சாத்தியமில்லை" என்று சொல்லும்போது, உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். ஏனெனில், இன்றைய கற்பனையே நாளைய நிஜம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com