ராம நவமி வழிபாட்டில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள்!

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமியைக் கொண்டாடுவதற்கு பக்தர்கள் கடைபிடிக்கும் 10 விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Rama Navami
Rama Navamiimg credit - info2usite.wordpress.com
Published on

ராமரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையான ராம நவமி இந்தாண்டு ஏப்ரல் 6-ம்தேதி கொண்டாடப்படுகிறது. ராம நவமி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் பிறப்பைக் குறிக்கிறது. இது தீமையை நன்மை வென்றதையும் தர்மத்தை (நீதியை) நிறுவியதையும் நினைவு கூரும் பண்டிகையாகும்.

பக்தர்கள் ராம நவமி அன்று கோவில்களுக்குச் செல்கிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள், ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்டு, பஜனைகள் (பக்திப் பாடல்கள்) மற்றும் கீர்த்தனைகளைப் பாடுவது போன்ற பக்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ராமரின் பிறந்த இடமான அயோத்தியிலும், இந்தியா முழுவதும் உள்ள கோயில்களிலும் முக்கிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமியைக் கொண்டாடுவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். அவை என்னவென்று அறிந்துகொள்ளலாம்.

1. உங்கள் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் தொடங்குங்கள்:

ராம நவமி என்பது ஒரு புனிதமான கொண்டாட்டமாகும். எனவே இந்த நேரத்தில், உங்கள் வீடு சுத்தமாகவும், தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். அது பூஜை செய்வதற்கும், ராமரை வழிபடுவதற்கும் மிகவும் அவசியமாகும்.

2. காலையில் புனித நீராடுங்கள்:

ராமநவமி அன்று புனித நீராடுவதன் மூலம் அந்த நாளை தொடங்குங்கள். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து புனித நீராட வேண்டும். வீட்டிலோ அல்லது குளம், ஏரிகளில் நீராடலாம்.

3. உங்கள் வீட்டையும் பூஜை பலிபீடத்தையும் அலங்கரிக்கவும் :

ராமநவமிக்கு முன்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள பலிபீடத்தை சுத்தம் செய்து அங்கு ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அல்லது படத்தை வைத்து, அதை ஒளிரும் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கவும். மா இலைகளால் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு சிறிய கலசத்தை வைத்திருங்கள். மேலும், உங்கள் பலிபீடத்தில் ஒரு பஞ்சமுகி ஹனுமான் கவச் யந்திரத்தை வைக்கவும். இது வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் வெற்றியைக் கொண்டுவருகிறது.

4. நெறிமுறை உடையை அணியுங்கள்; கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும் :

வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற வெளிர் அல்லது பிரகாசமான வண்ணங்களை ராமநவமி அன்று மட்டுமில்லாது, நீங்கள் எந்த விரதம் அல்லது பூஜை சடங்கையும் கடைப்பிடிக்கும் நாளில் அணிய வேண்டும். அதேபோல் எந்தவொரு பூஜை செய்யும்போதும் கருப்பு நிறத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

5. விரதம் அனுசரிக்கவும் :

ராம பக்தர்கள் ராமரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த நாளில் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். விரத வகைகளில், அவர்களின் பசியின்மை திறனைப் பொறுத்து, நிர்ஜல மற்றும் பலஹர விரத வகைகளைத் தேர்வு செய்யலாம். அதாவது நாள்முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் அருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீராம நவமி: கர்ப்போத்ஸவம் முதல் ஜன்மோத்ஸவம் வரை!
Rama Navami

வயதானவர்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நன்று. விரதங்கள் தெய்வீகத்துடன் ஆழமாக இணைவதற்கும் அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.

6. பகவத் கீதை அல்லது ராமாயணத்தை ஓதுங்கள்; ராம மந்திரங்கள் மற்றும் பஜனைகளை உச்சரியுங்கள் :

ராம நவமி அன்று பகவத் கீதை அல்லது ராமாயணத்தை ஓதுவதில் நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில் அது உங்கள் ஆன்மாவை தூய்மைப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களை நீதி மற்றும் விடுதலையின் பாதைக்கு இட்டுச் செல்கிறது. ராம நவமி நாளில் தெய்வீக மகிழ்ச்சியையும் செழிப்பையும் உங்களுக்கு அருளும் புனித நூல்களைப் படியுங்கள். உங்கள் உள் மகிழ்ச்சியையும் அமைதியையும் உயர்த்த உதவும் புனித ராம மந்திரங்களை உச்சரியுங்கள். இது உங்கள் ஆன்மாவை உள்ளே பிரகாசிக்கச் செய்யும், மேலும் உங்கள் துக்கத்தையும் போக்க உதவும்.

மேலும் ராம மந்திரங்கள், கீர்த்தனைகள் மற்றும் பஜனைகளை உச்சரிக்கவும். "ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்" மற்றும் "ஓம் ஸ்ரீ ராமாய நம" என்று பக்தியுடன் சொல்லுங்கள். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும்; உங்கள் அடைபட்ட சக்கரங்களை சமநிலைப்படுத்தவும் உதவும்.

7. தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள் :

இந்த நாளில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்குவது போன்ற நற்செயல்களை செய்யுங்கள். அதுமட்டுமின்றி ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தானதர்மங்களை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
பாவங்களைக் கரைத்து புண்ணியங்களைப் பெருக்கும் ஸ்ரீராம நவமி வழிபாடு!
Rama Navami

8. மது, அசைவ உணவு, தகாத வார்த்தைகள் கூடாது:

ராமநவமி நாளில் மது, போதை பொருட்களை தொடவே கூடாது. அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவது பெரும் பாவமாகும்.

யாரிடமும் கோபம் காட்டாமல், கொட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல், பிறரை துன்புறுத்தாமல் அன்றைய தினம் முழுவதும் இறைவனை துதித்தபடி இருப்பது உங்களை புனிதமாக்கும்.

9. ஒரு மரத்தை நடவும் :

ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தை காட்டில் தான் கடந்தார். அதை நினைவுகூரும் வகையில் ஒரு மரம் நடலாம். மரங்கள் நமது சுற்றுச்சூழலை சுத்தமாகவும், பசுமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்றவும், நமது பூமியை அழகாகவும் மாற்றவும் உதவுகின்றன. எனவே, எந்த ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போதும், ஒரு மரத்தை நட்டு, இயற்கை அன்னை உங்களுக்காகச் செய்யும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.

10. சமூகக் கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் :

ராம நவமியை கோவில்களிலும் சமூகக் கூட்டங்களிலும் முழு மனதுடன் கொண்டாடுங்கள். அன்றைய தினம் கோவில்களுக்குச் செல்லுங்கள். ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்டு, பஜனைகள் (பக்திப் பாடல்கள்) மற்றும் கீர்த்தனைகளைப் பாடுவது போன்ற பக்தி நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

மக்கள் தெருக்களில் பஜனை, கீர்த்தனை மற்றும் ஒரு வகையான மந்திர உச்சாடனம், பாடல் மற்றும் நடனம் போன்றவற்றைச் செய்து அந்த தருணத்தை மேம்படுத்துகிறார்கள். ராம நவமி தினத்தின் தெய்வீக அதிர்வை எங்கும் உணர இதுபோன்ற குழு கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் அட்சய நவமி வழிபாடு!
Rama Navami

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com