பில்லி, சூனியத்தை உணரும் பூனை; உங்கள் வீட்டுக்கு வந்து சொல்லும் உண்மை! பாருடா!

Cat coming home
Cat coming home
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

பொதுவாக நம் வீட்டிற்கு ஏதேனும் உயிரினங்கள் வருகிறது என்றால் அதன் மூலமாக அது நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறது என்று அர்த்தம். பூனைகளுக்கு பில்லி, சூன்யம் போன்ற தீய விஷயங்களை காணக் கூடிய ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. எனவே, பூனை ஒரு வீட்டிற்கு அடிக்கடி வருகிறது என்றால் அதன் பின் இருக்கும் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

நாம் ஒரு இடத்திற்கு சென்று வாழ வேண்டும் என்றால் அந்த இடத்தில் அடிப்படையான வசதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தை தேர்வு செய்து தான் நாம் வாழ விரும்புவோம். அந்த இடம் நமக்கு முன்னேற்றத்தையும், மனநிம்மதியையும் அளிக்க வேண்டும். அப்படி அமையும் இடத்தை நாம் அதிர்ஷ்டமாக கருதுவோம். அப்படியில்லை என்றால் அந்த இடத்தில் பில்லி, சூன்யம் போன்ற ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும். இப்படியிருக்கையில், அந்த வீட்டிற்கு அடிக்கடி பூனை வந்தால் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும்.

ஒரு வீட்டிற்கு பூனை வருகிறது என்றால் அவர்கள் உணவு பச்சம் இல்லாமல் நல்ல செழிப்பாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம். உணவுக்கு பஞ்சம் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்கள் வீட்டிற்கு பூனை மிச்ச உணவிற்காக வரும். அப்படி பஞ்சம் என்பது இல்லாமல் பூனைக்கு உணவு கிடைக்கும் போது அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பூனைப்போன்ற உயிரினம் ஒரு இடத்திற்கு செல்கிறது என்றால், அந்த இடம் நிம்மதியாகவும், பாதுகாப்பாகாவும் இருக்கிறதா? என்பதை பார்த்து விட்டே அங்கு செல்லும். எனவே, உங்கள் வீட்டிற்கு பூனை வருகிறது என்றால் அந்த இடம் வாழ்வதற்கு ஏற்ற நிம்மதியான, பாதுகாப்பான இடமாகவே கருதப்படுகிறது.

ஒரு வீட்டில் எந்தவித பில்லி, சூன்யம், ஏவல் போன்ற விஷயங்கள் இல்லை என்றால் அந்த வீட்டிற்கு அடிக்கடி பூனைகள் வரும். பூனைகளுக்கு இதுப்போன்ற எதிர்மறையான சக்திகளை உணரக்கூடிய ஆற்றல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு வீட்டில் தீயசக்திகள் இருந்தால், அந்த வீட்டிற்கு பூனைகள் கண்டிப்பாக வராது. எனவே, உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால், அந்த வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருப்பதாக அர்த்தம்.

பூனைகள் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டுமே சென்று குட்டிப் போடும். சில வீடுகள் நல்ல காற்றோட்டத்துடன், நல்ல நேர்மறை ஆற்றல்களை கொண்டு இருக்கும். அதுப்போன்ற இடத்தை தேர்வு செய்தே பூனை குட்டிப்போடும்.

இதையும் படியுங்கள்:
சுவையில்லா உணவா? அப்புறம் எதுக்கு சாப்பிடுறீங்க? அறுசுவையின் மர்மங்கள்!
Cat coming home

அப்படி ஒரு வீட்டில் பூனை குட்டிப்போட்டால் அந்த வீட்டில் உள்ள தம்பதியினருக்கு விரைவில் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அர்த்தம். சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் நமக்கு வரக்கூடிய ஆபத்தையும், நமக்கு சொல்ல நினைக்கும் செய்திகளையும் பூனைகள் மூலம் சொல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

நம் வீட்டிற்கு வரும் உயிரினங்களுக்கு உணவையும், தண்ணீரையும் நாம் தானமாகக் கொடுக்கும் போது நல்ல புண்ணியம் கிடைக்கிறது. சில வீட்டிற்கு மட்டும் தான் பறவைகள், மாடுகள் போன்ற உயிரினங்கள் உணவைத் தேடிவரும். அதற்கு காரணம் அந்த வீட்டில் நல்ல மனிதர்களும், நேர்மறை ஆற்றலும் அதிகமாக இருப்பதாக அர்த்தம். அப்படி அந்த உயிரினங்களுக்கு தானம் வழங்கும் போது தொழில், உத்தியோகம், கல்வியில் மென்மேலும் வளர்ச்சியடைந்து நல்ல நிலைக்கு செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஆண்கள் கவனத்திற்கு! இந்த ஒரு விதையால் 40% முடி வளர்ச்சி உறுதி! எப்படி தெரியுமா?
Cat coming home
logo
Kalki Online
kalkionline.com