பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உலகோர்க்கு உணர்த்தும் அருளுரைகள்!

Sri Krishna
Sri Krishna
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on

* எந்த புருஷன் எல்லா ஆசைகள், விருப்பம், அகங்காரம் முதலியவற்றை விலக்கி, தனது  கடமைகளை புரிகிறானோ அவனே மன சாந்தி அடைகின்றான்.

* உண்மையில் ஒரு கண நேரமாவது எவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனது சுபாவ குணங்களால் கட்டுப்படுத்தப்பட்டு கர்மத்தைச் செய்ய வேண்டியவனாகிறான்.

* அன்னத்தால் உயிர்கள் உண்டாகின்றன; அன்னம் மழையால் உண்டாகிறது; மழை யக்ஞத்தால் பெய்கின்றது; யக்ஞம் கர்மத்தால் ஆகின்றது.

* தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும்பொழுது நல்லோர்களைக் காப்பதற்காகவும் கொடியவர்களை நாசம் செய்து தர்மத்திற்கு புத்தியிர் அளித்து பரிபாலிக்க ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன்.

* ஆசையை விலக்கி, தனது மனதை வசப்படுத்தி எல்லாப் பொருட்களையும் விட்டுவிட்டு சரீரத்தால் மட்டுமே கர்மம் செய்பவன் தனது கர்மத்தால் எவ்விதமான தோஷத்தையும் அடைய மாட்டான்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே கருடனுக்கு தனி கோயில் அமைந்த திருத்தலம் தெரியுமா?
Sri Krishna

* சிரத்தையுடன் கூடியவன், கடவுளை சரண் புகுந்தவன், புலனை அடக்கியவன் போன்ற இவ்வித புருஷன் ஞானமடைகின்றான். ஞானம் பெற்றவுடன் பரம சாந்தி நிலைய எய்துகிறான்.

* கர்மங்களை பிரம்மத்தினிடம் அர்ப்பணம் செய்து, பற்றை ஒழித்து தனது கடமையைச் செய்பவன் தாமரை இலை மேல் நீர்த்துளி ஒட்டாமல் இருப்பது போல் பாபத்தினால் தீண்டப்பட மாட்டான்.

* சமநிலை பெற்ற மனத்தோன் இவ்வுடலில் இருந்த வண்ணமே சம்சாரத்தை வென்றவன் ஆகிறான். பிரம்மம் களங்கமற்ற சமநிலை உடையது. ஆதலால் அவன் துன்பத்தில் நிலைபெறுகிறான்.

* தனது சொரூபத்தை உணர்ந்து காமத்தையும் குரோதத்தையும் வென்று மனத்தை வசப்படுத்திய முனிவர் பிரம்ம நிர்வாண சுகத்தால் சூழப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சாய்ந்த லிங்கத்தை நேராக நிமிர்த்திய குங்கிலியகலய நாயனாரின் சிவ பக்தி!
Sri Krishna

* என்னை எல்லாவிடத்திலும், இப்பிரபஞ்சம் முழுவதையும் என்னிடத்தில் எவன் பார்க்கிறானோ அவன் என் பார்வையிலிருந்து விலகுவதில்லை. நானும் அவனது பார்வையில் இருந்து மறைவதில்லை.

* எவன் ஒருவன் என்னை எந்த ரூபத்திலும் தியானிக்கின்றானோ, தொழுகின்றானோ அவனுக்கு அந்தந்த ரூபத்தில் நான் காட்சியளிக்கின்றேன்.

* எனது யோக மாயையால் மூடப்பட்டிருக்கும் நான் எல்லோருக்கும் புலப்பட மாட்டேன். பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த மூட உலகம் நன்கு அறியாது.

* இறுதிக் காலத்திலே என்னை நினைத்தவண்ணமே தனது தேகத்தை துறப்பவன் எனது சொரூபத்தை அடைகின்றான். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

* மனத்தை வென்று, பூர்ண சாந்தி அடைந்தவனுடைய ஆத்மா சீதோஷ்ணம், சுக, துக்க, மான, அவமானம் முதலியவற்றில் ஒரேவித மனோபாவத்துடன் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com