நிதானம் தவறினால் நிச்சயம் அவமானம்தான்!

Motivational articles
Lifestyle articles
Published on

பொதுவாக நமது உடம்பில் இறைவனால் படைக்கப்பட்ட அவயவங்கள் பலவகையில் நமக்கும், சிலரது விருப்பத்தின் அடிப்படையில் அவர்களின் இறப்புக்குப் பின் உறுப்பு தானமாகவும்   பயன்படுகிறது, இது பொதுவானது.

மனிதனுக்கு எப்போதுமே நிதானம் தேவைப்படும். பல நேரங்களில் நிதானமில்லாமல் மனிதன் பேசிவிடுவதும் உண்டு. அதன் தாக்கமாக வாா்த்தைகள் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் வந்து போவதும் சராசரிதான்.

நாக்கு ருசி, ருசியில்லாதது போன்றவைகளை கண்டுபிடிக்க மட்டுமல்ல! வாா்த்தைகளிலும் நல்லது கெட்டதை வெளிப்படுத்திவிடுகிறது!

நரம்பில்லாத நாக்கு, தண்ணீாில் கிடக்கும் நாக்கு, எதையும் பேசும் என்பாா்கள்! அதுவா பேசுகிறது? மனிதனாகிய நாம்தான் பேசுகிறோம். நாமே பேசி நாக்கின் மீது பழியைப் போடுகிறோம், 

ஆங்கில வாா்த்தையில் "Always talk politely "அதாவது எப்போதும் பண்புடன் பேசுங்கள் என்பதுபோல  நாம் பண்போடு பேசவேண்டும், நாணயத்தைவிட,"நா :நயமே" பல காாியங்களை சாதிக்க வல்லது!

அதேபோல கவனமுடன், விவேகத்துடன், முன்யோசனையுடன், நிதானத்துடன், பேசுவதை நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதே நல்லதாகும், அப்படி கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றைப் பாா்க்கலாம்.

பிறறிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள் வாா்த்தைப் பிரவாகம் முக்கியம்.

நாம் பேசுவதை அடுத்தவர் கேட்க வேண்டும் என நினைப்பதுபோல மற்றவர்கள் பேசுவதையும் கவனமாக கேளுங்கள் அதுவே பண்பாடுகளுக்கு அடையாளம்!

பேச்சில் நல்ல நடத்தையைக் காட்டுவது சிறப்பானதே ,அதுவும் நமது குணநலன்களை  பிறருக்கு எடுத்துக்காட்டும் கண்ணாடி போன்றது.

இதையும் படியுங்கள்:
காலம் கடந்து வரும் அறிவு பயனற்றது!
Motivational articles

பேச்சுத்திறமையால் நண்பர்களைச் சோ்க்கப்பாருங்கள் அதை விடுத்து எதிாிகளை சம்பாதித்து விடவேண்டாம்! இங்குதான் நாக்கின் தன்மை பயன்படும்!

பொியவர்களிடம் பேசும்போது எப்போதும் மரியாதையை கடைபிடியுங்கள் அதன் வலிமை வலிமையானது.

நகைச்சுவை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அடுத்தவர்கள் மற்றும் உறவுகளில் பேசும்போது கோபம், வண்மம், காட்டாமல் நகைச்சுவையாக பேசுங்கள் அது நமக்கு பலமானது, பாலமானதும்கூட.

 சுய புராணம், சுய தம்பட்டம், தேவைதானா… தவிா்த்திடலாமே, ஏன் வீண் ஹம்பக்! வேண்டாம் வேண்டாம் அது ஆரோக்கியமான பண்பை வளா்க்காதே!

அடுத்தவர்களுக்கு புாியும்படி தெளிவாகப்பேசுங்கள், முணு முணுக்காமல் பேசுவது நல்லது.

எப்போதுமே வீண் வாக்குவாதம் தவிா்த்தல்  நல்லதே அதை நாம் விலக்கவேண்டும்.

நமக்குத்தான் எல்லாம் தொியும் என்ற ரீதியில் அர்த்தமில்லாத வாா்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாமே!

பொது இடங்களில் நமது  சொந்தக்கருத்தை திணிக்கவேண்டாம் அதை விலக்கிவிடுவதே சிறப்பிலும் சிறப்பு.

இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம், நாம் பேசிவிட்டு நாக்கின்மீது ஏன் பழிபோட வேண்டும்? ருசியையும், ருசி இல்லாததையும், அதுதான் நமக்கு உணர்த்துகிறது  என்பதை மறவாதிரு மனமே மறவாதிரு..!

இதையும் படியுங்கள்:
பொறுமையே மிகச் சிறந்த கொடை!
Motivational articles

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com