பெருமாள் கோயிலில் தலையில் வைக்கும் சடாரியின் மகிமை தெரியுமா?

Do you know the glory of the satari placed on the head in the Perumal temple?
Do you know the glory of the satari placed on the head in the Perumal temple?

பெருமாள் கோயில் என்றால் ஏலக்காய்  மணக்கும், துளசி தீர்த்தமும், சிரம் தாழ்த்திப் பெறும் சடாரி ஆசியும்தான் நினைவில் நிற்கும். எதற்காக ஏன் இந்த சடாரி தலைமேல் வைக்கப்படுகிறது ? இதன் தத்துவம் என்ன தெரியுமா?

பெருமாளை சேவித்த பிறகு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய  தலையில் வைக்கும்  சடாரி என்ற மகுடத்தை  கவனித்து பார்த்தால் அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதிப்புக்குரிய திருமுடியின்  மீது திருவடிகள் எப்படி? அதிலும் பெருமாள் ஆலயங்களில்? அதன் தாத்பரியம் மற்றும் காரணத்தை அறிவோம்.

ஒரு சமயம் தாம் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் முன் தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை சந்திக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு பாம்பு படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன் வழக்கத்துக்கு மாறாக தனது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளையே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. பாதுகைகள் தங்களுக்கு சமமாக இங்கு இருப்பதா? என எண்ணிய அவை பாதுகைகளை பார்த்து கர்வத்துடன், “கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் நீ எப்படி இங்கு இருக்கலாம்? " என்று கேட்டன.

"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள். அவற்றைக் காதில் வாங்காமல், "பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான், கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும் சக்கரமும். எனவே, ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்திற்கு போய்விடுங்கள்" என்று கோபத்துடன் சொன்னது கிரீடம்.

இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படி சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள். தவிர, உங்களை தழுவி தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்" என்று பதிலுக்கு வாதித்தனர்.

கிரீடத்துடன் சங்கு, சக்கரமும் சேர்ந்து கொண்டதால் தனித்து நின்ற பாதுகைகளால் ஏளனப் பேச்சை தாங்கிக்கொள்ள முடியாமல் பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கிக் காத்து நின்றன. பகவான் வந்ததும் அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னிதியில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல் கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு புனிதமான உங்களை தூற்றியதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும்.

தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீ ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும் சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரசப் பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழல் ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களை பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார்.

இதையும் படியுங்கள்:
சம்பளமாகக் கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்துமிக்க காய் எது தெரியுமா?
Do you know the glory of the satari placed on the head in the Perumal temple?

அதன்படியே ஸ்ரீராமாவதாரத்தில் அவரது பாதுகைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்ததை அறிவோம்.

திருமுடி ஒருவகையில் உயர்ந்தது எனில், பெருமாளின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. இன்னும் சொல்லபோனால் பாதம் பற்றி சரணாகதி அடையும் விதமாக நமது பார்வை பெருமாளின் திருப்பாதங்களையே முதலில் நாடும்.

பாதச்சுவடுகள் தாங்கிய சடாரி எனும் மகுடத்தை நம் தலையில் வைத்துக் கொள்ளும்போது நம்முடைய, ‘நான்’ என்று ஆணவம், அகங்காரம் அழிய வேண்டும் என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com