வரலட்சுமி விரதம் தோன்றிய வரலாறு தெரியுமா?

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்https://www.herzindagi.com
Published on

விரதங்களுள் சிறந்தது வரலட்சுமி விரதம் என்பர். நாளை வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட உள்ளது. குடும்பத்தின் வறுமை ஒழிந்து செல்வம் பெருகவும், கணவரின் ஆயுள் நலனைப் பெருக்கவும் சுமங்கலி பெண்களால் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாளை (16.08.2024) வரலட்சுமி விரத தினமாகும். வரலட்சுமி விரத தினம் தோன்றிய வரலாறு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். இவள்  தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்களாகக் கருதாமல் இறை அம்சமாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது குணம் மற்றும் நடத்தை தாயார் மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. சாருமதியின் கனவில் வரலட்சுமியாகத் தோன்றி அருளபுரிந்த மகாலட்சுமி தாயார், ‘என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளியதோடு, அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விதத்தையும் எடுத்துரைத்தாள். மேலும், அந்த விரத மகிமையை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறும்படி அருளினாள்.

அதன்படியே செய்து தாயார் மகாலட்சுமியின் அருளைப் பெற்றாள் சாருமதி. அதைக் கண்ட மற்ற பெண்களும் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் அந்த நாடே சுபிட்சம் அடையத் தொடங்கியது.

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாகத் திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்தத் தம்பதியரின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். காலம் கடந்தது.

இதையும் படியுங்கள்:
வயது முதிர்வை தள்ளிப்போடும் களாக்காயின் பயன்கள்!
வரலட்சுமி விரதம்

ஒரு சமயம் தாயார் மகாலட்சுமி வயதான சுமங்கலிப் பெண்ணாக வேடம் தரித்து சுரசந்திரிக்காவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாகச் சொல்லி அதை கடைபிடிக்கும்படி கூறினார். மகளைப் பிரிந்த ஏக்கத்திலிருந்த சுரசந்திரிகா தாயார் மகாலட்சுமியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். அப்படி விரட்டப்பட்ட மகாலட்சுமி தாயாரை அரசியின் மகள் சியாமாபாலா சமாதானப்படுத்தி, அவரிடமிருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாகக் கேட்டு உபதேசம் பெற்று பக்தியுடன் அந்த விரதத்தை கடைபிடித்தாள்.

அந்த விரத மகிமையால் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள். ஆனால், மகாலக்ஷ்மியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர் வறுமையில் வாடத் தொடங்கினர். விவரம் அறிந்த சியாமாபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால், அவர்கள் செய்த தீவினையால் அது மொத்தமும் கரியாகிவிட்டது. இதையடுத்து சியாமபாலா வரலட்சுமி விரத மகிமையைப் பற்றி சொல்லி, அதனை மேற்கொள்ளும்படி தனது தாயாரிடம் கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் அனைத்தும் மீண்டும் கிடைத்ததாக வரலட்சுமி விரதம் தோன்றிய கதை கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com