
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மை தான். ஆனால்,அதை சொர்க்கமாக வைத்துக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.
- எம்மா டபில்யூ
பெண் தனக்காக என்ன செய்கிறார்கள் என்று எப்போதுமே பார்ப்பதில்லை, என்ன செய்யவில்லை என்பதைத்தான் பார்ப்பாள்.
-ஜி.கோர்ட்லின்
ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாய் என்று சொல்லாதே ,வேறு எந்தப் பெண்ணும் உன்னைப் போல் இல்லையென்று சொல் எல்லா வழிகளும் உனக்கு திறக்கும்.
- சேம் ஃபோர்ட்
பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவும், மற்ற பெண்களை அதிருப்தி செய்யவும் உடை அணிகிறார்கள்.
- கோலட்டே .
அவளுக்கு இது முதல் காதலாக இருக்க வேண்டும் என்று ஆண் நினைக்கிறான். அவனுக்கு இதுவே கடைசி காதலாக இருக்க வேண்டும் என்று பெண் நினைக்கிறாள்.
- ஆஸ்கார் ஒயில்டு
பெண்கள் போராடுவது எல்லாம் ஆண்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அல்ல. பெண்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இருப்பதற்குத் தான்.
- ராஷ் பான்.
காதல் என்பது நெருப்பு, உன் இதயம் குளிர் காயப்போகிறதா அல்லது உன் வீடு தீப்பற்றப் போகிறதா என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.
-ஜோன் கிராபோர்டு
தேவதையை யாரும் நேசிப்பதில்லை: அவளின் நாற்பதாவது வயதில்.
-டி.ஹென்றி
சிரிப்பிலேயே பெண்களின் சிரிப்பு தனி ரகம். அந்தச் சிரிப்பில் மயக்கும் சிரிப்பு, மயங்கும் சிரிப்பு என இரு வகை உண்டு.
- டி.குவின்சி
கணவன் பேச்சிலே மனைவிக்கு கவனம் எப்போது இருக்கும் தெரியுமா? அந்தப் பேச்சு, இன்னொரு பெண்ணைப் பற்றி இருக்கும் போதுதான்.
- பாட்டர்ஸன் புரூஸ்
கல்யாணமானவர்களுக்கு எது ஆச்சரியமான விஷயம் என்றால் பிரம்மச்சாரிகள் பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதே!
-ஸெட்ரிக் ஆடம்
குடும்பத்தில் கோளாறு ஏற்படும்போது பாதித் தவறு தன் மனைவி மீது என்று கணவன்மார்கள் சொல்கிறார்கள் .இன்னொரு பாதி ? அவளுடைய அம்மா மீது.
- டபிள்யு.கே.டான்.
டி.வி தொடர்கள் நிறைய பாருங்கள். உங்கள் குடும்பம் எவ்வளவோ தேவலை என்ற ஆறுதல் கிடைக்கும்.
- டால் லாரென்ஸ்
பெண்களுக்கு இயற்கை தரும் முதல் பரிசு அழகு. முதலில் திரும்பி எடுத்துக் கொள்ளும் பரிசும் அதுதான்.
- சார்லஸ் ரீட்
ஆண் பேச எழுந்து நின்றால் முதலில் கேட்கிறார்கள், பிறகு அவனை பார்க்கிறார்கள். பெண் பேச எழுந்து நின்றால் முதலில் அவளைப் பார்க்கிறார்கள் பிடித்திருந்தால் கேட்கிறார்கள்.
-பாலின் ஃப்ரடெரிக்
ஒரு காரணமும் இல்லாமல் ஒருவன் தன் மனைவிக்குப் பூ வாங்கிக் கொண்டு வருகிறான் என்றால் ஏதோ காரணம் இருக்கிறது.
- மில்லி மெக்கீ
புத்திசாலியான பிரம்மச்சாரி, குதிப்பதற்கு முன் பார்த்துக் கொள்கிறான்.பிறகு குதிக்காமலேயே இருந்து விடுகிறான்.
-ப்ளூம்ஸ்பரி
திருமணம் ஆனவர்களை விட பிரம்மச்சாரிகள்தான் பெண்களைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள் இல்லாவிட்டால், அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே.
-மென்கென்
பெண்களே ! உங்கள் கணவன்மார்கள் உங்களை விட்டுத்தூரமாகப் போகும் போதும் நம்ப வேண்டாம். பிரம்மச்சாரிகள் உங்களை நெருங்கி வரும் போதும் நம்ப வேண்டாம்.
- ஹெலன்
கணவனை எப்போது கண்காணிப்பது, எப்போது கண்காணிக்காதது போல் இருப்பது என்பதை அறிந்தவளே சிறந்த மனைவி.
-ஹெர்பர்ட்
பெண்களை பிடிக்க மூன்று தூண்டில்கள் உள்ளன. உடம்பு, உணர்ச்சி, உலோகம்.
-ஏ.சவான்னி
பெண்ணும், யானையும் காயங்களை ஒருபோதும் மறப்பதில்லை.
-ஹெக்டர் மவுன்ரே
அலுத்துப்போய் ஆண்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதிசயப்பட்டு பெண்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் முடிவில் இருவரும் ஏமாந்து போகிறார்கள்.
-ஆஸ்கார் ஒயில்டு
அழகான பெண்கள் ஈரம் காயாத பெயிண்டைப் போன்றவர்கள் பார்த்தால் தொடும் ஆசையை அடக்க முடியாது. தொட்டுவிட்டால் அது நம்மை விட்டு லேசில் போகாது.
- விக்டர் ஹியூகோ