நீங்க நினைச்சதெல்லாம் நடக்கணுமா? அப்போ இந்த ஒரு ரகசியத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

The Secret Book
The Secret Book
Published on

நம்ம எல்லாருக்குள்ளயும் சில ஆசைகள், கனவுகள் இருக்கும். "வாழ்க்கையில ஒரு பெரிய வீடு கட்டணும்", "நிறைய பணம் சம்பாதிக்கணும்", "பிடிச்ச வேலையில சேரணும்"னு பல விஷயங்கள். ஆனா, நம்மில் பலர் நினைக்கிறது ஒன்னு, நடக்கிறது இன்னொன்னா இருக்கும்.

 "நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? அதிர்ஷ்டம் உள்ளவங்களுக்கு எல்லாம் கிடைக்குது"ன்னு நாமளே நம்மளை நொந்துக்குவோம். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, என் நண்பன் ஒருத்தன் "மச்சி, இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பாரு"ன்னு சொல்லி ஒரு புத்தகத்தைக் கொடுத்தான். அந்தப் புத்தகத்தோட பேருதான் 'தி சீக்ரெட்' (The Secret), தமிழ்ல 'ரகசியம்'. உண்மையச் சொல்லணும்னா, அந்தப் புத்தகம் என் வாழ்க்கையைப் பார்க்குற கண்ணோட்டத்தையே மாத்திடுச்சு. 

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய ரகசியம்!

'ரகசியம்' புத்தகம் முழுக்க ஒரே ஒரு விஷயத்தை மையமாக வைத்துதான் பேசுகிறது. அதுதான் "ஈர்ப்பு விதி" (Law of Attraction). கேட்கிறதுக்கு ஏதோ இயற்பியல் பாடம் மாதிரி இருந்தாலும், விஷயம் ரொம்ப சிம்பிள். நீங்க எதை ஆழமா, முழு மனசோட நினைக்கிறீங்களோ, எதை அதிகமா உணர்றீங்களோ, அதையே உங்க வாழ்க்கையை நோக்கி நீங்க ஈர்க்கிறீங்கன்னு இந்த விதி சொல்லுது.

சுருக்கமா சொன்னா, "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்". நீங்க எப்பப் பார்த்தாலும், "எனக்கு காசு இல்லை, எனக்கு கஷ்டமா இருக்கு, எனக்கு நோய் இருக்கு"ன்னு எதிர்மறையான விஷயங்களையே நினைச்சுக்கிட்டு இருந்தா, பிரபஞ்சம் உங்களுக்கு இன்னும் அதிகமான கஷ்டங்களையும், பணப் பற்றாக்குறையையும்தான் கொடுக்கும். 

அதுவே, நீங்க நேர்மறையா "நான் ஆரோக்கியமா இருக்கேன், என்கிட்ட பணம் வந்துகிட்டு இருக்கு, நான் சந்தோஷமா இருக்கேன்"னு நம்ப ஆரம்பிச்சா, உங்க வாழ்க்கை அதை நோக்கியே நகர ஆரம்பிக்கும்னு இந்தப் புத்தகம் சொல்லுது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் ஏன் உங்க பேச்சைக் கேட்க மாட்டேங்குறாங்கன்னு தெரியுமா?
The Secret Book

கேள், நம்பு, பெற்றுக்கொள்! (Ask, Believe, Receive)

இந்த ஈர்ப்பு விதியை எப்படிப் பயன்படுத்துறது? அதுக்கு இந்தப் புத்தகம் ஒரு மூணு படிநிலைகளைச் சொல்லுது. 

  1. முதல்ல, உங்களுக்கு என்ன வேணும்ங்கிறத பிரபஞ்சத்துக்கிட்ட தெளிவா 'கேட்கணும்'. 

  2. ரெண்டாவது, நீங்க கேட்ட விஷயம் உங்களுக்குக் கிடைச்சிடுச்சுன்னு முழுசா 'நம்பணும்'. அந்த ஆசை நிறைவேறினா நீங்க எவ்வளவு சந்தோஷமா இருப்பீங்களோ, அந்த உணர்வை இப்போதே நீங்க உணர ஆரம்பிக்கணும். 

  3. மூணாவது, நீங்க கேட்டதை 'பெற்றுக்கொள்வதற்கு' உங்களைத் தயாராக்கிக்கணும். அதாவது, அந்த நல்ல விஷயத்தை ஏத்துக்கிற மனநிலையில இருக்கணும். 

இது நிஜமாகவே வேலை செய்யுமா?

இந்தப் புத்தகத்தைப் படிச்சதும் எல்லாமே ஒரே நாள்ல மாறிடும்னு சொல்ல முடியாது. வெறும் நேர்மறை சிந்தனை மட்டும் வச்சுக்கிட்டு, எந்த முயற்சியும் செய்யாம இருந்தா ஒண்ணுமே நடக்காது. ஆனா, இந்த 'ரகசியம்' உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
மழைக்காலம் தொடங்கியாச்சு மக்களே: உங்க வீட்டு செல்லப் பிராணிகள் பத்திரம்!
The Secret Book

உங்க மேலயே உங்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையை மாற்றி, உங்களால முடியும்னு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும். உங்க எண்ணங்கள் சக்தி வாய்ந்ததுங்கிறதை உங்களுக்குப் புரிய வைக்கும். ஒரு விஷயத்தை அடையறதுக்கான முதல் படி, அதை அடைய முடியும்னு நம்புறதுதான். அந்த நம்பிக்கையை விதைக்கிற வேலையைத்தான் இந்தப் புத்தகம் செய்யுது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com