20 நாட்கள் 250 கிலோ மீட்டர் - Varkari 'பண்டரிபுரம் புனித நடைப்பயணம்'

Pandharpur Yatra
Pandharpur Yatra
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட, ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களை வர்க்காரி (Varkari) என்கின்றனர். மராத்திய மொழியில் வர்க்காரி என்பதற்குத் தமிழில் புனித நடைப்பயணி என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் 'பண்டரிபுரம் பயணம்' எனும் 250 கிலோ மீட்டர் தொலைவிலான நடைபயணம் மேற்கொள்வதால், அவர்களுக்கு வர்க்காரி எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

வர்க்காரிகள் கிருஷ்ணர் எனப்படும் விட்டலரை வணங்குகின்றனர். ஞானேஸ்வர் (தியானேஸ்வர்), நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்றோர் வர்க்காரி குருக்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது. ஏகாதசியில் விரதமிருத்தல், மது, புகையிலை ஆகியவற்றைத் தவிர்த்தல், சைவ உணவு முறை போன்றவற்றை வர்க்காரி இயக்கத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.

ஆண்டுதோறும் மகாராட்டிராவின் பல்வேறு பகுதியிலிருந்து, விட்டலரின் வர்க்காரி நெறியைப் போற்றும் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், வைணவ சாதுக்களான ஞானேஸ்வர் மற்றும் துக்காராம் ஆகியோரின் சமாதிகள் உள்ள புனே நகரத்திற்கு அருகில் உள்ள ஆளந்தி மற்றும் தேகு பகுதிகளிலில் ஒன்று கூடுகின்றனர். விட்டலரின் பக்தர்களான இவர்கள் துளசி மணி மாலைகள் அணிந்து, சாதுக்களின் பாதுகைகளைத் தனித்தனி பல்லக்குகளில் வைத்து, பல்லக்கை மாட்டு வண்டிகளில் ஏற்றி வர்க்காரி மரபுப்படி, அங்கிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்டரிபுரத்திற்கு 20 நாட்கள் நடைபயணமாகச் செல்கின்றனர். இதனை, 'பண்டரிபுரம் புனித நடைப்பயணம்' என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: இறைவனின் இருப்பிடம் எது தெரியுமா?
Pandharpur Yatra

இந்தப் பயணத்தின் போது, விட்டலரின் பெருமைகளையும், ஞானேஸ்வர், துக்காராம், நாமதேவர் போன்ற விட்டலரின் அருள் பெற்ற ஞானிகளின் பெருமைகளையும் தம்புரா மற்றும் ஜால்ரா கட்டைகளை இசைத்து கொண்டே ஆடியும், பாடியும் செல்கின்றனர். பகவான் விட்டலர் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்தில் முடிவடையும் இந்தப் புனித நடைப்பயணம், ஆடி மாத ஏகாதசி அன்று பண்டரிபுரத்தில் நிறைவடைகிறது.

பயணத்தின் இறுதி நாளான ஆடி மாத ஏகாதசி அன்று பீமா ஆற்றில் குளித்து பக்தர்கள் பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்குச் சென்று விட்டலரை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. இதே போன்று, கார்த்திகை மாத ஏகாதசி நாளிற்கும் புனித நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com