மகாசிவராத்திரி: ருத்ராபிஷேக பூஜை செய்வது எப்படி?

mahashivratri rudrabhishek puja
mahashivratri rudrabhishek pujaimage credit - GaneshaSpeaks
Published on

ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில் மகாசிவராத்திரி மிக முக்கியமானது சிறப்பு வாய்ந்தது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் மகாசிவராத்திரி மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் வரும் மார்ச் 26-ம்தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்குப் பல பெயர்கள் உண்டு. சிலர் அவரை மகாதேவ், ஷங்கர், போலே நாத், சிவா, பாபா என்றும் அழைக்கிறார்கள். ருத்ரா என்பது சிவபெருமானின் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும்.

ருத்ரா என்ற வார்த்தை வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ருத்ர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் அழிவு நடனம். இது சிவனின் கடுமையான அம்சத்தை வெளிப்படுத்தும் நடன வடிவம். சிவன் ஏன் ருத்ரா என்று அழைக்கப்படுகிறார் என்பதற்கு பல கதைகள் உள்ளன. மகாசிவராத்திரி அன்று, செய்ய வேண்டிய முக்கியமான சடங்குகளில் ருத்ராபிஷேகமும் ஒன்றாகும். பக்தர்கள் ருத்ராபிஷேகத்தை சரியான முறையிலும், சிவபெருமானிடம் தூய்மையான பக்தியுடனும் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எழுபது அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயக் கோயில்!
mahashivratri rudrabhishek puja

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு செய்யும் ருத்ராபிஷேக பூஜை ஒரு உன்னதமான சடங்காகும். இது இந்து மதத்தின் தூய்மையான சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ருத்ராபிஷேக பூஜை என்பது சிவபெருமானுக்கு பிடித்தமான மலர்கள் மற்றும் புனித பூஜை பொருட்களை கொண்டு புனித நீராடுவதன் மூலம் செய்யப்படுகிறது.

ருத்ராபிஷேக பூஜைக்கு தேவையான பொருட்கள்

பல வண்ண மலர்கள், தூபக் குச்சிகள், நெய், தயிர், தேன், சுத்தமான பசும்பால், பஞ்சாமிர்தம், பன்னீர், இனிப்புகள், கங்கை நீர், கற்பூரம், பாக்கு, லவங்கம், ஏலக்காய், வில்வ இலை, விபூதி

ருத்ராபிஷேகம் செய்வது எப்படி :

* மஹாசிவராத்திரி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்து, மங்களகரமான நேரத்தில் பூஜை செய்யுங்கள். இரவின் நான்கு காலாண்டுகளிலும் பூஜை செய்யப்படுகிறது; ஆனால் நிஷிதா காலம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. முதல் கால பூஜை இரவு 7:30 மணிக்கும், இரண்டாம் கால பூஜை இரவு 10:30 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:00 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை, 4:30 மணிக்கும் செய்யப்படுகிறது.

* ருத்ராபிஷேக பூஜைக்கு சுத்தமான ஆடைகளை அணிந்து, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தியானியுங்கள்.

* கிழக்கு பக்கமாக ஒரு ஆசனத்தை போட்டு அமர்ந்துகொள்ளவும். ஒரு மேடையை சுத்தமான இடத்தில் வைத்து அதன் மேல் ஒரு வெள்ளைத் துணியை விரிக்கவும்.

இதையும் படியுங்கள்:
கண்விழித்து பூஜித்தால் கைமேல் பலன் தரும் சிவராத்திரி விரதம்!
mahashivratri rudrabhishek puja

* சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலையை மேடையில் வைக்கவும்.

* பூஜையைத் தொடங்கும் முன் விநாயகப் பெருமான் மற்றும் உங்கள் குல தெய்வத்தின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

* ருத்ராபிஷேகம் செய்து முடிக்கும் வரை 'ஓம் நமசிவாய' என்று மனமுருகி சொல்லிய படியே இருக்க வேண்டும். மற்றும் மஹா மிருத்யுஞ்சய் மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

* முதலில், கங்கை நீர், பசும்பால், கரும்புச்சாறு, தயிர் மற்றும் பிற பிரசாதங்களைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். பிறகு, நெய் தீபம் ஏற்றி சிவபெருமானையும் பார்வதி தேவியையும் முறையான சடங்குகளுடன் வழிபடவும்.

* சிவபெருமானின் மீது சந்தனத்தை தடவி, வில்வ இலைகள், ஊமத்தம் பூ, பூக்கள், இனிப்புகள் மற்றும் பிற பிரசாதங்களை சமர்ப்பிக்கவும். மேலும், பார்வதி தேவிக்கு குங்குமம் தடவி பக்தியுடன் வழிபடவும்.

* சிவபெருமானுக்கு ஆரத்தி காட்டி, அவருக்குப் பிடித்தமான மந்திரங்களை உச்சரிக்கவும். இது ஆன்மீக ஆற்றலை உயர்த்தி உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.

ருத்ராபிஷேக பூஜை வகைகள் மற்றும் பலன்கள் :

ஜலாபிஷேகம் சிவபெருமானுக்கு பொதுவாக செய்யப்படும் பூஜையாகும்.

பால் அபிஷேகம் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படுகிறது.

தேன் அபிஷேகம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகள் மற்றும் துரதிர்ஷ்டங்களிலிருந்து விடுபட உதவுவதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'சிவனின் மகா இரவு': மகாசிவராத்திரி அன்று நாம் ஏன் தூங்கக்கூடாது?
mahashivratri rudrabhishek puja

பஞ்சாமிர்த அபிஷேகம் செல்வத்தையும் செழிப்பையும் ஆசீர்வாதமாக வழங்குவதாக நம்பப்படுகிறது.

நெய் அபிஷேகம் நோய் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை ஆசீர்வாதமாக வழங்குவதாக நம்பப்படுகிறது.

தயிர் அபிஷேகம் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தையை ஆசீர்வாதமாக வழங்குவதாக நம்பப்படுகிறது.

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை தியானத்துடன் பூஜையைத் தொடங்க வேண்டும். சிவலிங்கத்தின் முன் தியானம் செய்ய வேண்டும். ஒரு கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தையும் வழிபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com