4800 ஆண்டுகள் பழமையான அதிசயம்! காற்றில் மிதக்கும் நாராயண்பேட் அனந்த சயன சுவாமி கோயில் இரகசியம்!

தரையைத் தொடாமல் காற்றில் மிதக்கும் ஒரே கல் சாளகிராம பெருமாள் சிலையின் ஆன்மீக இரகசியங்கள்!
அனந்த சயன கோயில் - Anantha Sayana Swamy Temple
அனந்த சயன கோயில் - Anantha Sayana Swamy Temple
Updated on

தெலங்கானாவின் அமைதியான நகரமான நாராயண்பேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அனந்த சயன சுவாமி கோயில், பக்தி மற்றும் தெய்வீகக் கலைத்திறனின் காலத்தால் அழியாத கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. 4800 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படும் இந்தப் புனிதத் தலம், இந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.

இது தனது ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலையால் பக்தர்களை ஈர்க்கிறது. தெலங்கானாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக அனந்த சயன கோயில் கருதப்படுகிறது.

இக்கோயில் மகாபாரத காலத்தில் பாண்டவர்களின் பேரனான ஜனமேஜய மகாராஜாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வம், சயன கோலத்தில் உள்ள விஷ்ணு பகவான் ஆவார். இவர் ஸ்ரீ அனந்த சயன சுவாமி என்று அழைக்கப்படுகிறார். படைப்பிற்குப் பிறகான ஓய்வைக் குறிக்கும் வகையில், அவர் அனந்தன் (ஆதிசேஷன்) எனும் பிரபஞ்சப் பாம்பின் மீது சயனித்த நிலையில் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் உள்ள மூலவர் விக்கிரகம் ஒரே சாளக்கிராமக் கல்லால் ஆனது. சுவாமி விக்ரகம் பீடம் இல்லாமல் நிறுவப்பட்ட ஒரு மிதக்கும் தெய்வம் என்று நம்பப்படுகிறது. இது அந்தரிக்ஷ பிரதிஷ்டை (தொங்கும் அமைப்பு) என்று அழைக்கப்படுகிறது,

இங்குள்ள மிதக்கும் தெய்வம் ஸ்ரீ அனந்த சயன சுவாமி பற்றி ஒரு புராண கதை சொல்லப்படுகிறது. மகாபாரதப் போருக்குப் பிறகு, பரீட்சித் ராஜாவின் மகனும் பாண்டவர்களின் கொள்ளுப் பேரனுமான ஜனமேஜய மன்னர், தன் முன்னோர்களின் பாவங்களால், குறிப்பாக போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் வலியால் மிகவும் கலக்கமடைந்தார்.

அனந்த சயன கோயில் - Anantha Sayana Swamy Temple
அனந்த சயன கோயில் - Anantha Sayana Swamy TempleAI Image

தன் குடும்பத்திற்கு அமைதியையும் முக்தியையும் நாடி, தன் தந்தை பாம்புக்கடியால் இறந்ததற்குப் பாம்புகளே காரணம் என்று எண்ணி, அனைத்துப் பாம்புகளையும் அழிப்பதற்காக ஒரு பெரிய சர்ப்ப யாகத்தைத் தொடங்கினார்.

அச்சமயம், முனிவர்களும் ஞானிகளும் ஜனமேஜய மன்னனுக்கு, தவம் செய்து, பிரபஞ்சத்தின் பாதுகாவலரான விஷ்ணு பகவானின் ஆசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தினர். அவர்களின் அறிவுரையைப் பின்பற்றி, தெய்வீக அதிர்வுகளுக்குப் பெயர் பெற்றதும், அமைதியும் ஆன்மீக சக்தியும் நிறைந்ததுமான நாராயணபேட்டையை அவர் சென்றடைந்தார். அங்கே, அவர் விஷ்ணு பகவானை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டார்.

மன்னனின் நேர்மையையும் பக்தியையும் கண்டு மகிழ்ந்த விஷ்ணு பகவான், தரைக்கு மேலே மிதந்தபடி ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது சயனித்த அனந்தசயன ரூபத்தில் காட்சியளித்தார். ஜனமேஜயனை ஆசீர்வதித்து அவரை பாதுகாப்பதாகவும், அவரது வம்சத்தில் உள்ள போர் மற்றும் பழிவாங்கும் பாவங்களைக் கழுவுவதாகவும் பகவான் உறுதியளித்தார்.

இந்தப் புனிதத் தலத்தில் விஷ்ணு பகவானின் சிலை, தரையைத் தொடாமல் காற்றில் மிதப்பது என்ற பொருள்படும் அந்தரிக்ஷ பிரதிஷ்டை எனப்படும் ஓர் அரிய வடிவத்தில் நிறுவப்பட்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சாளகிராமச் சிலை, பூவுலக வரம்புகளைக் கடந்த தெய்வீக இருப்பைக் குறிக்கும் விதமாக, அடித்தளம் இல்லாமல் மிதப்பது போல் தோன்றி, இன்றுவரை பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
அனந்த சயன கோயில் - Anantha Sayana Swamy Temple

இங்குள்ள ஸ்ரீ அனந்த சயன சுவாமியை வழிபடுவதால் முன்னோர்களின் பாவங்களிலிருந்து (பித்ரு தோஷம்) நிவாரணம் கிடைக்கும் என்றும், பயம் நீங்கி ஆன்மீக அமைதி கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

இக்கோயிலில் விஷ்ணு பக்தர்களுக்கு மிக முக்கியமான நாளான வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விழாக்களை சிறப்புப் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி மற்றும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆகிய விழாக்களும் வெகு. விமர்சையாகக் கொண்டாடப் படுகன்றன. இந்த விழாக்கள் ஏராளமான பக்தர்களை ஈர்த்து, அமைதியான, பக்திமயமான சூழலை உருவாக்குகின்றன.

ஸ்ரீ அனந்த சயன சுவாமி கோயில், நித்தியத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒரு தெய்வீக யாத்திரைத் தலமாகும். ஹைதராபாத்தில் இருந்து 165 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பூரி ஜகன்னாதர் ஆலய ரகசியம்: சங்கிலியால் கட்டப்பட்ட ஆஞ்சநேயரும், 56 வகை பிரசாதமும்!
அனந்த சயன கோயில் - Anantha Sayana Swamy Temple
logo
Kalki Online
kalkionline.com