பொறுமை என்பது பலவீனம் அல்ல; அதுவே வெற்றியின் ரகசியம்!

Lifestyle articles
Motivational articles
Published on

ன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம். எல்லாம் அவசரம் என்று அவசரமயமாகி விட்டதை நாளும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அர்ஜன்ட் (Urgent) என்கிற வார்த்தையை அதிகமாக நாளும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம். பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலை தூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கைமுறை யாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது.

அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும், அதிகபட்சமாக அவசியம் இல்லாதவை களுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் ஆலோசிப்பதில்லை. அதிகமாக அவசரப்படுவதால், சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகி போய்விடுகிறது.

ஆகையால், அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் பின் விளைவுகளை ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது.

அப்படியானால் இவை எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.

இதையும் படியுங்கள்:
பழைய சிந்தனைகளை உடையுங்கள்! புதிய உலகைப் படையுங்கள்!
Lifestyle articles

தெரிந்தும் ஏன் அவசரப்படவேண்டும். நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து அமைதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக்கொள்வோம்.

-பொ. பாலாஜி கணேஷ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com